இந்தியா

தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் பொறுப்பில் இருந்து திருப்பூர் சக்தி சுப்ரமணியம் விலகியுள்ளார்.
சென்னை: பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்வது உள்ளிட்ட நீண்டகாலமாக நிலுவையில் இருந்துவரும் 10 சட்ட மசோதாக்களுக்கு அரசிடம் விளக்கம் கேட்டு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அரசுக்கு திருப்பி அனுப்பியுள்ளார்.
சென்னை: தமிழகத்தில் 10, 11, 12 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வியாழக்கிழமை (நவம்பர் 16) காலை 9.30 மணியளவில் வெளியிட்டார்.
லக்னோ: உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தின் யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சில்க்யாரா, தண்டல்கான் பகுதிகளுக்கு இடையே சுரங்கப் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. அந்தப் பாதையின் ஒரு பகுதியில் ஞாயிற்றுக்கிழமையன்று காலை மண் சரிவு ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து கட்டுமானப் பணி மேற்கொள்ளப்பட்டு வந்த சுரங்கப்பாதை சரிந்து விபத்துக்குள்ளானது.
ஜம்மு: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 300 அடி பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்ததில் 36 பேர் உயிரிழந்தனர். அந்த மாநிலத்தின் தோடா மாவட்டத்தில் புதன்கிழமை இவ்விபத்து நிகழ்ந்தது.