தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தீயில் கருகிய பேருந்து; 70 பயணிகள் உயிர் தப்பினர்

2 mins read
fe3ce4f5-30d9-4c34-8993-ac6ee07aeaa9
பேருந்து முழு​வதும் தீப்​பற்றி கொழுந்துவிட்டு எரிந்தது. - படம்: இந்திய ஊடகம்

லக்னோ: இந்தியத் தலைநகர் புதுடெல்​லி​யிலிருந்து உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள கோண்​டாவுக்கு சனிக்கிழமை(அக்டோபர் 25) இரவு புறப்பட்டுச் சென்ற சொகுசுப் பேருந்து தீயில் கருகியது.

உத்தரப் பிரதேசத் தலைநகர் லக்னோ வழி​யாக அந்​தப் பேருந்து சென்றது. இரண்டு அடுக்​குப் படுக்கை வசதி கொண்ட அந்தச் சொகுசுப் பேருந்​தில் 70 பயணி​கள் இருந்​தனர்.

ஆக்ரா - லக்னோ தேசிய விரைவுச்​சாலை​யில் ரேவ்ரி பகு​தி​யில் உள்ள சுங்கச் ​சாவடி அருகே ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 26) அதிகாலை பேருந்து சென்றபோது திடீரென தீப்​பிடித்துக்கொண்டது.

உடனடி​யாக பேருந்தை நிறுத்​திய ஓட்​டுநர், பயணி​கள் அனை​வரை​யும் எழுப்பி அவசர அவசர​மாக வெளி​யேற்​றி​னார்.

அதற்​குள் பேருந்து முழு​வதும் தீப்​பற்றி கொழுந்துவிட்டு எரிந்தது. அதிர்​ஷ்ட​வச​மாக 70 பயணி​களும் உயிர்த்​தப்​பினர். யாருக்​கும் காயம் ஏற்​பட​வில்​லை. இந்தச் சம்​பவம் ரேவ்ரி சுங்​கச்​சாவடிக்கு முன்பு 500 மீட்​டர் தூரத்​துக்​குள் நடந்​துள்​ளது.

‘‘தகவல் அறிந்து தீயணைப்​பாளர்கள் விரைந்து சென்று தீயை அணைத்​தனர். பேருந்து ஓட்​டுநரும் நடத்​துநரும் பயணி​களைப் பத்​திர​மாக வெளி​யேற்றினர்,’’ என்று உத்தரப் பிரதேச அதிகாரிகள் கூறினர்.

‘‘பேருந்​தின் சக்கரம் ஒன்று தீப்​பிடித்​துக்கொண்டது. அதைப் பார்த்த ஓட்​டுநர் பேருந்தை உடனடியாக நிறுத்தியதாக முதற்கட்ட விசா​ரணை​யில் தெரிய வந்துள்ளது. தீயை அணைத்த பிறகு நெடுஞ்​சாலை​யிலிருந்து பேருந்து அகற்​றப்​பட்டது. அதையடுத்து, போக்​கு​வரத்து வழக்கநிலைக்குத் திரும்பியது’’ என்று உத்தரப் பிரதேசக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஆந்​திராவில் இரண்டு நாள்​களுக்கு முன்பு சொகுசுப் பேருந்து தீப்​பற்றி எரிந்து 20 பயணி​கள் உயி​ரிழந்த நிலை​யில், இந்தச் சம்​பவம் நடை​பெற்​றது பெரும் பரபரப்​பை ஏற்​படுத்​தி உள்​ளது.

குறிப்புச் சொற்கள்