பேருந்துக் கட்டணம் உயர்த்தப்படாது: அமைச்சர் சிவசங்கர் உறுதி

1 mins read
654d1d09-7940-4be7-b4e1-5ba42e99da34
பேருந்துக் கட்டண உயர்வு குறித்து வெளியான தகவல் வதந்தியே என்று அமைச்சர் சிவசங்கர் விளக்கமளித்துள்ளார். - படம்: தமிழக ஊடகம்

அரியலூர்: பேருந்துக் கட்டணம் உயர்த்தப்படுவதாக வெளியான தகவலில் உண்மையில்லை என்று தமிழகப் போக்குவரத்து, மின்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

“பேருந்துக் கட்டண உயர்வு என்று வதந்தி பரவுவது வழக்கமாக இருந்து வருகிறது. இதனை ஒவ்வொரு முறையும் மறுத்துவருகிறோம்.

“பேருந்துக் கட்டணம் உயர்வு என்பது நிச்சயம் கிடையாது என்பதை முதல்வர் ஸ்டாலின் பலமுறை தெரிவித்து இருக்கிறார். இப்பொழுதும் அதனை உறுதிப்படுத்துகிறோம்.

“ஏழை எளிய மக்கள்மீது சுமை ஏற்றப்படக்கூடாது என்பதால் அதற்கான சூழல் பலமுறை ஏற்பட்டபோதும் பேருந்துக் கட்டணத்தை ஏற்றக்கூடாது என்று முதல்வர் அறிவுறுத்தி இருக்கிறார்.

“அரசுப் போக்குவரத்துக் கழகத்தைப் பொறுத்தவரை, பேருந்துக் கட்டணம் நிச்சயம் உயர்த்தப்படாது,” என்று அமைச்சர் உறுதியாகக் கூறினார்.

அரியலூர் மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகளை தொடங்கி வைத்துப் பேசியபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்