சிங்க‌ப்பூர்

சிங்கப்பூரில் பிறந்த ‘லெ லெ’ பாண்டா கரடிக்குட்டி, ஜனவரி 16ஆம் தேதி சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) விமானம் மூலமாகச் சீனா செல்லவிருக்கிறது.
ஆங்கிலோ சீனப் பள்ளியை (தன்னாட்சி) சேர்ந்த 15 வயது மாணவனின் மரணத்தின் தொடர்பில் தொண்டூழியராகப் பணிபுரிந்த பயிற்றுவிப்பாளர்களில் ஒருவருக்கு ஆறு மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
சிங்கப்பூரில் சென்ற ஆண்டு (2023), வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) மறுவிற்பனை வீடுகளை வாங்கிய வெகுசிலரே, ‘சிஓவி’ எனப்படும் வீட்டின் மதிப்பீட்டுத் தொகைக்குமேல் ரொக்கம் வழங்கியதாகத் தெரியவந்துள்ளது.
குடிபோதையில் இருந்த தோழியைப் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக ஆடவர் ஒருவர் ஒப்புக்கொண்டார்.
கார் விநியோகிப்பு நிறுவனம் ஒன்று வெடிகுண்டால் தகர்க்கப்படும் என்ற பொய்ச் செய்தியை ‘சிங்கப்பூர் மோட்டோர்ஷோ’ இன்ஸ்டகிராம் பக்கத்திற்கு அனுப்பியதாக ஆடவர் ஒருவர்மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.