சிங்க‌ப்பூர்

கட்டுமானத் துறை, பராமரிப்பு உள்ளிட்ட பணிகளில் ஈடுபடும் ஊழியர்கள் ஏறத்தாழ 14,000 பேர் வசிக்கும் எஸ்11-பிபிடி தங்குவிடுதி 1Bயில் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 17) அனைத்துலக வெளிநாட்டு ஊழியர் தினத்தை முன்னிட்டு கேளிக்கை, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
குறைந்த வருமானம் ஈட்டும் சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள் ஆகியோருக்கு நீதிமன்ற வழக்குகள் தொடர்பாக உதவி தேவைப்பட்டால் சட்ட அமைச்சின்கீழ் செயல்படும் பிரதிவாதி அரசாங்க வழக்குரைஞர் அலுவலகம் உதவுகிறது. இந்த அலுவலகத்தால் பிரதிநிதிக்கப்பட்டால் கட்சிக்காரர்கள் பலனடைவார்களா என்று முதலில் ஆராயப்படும்.
தொடர்ச்சியாக 13 மாதங்களுக்குச் சரிவு கண்ட பிறகு, சிங்கப்பூரின் எண்ணெய் சாரா ஏற்றுமதி கடந்த நவம்பர் மாதம் ஒரு விழுக்காடு அதிகரித்தது.
உலகம் முழுவதும் உள்ள காடுகளில் 1,700க்கும் குறைவான முதிர்ச்சியடைந்த ‘ஸ்ட்ரா ஹெடட் புல்புல்ஸ்’ பாடும் பறவை உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.
செம்பவாங்கிலிருந்து அப்பர் தாம்சன், ஆர்ச்சர்ட் ரோடு வழியாக புக்கிட் மேராவுக்கு இயக்கப்படும் பேருந்துச் சேவை 167 ஞாயிற்றுக்கிழமை ( டிசம்பர் 17) அன்று அரைமணி நேரத்திற்கு ஒருமுறை இயங்கத் தொடங்கின. கடந்த நவம்பர் மாதம் நிலப் போக்குவரத்து ஆணையம் அறிவித்த பல வழித்தட மாற்றங்கள் நடைமுறைக்கு வந்ததையடுத்து பேருந்துச் சேவை எண் 167 நீண்ட நேர இடைவெளியில் இயக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.