தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தங்க நகைகள் அணிய கட்டுப்பாடு; மீறினால் ரூ.50,000 அபராதம்

2 mins read
87046cc1-bc20-4c05-956d-216fb88ded89
ஆடம்பரச் செலவு செய்​வது, தங்க நகைகளைப் போட்​டுக் கொண்டு தங்​கள் பணக்​காரத்​தனத்தைக் காட்​டு​வது போன்​றவற்றை தடுக்​கவே திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்குச் செல்லும் பெண்கள் பெரிய தங்க நகைகளைப் போட்டுக்கொள்ளக்கூடாது என்று கிராமத் தலைவர்கள் முடிவு எடுத்துள்ளனர். - படம்: ராய்ட்டர்ஸ்

டேராடூன்: உத்​த​ராகண்ட் மாநிலத்தில் ஜான்​சர் - பவார் பகு​தி​யில் உள்​ள கந்​தார் கிராமத்தில் திரு​மணம், குடும்ப நிகழ்ச்​சிகளில் திரு​மண​மான பெண்​கள், தங்க நகைகள் அணியக் கட்​டுப்​பாடு​கள் விதிக்​கப்​பட்டுள்ளன.

பழங்குடியினர் பலர் வசிக்கும் அந்தக் கிராமத்தில் அண்மையில் நடைபெற்ற பழங்​குடி​யினத் தலை​வர்​களின் கூட்​டத்தில் இந்தக் கட்​டுப்​பாடு​கள் விதிக்​கப்​பட்​டன.

அதன்படி, திரு​மணம் போன்ற நிகழ்ச்​சிகளில் திரு​மண​மான பெண்​கள், தங்​க கம்​மல், மூக்​குத்​தி, தாலி ஆகிய​வற்றை மட்​டும் அணி​ய​லாம் என்று அறிவிக்கப்பட்டது.

அவற்றைத் தவிர, ஆடம்​பர​மான தங்க நகைகளை அணியக்கூடாது என்றும் அதிரடியாக முடிவெடுக்கப்பட்டது. விதிமுறையை மீறி​னால் ரூ.50,000 அபராதம் விதிக்​கப்​படும் என்று கிராமத் தலை​வர்​கள் அறி​வித்​தனர்.

“திருமண நிகழ்ச்​சிகளில் கலந்துகொள்வதற்காக ஏழை, எளிய மக்​கள் கடன் வாங்கி செலவு செய்​யும் நிலை உள்​ளது. ஆடம்பரச் செலவு செய்​வது, தங்க நகைகளைப் போட்டுக்கொண்டு தங்​கள் பணக்​காரத்​தனத்தைக் காட்​டு​வது போன்​றவற்றை தடுக்​கவே இந்த முடிவு எடுக்​கப்​பட்டுள்ளது.

“இனி, பெரிய தங்க நகைகளைத் திரு​மணம் போன்ற நிகழ்ச்​சிகளில் பெண்​கள் அணியக்கூடாது. தங்​கத்​தின் விலை நாளுக்கு நாள் அதி​கரித்து வரு​கிறது. ஏழைகள் தங்​கம் வாங்க முடி​யாது. அதனால் அவர்​கள் கடன் வாங்​கி​யா​வது திரு​மணம் போன்ற நிகழ்ச்சிகளில் பங்​கேற்க நினைக்​கின்​றனர். இது​போன்ற ஆடம்பரக் கலா​சா​ரத்​துக்கு முற்றுப்​புள்ளி வைக்​கவே இந்த நடவடிக்கையை எடுத்​துள்​ளோம்.

“திரு​மணம் என்​பது புனித​மான நிகழ்ச்​சி. அது தங்​கள் செல்​வத்​தை, பணக்​காரத்​தனத்தைக் காட்​டும் மேடை​யாக மாறிவிடக்கூடாது. சமூகத்​தில் சமத்​து​வத்தை கொண்டு வரவேண்​டும். அதற்கு இது​போன்ற கட்​டுப்​பாடு​கள் அவசி​யம். திரு​மணம் போன்ற நிகழ்ச்​சிகளில் ஏழை - பணக்​காரர் என்ற வேறு​பாடு இருக்கக்கூடாது. இந்தக் கட்​டுப்​பாடு​களை மீறி​னால் ரூ.50,000 அபராதம் விதிக்​கப்​படும்,” என்று கிராமத் தலைவர்கள் கூறினர்.

குறிப்புச் சொற்கள்