பொங்கோல் சமூக மன்ற அரங்கில் வரும் சனிக்கிழமை (நவம்பர் 8) மாலை 6 மணிக்கு ‘வாழ்வியல் இலக்கியப் பொழில்’ என்ற தமிழ் அமைப்பின் மாதாந்தர நிகழ்ச்சி 97வது சந்திப்பு நடைபெறவுள்ளது.
வழக்கமான இலக்கியச் சிற்றுரைகளும் தாய்-சேய் இணைந்து படைக்கும் ‘வேரும் விழுதும்’ போன்ற அங்கங்களும் சந்திப்பின்போது இடம்பெறவுள்ளன.
முனைவர் அ. பாண்டு படைக்கும் ‘இலக்கியங்களில் நாட்டுப்புறவியல்’, திருவாட்டி உஷா சுப்பிரமணியன் படைக்கும் ‘பன்முகப் பாவலன் பாரதி’ என்ற தலைப்பில் சிறப்புரைகளும் இடம்பெறும்.
மேல்விவரங்களுக்கு: எல்ல. கிருஷ்ணமூர்த்தி - 9228 8544.

