ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் இடங்களுக்குச் செல்ல வேண்டாம் என்றும் பொதுமக்கள் பேரளவில் ஒன்றுகூடும் இடங்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் இந்தோனீசியாவில் உள்ள சிங்கப்பூரர்களுக்கு ஜகார்த்தாவில் உள்ள சிங்கப்பூர் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
“இந்தோனீசியாவில் இருக்கும் சிங்கப்பூரர்கள் விழிப்புடன் இருந்து உள்ளூர் செய்தி மூலம் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும். இந்தோனீசிய அதிகாரிகளின் ஆலோசனையைக் கேட்டு நடக்க வேண்டும்,” என்று சனிக்கிழமையன்று (ஆகஸ்ட் 30) தனது அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் சிங்கப்பூர் தூதரகம் பதிவிட்டது.
இந்தோனீசியாவில் இருக்கும் சிங்கப்பூரர்கள் மற்றும் இந்தோனீசியாவுக்குப் பயணம் மேற்கொள்ளும் சிங்கப்பூரர்கள் https://eregister.mfa.gov.sg எனும் இணையப்பக்கத்துக்குச் சென்று வெளியுறவு அமைச்சுடன் பதிவுசெய்துகொள்ளுமாறு அது ஊக்குவித்தது.