அன்வார்: சூதாட்டக்கூடம் தொடர்பான பொய்ச் செய்திகள் பரப்புவோரைச் சிறையில் தள்ளவும்

புத்ரஜெயா: ஜோகூரின் ஃபார்ஸ்ட் சிட்டியில் சூதாட்டக்கூட உரிமத்துக்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளதாகப் பொய்ச் செய்தி பரப்புவோர், சிறைக்கு அனுப்பப்பட வேண்டும் என்று மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

“மாமன்னர் விருப்பம் கொண்டுள்ளதாகக் கூறப்படும் ஃபாரஸ்ட் சிட்டி தொடர்பில் இதுபோன்றதொரு திட்டத்தைப் பற்றியோ யாரேனும் இதுபோன்ற திட்டங்களை முன்மொழிந்ததாகவோ நான் இதுவரை கேள்விப்படவில்லை,” என்றார் அவர்.

“இதைப் பற்றி ஒருமுறைகூட மாமன்னர் எதுவும் கூறியதில்லை,” என்று தேசிய அளவிலான தொழிலாளர் தினக் கொண்டாட்டங்களை மே 1ஆம் தேதி துவங்கிவைத்தபோது திரு அன்வார் பேசினார்.

இந்தப் பேச்சு எவ்வாறு வந்தது என்று அவர் கேள்வி எழுப்பியதுடன் அரசுக்கு எதிராகத் தீங்கிழைக்கும் வதந்திகள் எழக் காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.

“சுங்கை பூலோவில் உள்ள என் பழைய சிறை அறையில் (எனக்குப் பதிலாக) இருக்க வேண்டியவர்கள் இவர்கள்,” என்றார் அவர்.

ஜோகூர் மாநிலத்தில் உள்ள ஃபாரஸ்ட் சிட்டி பகுதியில் சூதாட்டக் கூடம் திறப்பது குறித்து தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பெர்சத்து கட்சியின் தகவல் குழு உறுப்பினர் பட்ருல் ஹிஷாம் ஷஹாரின் பதிவிட்டார்.

மலேசிய மாமன்னருக்கு எதிராக அவதூறு பரப்பியது தொடர்பாகத் தன் மீது குற்றம் சாட்டப்பட்டதை அடுத்து, ஏப்ரல் 30ஆம் தேதி ஜோகூர் பாரு அமர்வுகள் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை கோரினார் பட்ருல் ஹிஷாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!