இந்தியா

மஹோபா: உத்தரப் பிரதேசத்தின் மஹோபா மாவட்டத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிர்ப்புத் தெரிவித்த மாணவியும் அவரைச் சேர்ந்தவரும் சுடப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் 10 பேர் வரை காயமடைந்து உள்ளனர்.
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் நவம்பர் 30ஆம் தேதி 119 சட்டமன்ற தொகுதிகளிலும் ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறவுள்ளதையொட்டி தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
மும்பாய்: கற்களை வீசி சிறுத்தையை விரட்டி குழந்தையைக் காப்பாற்றியுள்ளார் தாய். இச்சம்பவம் மகாராஷ்டிர மாநிலம் ஜுன்னர் வனப்பகுதியை அடுத்த தார்ன் டேல் என்ற கிராமத்தில் வியாழக்கிழமை நடந்துள்ளது.
பிரயாக்ராஜ்: நொய்டாவின் நிதாரி தொடர் கொலை வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லாததால் தொழிலதிபர் மொகிந்தர் சிங் பாந்தரும் அவரது வீட்டு உதவியாளர் சுரேந்தர் கோலியையும் அலகாபாத் உயர் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
புதுடெல்லி: இந்திய முன்னாள் தலைமைத் தோ்தல் ஆணையரும், முன்னாள் மத்திய அமைச்சருமான எம்.எஸ்.கில் உடல்நலக் குறைவு காரணமாக தெற்கு டெல்லியில் உள்ள மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை காலமானாா். அவருக்கு வயது 86.