டெல்லி குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது

2 mins read
bb295d06-867d-4cfb-8bc1-c13ebbabcf65
டெல்லி குண்டுவெடிப்பில் 13 பேர் உயிரிழந்தனர். - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: கடந்த வாரம் டெல்லியில் நடைபெற்ற குண்​டு​வெடிப்​பின் முக்​கிய குற்​ற​வாளி அமீர் ரஷித் அலி கைது செய்​யப்​பட்டு உள்​ளார்.

குண்​டு​வெடிப்​புக்கு பயன்​படுத்​தப்​பட்ட காரின் உரிமை​யாளர் அவர் என காவல்துறை அதிகாரிகள் கூறினர்.

நவம்பர் 10ஆம் தேதி டெல்​லி​யில் வெடிபொருள் நிரப்​பப்​பட்ட கார் வெடித்​துச் சிதறியது.

அந்தச் சம்பவத்தில் 13 பேர் உயி​ரிழந்​தனர்.

காஷ்மீர் மாநிலத்தின் புல்​வா​மா பகுதியைச் சேர்ந்த மருத்​து​வர் உமர் நபி, கார் குண்டு தாக்​குதலை நடத்​தி​யிருப்​பது உறுதி செய்​யப்​பட்டதாகக் கூறப்பட்டது.

தேசிய புல​னாய்வு அமைப்பு (என்​ஐஏ) அந்த வழக்கை விசா​ரித்து வரு​கிறது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 16) இரவு என்ஐஏ வெளி​யிட்ட அறிக்​கை​யில், டெல்லி கார் குண்​டு​வெடிப்பு வழக்​கின் முக்​கிய குற்​ற​வாளியான அமீர் ரஷித் அலி கைது செய்​யப்​பட்டு உள்​ளதாக அறிவித்துள்ளது.

“டெல்லி குண்​டு​வெடிப்​புக்குப் பயன்​படுத்​தப்​பட்ட கார், இவரது பெயரில் பதிவு செய்​யப்​பட்டு இருக்​கிறது. ஜம்​மு​வின் சம்​போரா பகு​தியைச் சேர்ந்த அமீர் ரஷித் அலி டெல்​லிக்கு வந்து ஐ20 காரை வாங்கி தனது பெயரில் பதிவு செய்​துள்​ளார். இந்த காரிலேயே வெடிபொருள்​கள் நிரப்​பப்​பட்டு குண்​டு​வெடிப்பு நிகழ்த்​தப்​பட்டு இருக்​கிறது. இவருக்​கும் மருத்​து​வர் உமர் நபிக்​கும் நெருங்​கிய தொடர்பு இருக்​கிறது.

“வழக்கு தொடர்​பாக இது​வரை 73 பேரிடம் விசா​ரணை நடத்தி உள்​ளோம். இதே வழக்கு தொடர்​பாக டெல்​லி, ஜம்மு காஷ்மீர், ஹரி​யா​னா, உத்தரப் பிரதேச காவல்துறையினரும் தீவிர விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்,” என்று அறிக்​கை​யில் தெரிவிக்​கப்​பட்டு உள்​ளது.

டெல்​லியைப் போன்று நாடு முழு​வதும் கார்​களைப் பயன்​படுத்தி வெடிகுண்டு தாக்​குதலை நடத்த ஜெய்ஷ் தீவிர​வாத அமைப்பு சதித் திட்​டம் தீட்​டி​யிருந்​தது என்ஐஏ விசா​ரணை​யில் தெரிய​வந்​துள்​ளது.

அதைத் தொடர்ந்து டெல்​லி​யில் கேட்​பாரற்று நிறுத்​தப்​பட்டு இருக்​கும் வாக​னங்​கள் பறி​முதல் செய்​யப்​படு​கின்றன.

சந்​தேகத்​துக்கு உரிய 34 வாக​னங்​கள்​ பறி​முதல்​ செய்​யப்​பட்​டன.

குறிப்புச் சொற்கள்