வாழ்வும் வளமும்

முந்தைய தலைமுறையினர் தம் மனநலத்தைப் பேணப் பயன்படுத்திய உத்தியான, எண்ணங்களைக் கைப்பட எழுதுதலை இன்றைய இளையர்களுக்கு அறிமுகப்படுத்தியது இளையர்களால் நடத்தப்பட்ட மனநலப் பயிலரங்கு.
சீனப் புத்தாண்டை முன்னிட்டு சனிக்கிழமை ஜனவரி 27ஆம் தேதி 1,300க்கும் மேற்பட்ட தொண்டூழியர்கள் சிங்கப்பூர் முழுவதும், 21 தொகுதிகளில் வசிக்கும் முதியோருக்கும் உதவி தேவைப்படும் குடும்பங்களுக்கும் 8,000க்கும் மேற்பட்ட பராமரிப்புப் பைகளை வழங்கினர்.
2023ஆம் ஆண்டில் 47 தனிநபர் ஓட்டப்பந்தயங்களில் தேசிய அளவில் 100 மீட்டர் சாதனையை ஆறு முறையும் 200 மீட்டர் சாதனையை நான்கு முறையும் படைத்த சாந்தி, 2024ஆம் ஆண்டிலும் வெற்றிகளைக் குவிக்க ஆயத்தமாகிவிட்டார்.
நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக தமிழ் இலக்கிய மன்றம் (என்டியூ டிஎல்எஸ்), ஜனவரி 20ஆம் தேதி காலை 10 முதல் மாலை 5.30 மணி வரை ‘என்டியூ’வில் ‘யாழ் 2024’ நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தியது.
சமகால தமிழ்ப் புனைவுலகில் பரவலாக கவனம் பெற்ற மலேசிய எழுத்தாளர் ம.நவீன், நவீன சிறுகதைகளைப் புரிந்துகொள்வதற்கான உத்திகளை, சனிக்கிழமை ஜனவரி 27ஆம் தேதி காலை 10 முதல் 11.30 மணி வரை தேசிய நூலக வாரிய கட்டடத்தில் நடைபெற்ற உரையாடலில் பகிர்ந்துகொண்டார்.