மாணவர் முரசு புதிர்
கேளிக்கையான புதிர்கள் மூலம் தமிழ் கற்றுக்கொள்ளுங்கள்

மாணவர் முரசு

“காலமெல்லாம் பிரதமரின் கவனம் சிங்கப்பூர், சிங்கப்பூரர்கள் மீதே என்பதைப் புரிந்துகொண்டேன்,” என்று உள்துறை, சட்ட அமைச்சர் கா.சண்முகம் அண்மையில் தெரிவித்து இருந்ததைப் படித்தேன்.
பிரதமர் லீ, 20 ஆண்டுகளாக சிங்கப்பூரின் பிரதமராக இருக்கிறார். எந்த நாட்டிலும் இத்தனை ஆண்டுகள் ஒருவரே பிரதமராக இருந்திருக்க வாய்ப்பு இல்லை.
உலகத்தில் பல நாடுகளில் போர், கலவரம், வெள்ளம் என்று மக்கள் பல துயரங்களை அனுபவிக்கின்றனர்.
பிரதமர் லீயைப் பற்றி நான்கு முக்கிய நிகழ்வுகளை என் பெற்றோர் என்னிடம் பகிர்ந்துகொண்டார்கள். அதை உங்களுடன் நான் பகிர்ந்துகொள்கிறேன்.
பிரதமர் திரு லீ சிங்கப்பூரின் 3வது பிரதமராக 2004ஆம் ஆண்டு பதவியேற்றார்.