லாவண்யா வீரராகவன்

Designation :
செய்தியாளர்
லிட்டில் இந்தியா, தேக்கா நிலையம் ஆகிய பகுதிகளை அலங்கரிக்கும் பல சுவரோவியங்களின் பட்டியலில் அழகிய நினைவலைகளைத் தூண்டும் மற்றொரு சுவரோவியமும் இணைந்துள்ளது.
சுயமாக முடிவெடுக்கும் ஆற்றலை ஒருவர் இழக்க நேரிட்டால், அவர் சார்பாக மற்றொருவர் முடிவெடுக்க உரிய அதிகாரத்தை வழங்கும் ஆவணம் ‘நிரந்தர உரிமைப் பத்திரம்’. அந்த ஆவணத்திற்கு இந்தியச் சமூகம் இலவசமாக பதிந்துகொள்ளும் நிகழ்வு மே 12ஆம் தேதி சிராங்கூன் சாலையில் உள்ள பிஜிபி மண்டபத்தில் நடைபெற்றது.
வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் வேளைகளில் உடலை அதற்கேற்றபடி தயார்செய்வதும் பாதுகாப்பதும் அவசியம்.
ஜெர்மனியில் தமிழ் இலக்கியங்களின் பொருள் தொகுப்புகளுக்கான மின்னிலக்கப் பேரகராதி தயாரிக்கும் மாபெரும் திட்டத்தில் முக்கியப் பங்காற்றி வருகிறார் சிங்கப்பூரைச் சேர்ந்த மானசா விஸ்வேஸ்வரன்.
கலை நயமும் கதை வளமும் ஒருசேர ‘நெசவு’ எனும் நாட்டிய நாடகத்தை தத்வா கலைக் குழுவினர் அரங்கேற்றினர். தமிழ்மொழி விழாவின் ஒரு பகுதியாக அலிவால் கலை மையத்தில் ஏப்ரல் 27ஆம் தேதி இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
சிங்கப்பூரில் பணியாற்றும் இலங்கைப் பணிப்பெண்களுக்கான நிகழ்ச்சி ஏப்ரல் 28ஆம் தேதி காரிடாஸ் வில்லேஜில் நடைபெற்றது.
தமிழ்மொழி விழாவையொட்டி ‘உமறுப்புலவர் நினைவு அரங்கம்’ நிகழ்ச்சியுடன், மாணவர்களுக்கான கவிதை வாசிப்பு, ‘நீங்களும் கவிஞர் ஆகலாம்’ பயிலரங்கு என மூன்று அமர்வுகள் ஒன்றிணைந்த நிகழ்ச்சி ஏப்ரல் 27ஆம் தேதி நடைபெற்றது.
பழக்கமில்லாத ஊர், மாறுபட்ட மக்கள், எதிர்பாராத சவால்கள் எனப் பல தடைகள் இருந்தும் கனவு ஒன்றே குறிக்கோளாகப் பயணம் செய்து ‘ஹே அர்ஜுன்’ எனும் காதல்-கற்பனை பாணியில் படத்தை எடுத்துள்ளனர் உள்ளுர்க் கலைஞர்கள்.
சிங்கப்பூர் சந்திக்கும் பல்வேறு சவால்கள், அவற்றைக் கடந்து முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்லும் வழிகள், அதற்கான ஆற்றல்கள் குறித்த ஆய்வரங்க மாநாடு ஏப்ரல் 21ஆம் தேதி நடைபெற்றது.
பிள்ளைகளுக்குத் தமிழைக் கொண்டு சேர்க்க, முதலில் பெற்றோருக்கு அதன் முக்கியத்துவம் தெரியப்படுத்தப்பட வேண்டும் எனும் நோக்கில் மசெக சமூக அறநிறுவனம் போட்டிகள் நடத்தியுள்ளது.