தன் படையாலேயே கொல்லப்பட்ட ஐந்து இஸ்ரேல் ராணுவ வீரர்கள்

ஜெருசலம்: இஸ்ரேல் பீரங்கி வாகனம் சுட்டதில் அந்நாட்டு ராணுவத்தினர் ஐவர் கொல்லப்பட்டனர்; எழுவர் காயமுற்றனர்.

புதன்கிழமை (மே 15) இரவு உள்ளூர் நேரப்படி 7 மணியளவில், காஸாவின் வடபகுதியிலுள்ள ஜபலியா அகதிகள் முகாம்மீது இஸ்ரேல் ராணுவம் தவறுதலாக பீரங்கித் தாக்குதல் நடத்தியதே இந்த உயிருடற்சேதத்திற்குக் காரணம் என்று வியாழக்கிழமை ஓர் அறிக்கை மூலமாக இஸ்ரேல் தற்காப்புப் படை தெரிவித்தது.

இஸ்ரேல் படைப்பிரிவின் துணைத் தளபதி ஒருவர் இருந்த வீட்டை நோக்கி இரண்டு பீரங்கிகள் மூலம் குண்டுவீசித் தாக்கியதாகத் தெரிவிக்கப்பட்டது.

அவ்வீட்டின் சன்னல் வழியாக ஒரு துப்பாக்கி நீட்டிக்கொண்டிருந்ததைக் கண்டதால் அதனை நோக்கி இஸ்ரேல் படையினர் பீரங்கியைக் கொண்டு குண்டுவீசியதாகக் கூறப்பட்டது.

அங்கிருந்தவர்களைப் பாலஸ்தீனப் போராளிகள் என்று இஸ்ரேல் படையினர் தவறாக நினைத்தது ஏன் என்பது குறித்து இஸ்ரேல் ராணுவம் விசாரித்து வருகிறது.

கடந்த ஆண்டு அக்டோபரிலிருந்து இஸ்ரேல் - ஹமாஸ் பூசலில் நூற்றுக்கணக்கான இஸ்ரேல் படையினர் கொல்லப்பட்டுவிட்டனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!