கோடைகால வெயில் திரையுலகத்தையும் பாதித்துள்ளது. பலர் வெளிநாடுகளுக்கும் உள்நாட்டில் உள்ள குளிர்ச்சியான இடங்களுக்கும் சென்று அங்கேயே பல நாள்கள் முகாமிடுகின்றனர்.
அந்த வகையில், கோடம்பாக்கத்தைச் சேர்ந்த இளம் நடிகர்கள் ஒரு குழு அமைத்து ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு உள்ளிட்ட பகுதிகளுக்கு சத்தம் இல்லாமல் சென்றுள்ளனர்.
அக்குழுவில் நடிகர்கள் பரத், கலையரசன், விக்ராந்த், சாந்தனு, ஆதவ் உள்ளிட்ட பலர் இணைந்துள்ளனர்.
இவர்களுடைய குடும்பத்தினரும் உடன் சென்றுள்ளனர். நாள்தோறும் ஆடல், பாடல், மலையேற்றம், நீண்ட தூர நடைப்பயணம் எனப் பல்வேறு வகையிலும் பொழுதைக் கழித்து விடுமுறையைக் கொண்டாடி வருகின்றனர்.