இந்தியா

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இருந்த ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்புப் பிரிவு ரத்து செய்யப்பட்டது செல்லும் என்று இந்திய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வு ஒருமனதாகத் தீர்ப்பளித்துள்ளது.
ஜம்மு - காஷ்மீரில் அடுத்த ஆண்டு செப்டம்பருக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அயோத்தி: உத்திரப் பிரதேச மாநிலத்தின் அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் ஜனவரி மாதம் திறப்புவிழா காண உள்ளது. இக்கோயிலுக்கு எண்ணற்ற பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, அங்கு உள்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
புதுடெல்லி: உலகில் தற்போது விரைவாக வளர்ந்து வரும் பெரும் பொருளியல் நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி: அண்மையில் தெலுங்கானாவில் நடந்துமுடிந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 64 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. தெலுங்கானா மாநிலம் உருவாகி முதன்முறையாக காங்கிரஸ் ஆட்சி அமைக்கிறது.