சிங்க‌ப்பூர்

மக்கள்தொகை விரைந்து மூப்படையும் அதேவேளையில் குறைவான பிறப்பு விகிதத்தைக் கொண்டுள்ள சமூகத்தில் மூத்தோரை ஆதரிப்பதில் வேலைசெய்யும் பெரியோர் அதிக அழுத்தத்திற்கு ஆளாவதாக பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா தெரிவித்து உள்ளார்.
சிங்கப்பூர் ஆடவர் ஒருவர் பிலிப்பீன்சின் கிளார்க் அனைத்துலக விமான நிலையத்தில் மே 9ஆம் தேதியன்று கைது செய்யப்பட்டார்.
மோசடி அல்லது பொய்ச்செய்தி என்ற சந்தேகத்திற்குரிய குறுஞ்செய்தியின் நம்பகத்தன்மையை அறிந்துகொள்ள ‘செக்மேட்’ என்ற புதிய சேவை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
US$443.800 (S$596,000) கள்ளப் பணத்தை நல்ல பணமாக்க மொத்தவிற்பனை வர்த்தக நிறுவனத்தின் வங்கிக் கணக்குகளை அளித்த குற்றத்திற்காக அந்நிறுவனத்தின் இயக்குநர் ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டு உள்ளது.
புதிய பிரதமர் லாரன்ஸ் வோங், சிறுபான்மைச் சமூகத்தினருக்குக் குரல்கொடுப்பவர் என்று சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்தின் (சிண்டா) தலைமை நிர்வாகி அன்பரசு ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.