தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

டாஸ்மாக் முறைகேடு: குற்றஞ்சாட்டப்பட்ட இருவர் மீது நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் தடை

1 mins read
c68b2d57-182c-45ca-aa6a-1486e837a76e
டாஸ்மாக் மதுக்கடை. - கோப்புப்படம்: ஊடகம்

சென்னை: தமிழக அரசுக்குச் சொந்தமான டாஸ்​மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோடிக்கு முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில், இந்த முறைகேட்டில் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் திரைப்பட தயாரிப்​பாள​ரான ஆகாஷ் பாஸ்​கரன், தொழில​திபர் விக்​ரம் ரவீந்​திரன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

இது அமலாக்கத்துறைக்கு பின்னடைவை ஏற்படுத்தி இருப்பதாகக் கருதப்படுகிறது.

அண்மையில், மேற்குறிப்பிட்டவர்களின் வீடு​கள், அலு​வல​கங்​களில் அமலாக்​கத்​துறையினர் அதிரடி சோதனை மேற்​கொண்டு, பல்வேறு முக்கியமான ஆவணங்களைக் கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, அமலாக்​கத்​துறை​யின் இந்த நடவடிக்​கைக்கு எதி​ராக இருவரும் உயர் நீதிமன்றத்தை அணுகினர்.

இவர்களின் மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு, வீடு, அலு​வல​கங்​களுக்கு சீல் வைக்​கும் அதி​காரம் அமலாக்​கத்​துறைக்கு உள்​ளதா எனக் கேள்வி எழுப்பினர்.

மேலும், டாஸ்​மாக் முறை​கேடு தொடர்​பாக மனு​தா​ரர்​களுக்கு எதி​ராக எந்த ஆதா​ரங்​களும் அமலாக்​கத்​துறை​யின​ரால் தாக்​கல் செய்​யப்​பட​வில்​லை என்றும் சுட்டிக்காட்டினர்.

“எனவே, ஆதா​ரமின்றி மனுதாரர்​களின் வீடு​கள், அலு​வல​கங்​களில் சோதனை நடத்​த​வும் மின்​னணு சாதனங்​களை பறி​முதல் செய்​ய​வும் அமலாக்​கத்​துறைக்கு அதி​காரம் இல்​லை.

“இந்த சோதனை​யின் அடிப்​படை​யில், மனு​தா​ரர்​களுக்கு எதி​ராக அமலாக்​கத்​துறை மேல் நடவடிக்கை எடுக்க இடைக்​கால தடை விதிக்​கிறோம்,” என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

குறிப்புச் சொற்கள்