ஹெண்டர்சன் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழு வழங்கும் 28வது பட்டிமன்றம் இம்மாதம் 27ம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெறுகிறது. உமறுப்புலவர் தமிழ் மொழி நிலையத்தில் மாலை 6.00 மணிக்குத் தொடங்கும் பட்டிமன்றத்தின் தலைப்பு: ‘மெகாத் தொடர் ஆட்சியும் திரைப்படக் காட்சியும் இன்றி தமிழ்த் தொலைக்காட்சி இயங்க முடியும், இயங்கமுடியாது.’
‘இயங்க முடியும்’ எனும் தலைப்பு தொட்டு பேசுவோர் திரு எம்.ஜே. பிரசாத், திருமதி சுகுணவள்ளி ரணதேவன், திருமதி ஞானமணி. ‘இயங்கமுடியாது’ எனும் தலைப்புக்கு ஆதரவாக, முனைவர் ராஜி சீனிவாசன், திரு ஆர். குமாரசுவாமி, திரு முரளி ஆகியோர் பேசுவார்கள்.