சிங்க‌ப்பூர்

கடந்த 2022ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் பணவீக்கம் உச்சம் தொட்டது. அது கடந்த ஆண்டு குறைந்ததையடுத்து வாழ்க்கைச் செலவினம் தொடர்பாக சிங்கப்பூர் குடும்பங்களுக்கு ஏற்பட்டிருந்த நெருக்குதல் தளர்ந்தது.
கடுமையான பாலியல் அல்லது வன்முறைக் குற்றங்களில் ஈடுபடுவோரை காலவரம்பின்றி தடுத்து வைக்க உதவும் புதிய முன்மொழியப்பட்ட சட்டத்தைப் பயன்படுத்துவது குறித்து நீதிமன்றங்கள்தான் முடிவு செய்யும், அரசாங்கம் அல்ல என்று உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம் கூறியுள்ளார்.
புதிய மின்சார உற்பத்தி இயந்திரத்தை (டர்பைன்) அமைக்கும் உரிமை வைடிஎல் பவர்செராயா (ஒய்டிஎல்பிஎஸ்) நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாண்டு பிப்ரவரி மாதத்திலிருந்து ஏப்ரல் மாதம் வரை 14,707 வாகன உரிமைச் சான்றிதழ்கள் (சிஓஇ) ஏலக்குத்தகைக்கு விடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரின் மத்திய வங்கி அதன் நாணயக் கொள்கையின் நிலைப்பாட்டில் மாற்றம் செய்யவில்லை. இன்னமும் உயர்ந்திருக்கும் பணவீக்கத்தைச் சமாளிக்க சிங்கப்பூர் வெள்ளியின் மதிப்பை வலுப்படுத்துவதே அதன் நோக்கம்.