தென்னிந்திய மாநிலங்களுக்கு இடையிலான ஆம்னி பேருந்துகள் ரத்து

2 mins read
ff8956c6-b9d9-4873-953f-b6ec118b2c89
மாநிலத்​துக்​குள் மட்​டுமே பேருந்​துகள் இயக்​கப்​படும் என ஆம்னி பேருந்து உரிமை​யாளர்​கள் தெரி​வித்​துள்ளனர். - படம்: தமிழக ஊடகம்

சென்னை: தென்னிந்திய மாநிலங்களுக்கு இடையிலான ஆம்னி பேருந்து சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி மாநிலங்களுக்கு இடையிலான ஆம்னி பேருந்து சேவை கடந்த இருநாள்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இருந்து கடந்த 7ஆம் தேதி கேரளா​வுக்குச் சென்ற 30க்​கும் மேற்​பட்ட ஆம்னி பேருந்​துகளை அம்​மாநில போக்​கு​வரத்துத் துறை சிறைபிடித்து ரூ.70 லட்​சத்​துக்​கும் மேல் அபராதம் விதித்​தது.

இதே​போல், கடந்த ஏழு நாள்களாகக் கர்​நாடகப் போக்​கு​வரத்துத் துறை​யும் தமிழக பதிவெண் கொண்ட 60க்​கும் மேற்​பட்ட ஆம்னி பேருந்​துகளைத் தடுத்து ஒவ்​வொரு பேருந்​துக்​கும் ரூ. 2.20 லட்​சம் வரை அபராதம் விதித்​தது.

இதுகுறித்து பேருந்து உரிமை​யாளர்​கள் கேட்​ட​போது, “2021ஆம் ஆண்டு மத்​திய அரசால் உரு​வாக்​கப்​பட்ட ‘ஆல் இந்​தியா டூரிஸ்ட் பெர்​மிட்​’ படி தமிழகத்​தில் அண்டை மாநிலப் பேருந்​துகளுக்கு சாலை வரி வசூலிக்​கப்​படு​கிறது. எனவே, நாங்​களும் வசூலிக்​கிறோம்,” என கேரள, கர்​நாடக போக்​கு​வரத்​துறை​யினர் தெரி​வித்​தனர்.

இந்​நிலை​யில், தமிழ்​நாடு, கேரளா, கர்​நாட​கா, புதுச்​சேரி இடையே இயக்​கப்​பட்டு வரும் ஆம்னி பேருந்​துகள் இயக்​கப்​ப​டாது என்று அந்​தந்த மாநில ஆம்னி பேருந்​துகளின் உரிமை​யாளர்​கள் சங்​கங்கள் கூட்​டாக அறி​வித்​துள்​ளன.

“மாநிலங்​களுக்கு இடையே இயக்​கப்​படும் ஆம்னி பேருந்​துகளுக்கு ஒவ்வொரு காலாண்​டும் தமிழக சாலை​வரி ரூ.1,50,000, ‘ஆல் இந்​தியா டூரிஸ்ட் பெர்​மிட்’ சாலை வரி ரூ.90,000, கேரளா, கர்​நாடகா சாலை வரி ரூ.2 லட்​சம் என மொத்​தம் ரூ.4.50 லட்​சம் செலுத்தி பேருந்​துகளை இயக்க முடி​யாத சூழ்​நிலைக்கு தள்​ளப்​பட்​டுள்​ளோம்,” என்று அந்தச் சங்கங்களைச் சேர்ந்தோர் கூறினர்.

இதனிடையே, தமிழக போக்​கு​வரத்துத் துறை அமைச்​சர் சிவசங்​கரை ஆம்னி பேருந்து உரிமை​யாளர்​கள் திங்கட்கிழமை (நவம்பர் 10) சந்​தித்து கோரிக்​கைகளை முன்​வைத்​தனர்.

இதுகுறித்து அதி​காரி​களு​டன் கலந்து ஆலோ​சிப்​ப​தாக அமைச்​சர் தெரி​வித்​தார். இந்த பிரச்​சினைக்குத் தீர்வு எட்​டப்​ப​டாத நிலை​யில், அரசுடன் பேச்​சு​வார்த்தை தொடர்​வ​தால் இனி மாநிலங்​களுக்கு இடையே ஆம்னி பேருந்​துகள் இயக்​கப்​ப​டாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

மாநிலத்​துக்​குள் மட்​டுமே பேருந்​துகள் இயக்​கப்​படும் என ஆம்னி பேருந்து உரிமை​யாளர்​கள் தெரி​வித்​தனர்.

இந்நிலையில், மாநிலங்களுக்கு இடையிலான பேருந்துப் போக்குவரத்து வசதிகளை அதிகாரிகள் சரிப்படுத்தி வருகின்றனர்.

அரசு விரைவு போக்​கு​வரத்துக் கழகம் மூலம் ஆந்​தி​ரா​வுக்கு 70 பேருந்​துகளும் கர்​நாடகா​வுக்கு 183 பேருந்​துகளும் கேரளா​வுக்கு 85 பேருந்​துகளும் இயக்க அனுமதி உள்​ளது என்று கூறிய அதிகாரிகள், தேவை இருக்​கும் பட்​சத்​தில் கூடு​தல் பேருந்​துகள் இயக்​கப்​படும் என்றனர்.

குறிப்புச் சொற்கள்