இந்தியா உதவியுடன் மீன்பிடித் துறைமுகத்தை மேம்படுத்த இலங்கை ஒப்புதல்

1 mins read
fff9ab0f-373a-4e0d-acc3-090513155bf1
இலங்கை, யாழ்ப்பாணத்தில் உள்ள பருத்தித்துறை மீன்பிடித் துறைமுகத்தை இந்தியாவின் உதவியுடன் மேம்படுத்த இலங்கை அரசு ஒப்புதல் அளித்துள்ளது. - கோப்புப்படம்: ஊடகம்

ராமேசுவரம்: இந்திய அரசின் உதவியுடன் யாழ்ப்பாணத்தில் உள்ள பருத்தித்துறை மீன்பிடித் துறைமுகத்தை மேம்படுத்த இலங்கை அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

பருத்​தித்​துறை மீன்​பிடித் துறை​முகம், இலங்​கை​யின் பிற பகு​தி​களை இணைக்​கும் முக்​கிய இடமாக உள்​ளது. இந்​தி​யா​வுக்கு மிக அரு​கில், ராமேசுவரம் மற்​றும் வேதா​ரண்​யத்​திலிருந்து 40 கடல்மைல் தொலை​வில் அது உள்​ளது.

இலங்கையில் நடந்த உள்​நாட்​டுப் போரின்​போது விடு​தலைப் புலிகளின் கப்​பல் படையை வீழ்த்​து​வதற்​காக, அந்​நாட்டு ராணுவம் நடத்​திய தாக்​குதல்​களில் பருத்​தித்​துறை துறைமுகம் சேதமடைந்​தது. 1995 ஆம் ஆண்டில் விடு​தலைப் புலிகளிடம் இருந்து இந்தத் துறைமுகத்தை இலங்கை ராணுவம் கைப்பற்றியது.

முன்னதாக, இலங்​கை​யின் வடமாநிலப் பகு​தி​யில் கடல் அட்டை பண்ணை வளர்ப்​பில் கவனம் செலுத்தி வரும் சீனா, இந்​தி​யா​வுக்கு மிக அரு​கில் உள்ள இந்தத் துறைமுகத்தை மேம்படுத்தத் தீவிரம் காட்​டியது.

ஆனால், இலங்கை அமைச்​சரவை பருத்​தித்​துறை மீன்பிடித் துறை​முகத்தை மேம்​படுத்தும் பணியை மேற்கொள்ள இந்​திய அரசுக்கே ஒப்​புதல் அளித்தது.

இந்த ​நிலை​யில், பருத்​தித்​துறை மீன்​பிடித் துறை​முகத்​தின் மேம்​பாட்டுத் திட்​டம் குறித்து ஆய்வு மேற்கொள்ள இந்​தி​யா​வின் கடலோரப் பொறி​யியல் நிறு​வனத்​தினர் யாழ்ப்​பாணம் சென்​றுள்​ளனர்.

இந்​த ஆய்வுக் குழு​வினர் யாழ்ப்​பாணத்​தில் உள்ள வட மாகாண ஆளுநர் மாளி​கை​யில், ஆளுநர் வேத​நாயகன் தலை​மை​யில் நடை​பெற்ற, பருத்தித்​துறை மீன்​பிடித் துறைமுகத்தின் மேம்​பாட்டுப் பணி​களுக்​கான கலந்​துரை​யாடல் கூட்​டத்​தில் கலந்துகொண்​டனர். இந்​திய துணைத் தூதர் சாய் முரளி​யும் இதில் பங்​கேற்​றார். 

குறிப்புச் சொற்கள்
யாழ்ப்பாணம்பருத்தித்துறைஇலங்கை

தொடர்புடைய செய்திகள்