சிங்க‌ப்பூர்

ரயீசா கான் சர்ச்சை விவகாரம் தொடர்பில் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்க அரசு நீதிமன்றத்துக்கு செவ்வாய்க்கிழமை (மார்ச் 19) காலை வந்த எதிர்க்கட்சித் தலைவர் பிரித்தம் சிங்கிடமிருந்து கருத்து பெற செய்தியாளர்கள் படையாகத் திரண்டனர்.
முன்னாள் பாட்டாளிக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரயீசா கான் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற சிறப்பு விசாரணைக் குழுவிடம் பொய் சொன்னதாக எதிர்க்கட்சித் தலைவரும் பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளருமான பிரித்தம் சிங் மீது மார்ச் 19ஆம் தேதியன்று இரண்டு குற்றச்சாட்டுகள் பதிவாகின.
நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தில் உள்ள தங்குவிடுதியில் அத்துமீறி நுழைந்து மாணவியை மானபங்கப்படுத்திய சிங்கப்பூர் ஆகாயப் படையின் அதிகாரியான நியோ அய்க் சியாவோவுக்கு, 47, நான்கு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
‘மிஸ்டர் பீன்’ பானத்தை ருசித்துக் கொண்டிருந்த ஒரு பெண் அதிர்ச்சியில் உறைந்துவிட்டார். அந்தப் பானத்தில் கரப்பான்பூச்சி இருந்ததே அதற்கு காரணம்.
சிங்கப்பூரின் பயனீட்டாளர்கள் இணைய மதிப்பீடுகளிலும் இணைய விற்பனைகளையும் அதிகம் சார்ந்திருப்பதால், சிறந்த வாடிக்கையாளர் சேவை வழங்குநர்களுக்கான தேடல் மீண்டும் இடம்பெறுகிறது.