பாட்டாளிக் கட்சியின் மத்திய செயற்குழுவில் நான்கு புதிய முகங்கள் இடம்பெறுகின்றனர்.
நியமிக்கப்பட்டவர்களில் இரண்டு புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களும் இரண்டு புதிய தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர்களும் அடங்குவர்.
செங்காங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் முஹாய்மின் அப்துல் மாலிக் துணை ஏற்பாட்டுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். துணைப் பொருளாளராக அல்ஜுனிட் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கென்னத் தியோங் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தத் தகவல்களைப் பாட்டாளிக் கட்சி புதன்கிழமை (ஜூன் 18) வெளியிட்டது.
தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர் ஐலீன் சோங், பாட்டாளிக் கட்சி இளையரணியின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார்.
இதற்கு முன்பு செங்காங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் அப்பதவியை வகித்தார்.
மற்றொரு தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினரான ஆண்ட்ரே லோ, பாட்டாளிக் கட்சி ஊடகக் குழுவின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
செயற்குழுவின் மற்ற பதவிகளைப் பொறுத்தவரை மாற்றங்கள் ஏதுமில்லை.
தொடர்புடைய செய்திகள்
கட்சியின் தலைமைச் செயலாளராக பிரித்தம் சிங்கும் தலைவராக சில்வியா லிம்மும் தொடர்கின்றனர்.