முதல்வருக்கு நன்றி தெரிவித்து துப்புரவுப் பணியாளர்கள் பேரணி

2 mins read
fab89d02-8ebf-46c3-a472-58df43185873
கைது செய்யப்பட்ட 950 துப்புரவுப் பணியாளர்கள் விடுவிக்கப்பட்டனர். அவர்களில் 700 பேர் பெண்கள். - படம்: இந்திய ஊடகம்
multi-img1 of 2

சென்னை: சென்னை துப்புரவுப் பணியாளர்களுக்கான சிறப்புத் திட்டங்களை அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, 200க்கும் மேற்பட்ட துப்புரவுப் பணியாளர்கள் பதாகைகள் ஏந்தி பேரணி சென்றனர்.

பேரணி முடிவில் துப்புரவுப் பணியாளர்களுக்கு அமைச்சர் சேகர் பாபு, மாநகர மேயர் பிரியா ஆகியோர் உணவு பரிமாறினர்.

இதைத்தொடர்ந்து முதல்வரின் முகாம் அலுவலகத்துக்கு சென்ற தூய்மை பணியாளர்கள் முதல்வருக்கு நேரில் நன்றி கூறினர். இந்தச் சந்திப்பின் போது அமைச்ச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

முன்னதாக, ஆர்ப்பாட்டத்தில் இறங்கியதால் கைது செய்யப்பட்ட துப்புரவுப் பணியாளர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டுவிட்டதாகத் தமிழகக் காவல்துறை தெரிவித்துள்ளது. 950 பேர் விடுதலை செய்யப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.

அவர்கள் புதன்கிழமை (ஆகஸ்ட் 13) இரவு கைது செய்​யப்​பட்​டனர். இந்​நிலை​யில், வியாழக்கிழமை (ஆகஸ்ட் 14) அவர்​கள் அனை​வரும் விடுவிக்​கப்​பட்​டனர்.

சென்னை மாநகராட்சி மண்​டலம் 5, 6 பகு​தி​களுக்​கான துப்பரவுப் பணி தனி​யார் நிறு​வனத்​துக்கு வழங்​கப்​பட்​டுள்​ளது.

இதை எதிர்த்​தும் பணி நிரந்​தரம் உள்​ளிட்ட கோரிக்​கைகளை வலி​யுறுத்​தி​யும் துப்பரவுப் பணியாளர்கள் 13 நாள்​களாக ரிப்​பன் மாளிகை முன்பு தொடர் போராட்​டம் மேற்​கொண்​டனர்.

இதற்​கிடையே, போராட்​டம் என்ற பெயரில் நடை​பாதை, சாலையை மறிப்​பதை ஒரு​போதும் அனு​ம​திக்க முடி​யாது என்று சென்னை உயர் நீதி​மன்றத் தலைமை நீதிபதி அமர்​வு, ரிப்​பன் மாளிகை முன்​பாகப் போராட்​டம் நடத்தி வரும் துப்புரவுப் பணியாளர்களை உடனடி​யாக அங்​கிருந்து அப்​புறப்​படுத்த காவல்துறைக்கு உத்​தர​விட்​டது.

அதையடுத்​து, போராட்​டம் நடத்​திய துப்பரவுப் பணி​யாளர்​களைக் கலைந்து செல்​லு​மாறு காவல்துறை புதன்கிழமை மாலை அறி​வுறுத்​தி​யது. மேலும், நீதி​மன்ற உத்​தர​வைச் சுட்​டிக்​காட்டி கலைந்து செல்​லும்​படி ஆர்ப்பாட்டக்காரர்களிடம் காவல்துறையினர் பேச்​சு​வார்த்தை நடத்​தினர்.

ஆனால் யாரும் கலைந்து செல்​ல​வில்​லை. அமைச்​சர்​கள் கே.என்​.நேரு, சேகர்​பாபு ஆகியோர் போராட்டக் குழுவிடம் பேச்​சு​வார்த்தை நடத்​தி​னார்​கள். அதி​லும் உடன்​பாடு எட்​டப்​பட​வில்​லை. இதையடுத்​து, காவல்துறையினர் கைது நடவடிக்​கை​யில் இறங்கினார்​கள். அப்​போது காவல்துறையினருடன் துப்புரவுப் பணியாளர்கள் வாக்குவாதம் செய்தனர். அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடு​பட்ட 700 பெண்​கள் உட்பட ஏறத்தாழ 950 பேரைக் கைது செய்து 30 மாநகர அரசு பேருந்​துகள் மூலம் சைதாப்​பேட்​டை, வேளச்​சேரி, நீலாங்​கரை, தரமணி, தாம்​பரம் உட்பட 12 மண்​டபம் மற்​றும் சமூக நலக்​கூடங்​களுக்கு காவல்துறையினர் கொண்டு சென்று அடைத்து வைத்தனர்.

செல்​லும் வழி​யில் ஆர்ப்பாட்டக்காரர்கள் 12 பேருந்​துகளின் கண்​ணாடிகளை அடித்து உடைத்து சேதப்​படுத்தி உள்​ளனர். அதில் ஏற்பட்ட தள்​ளு​முள்​ளு​வில் பெண் காவல்துறை அதிகாரி ஒரு​வருக்குக் காயம் ஏற்​பட்​டது. இந்தச் சம்​பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்