fontsize: 60% 70% 80% 90%

உலகம்

பேரணிகளை எதிர்கொள்ள பேங்காக்கில் 50,000 வீரர்கள்

தாய்லாந்துத் தலைநகர் பேங்காக்கில் தக்சின் ஆதரவாளர்களின் பேரணிகளை எதிர்கொள்ள அந்நாட்டு அரசாங்கம் 50,000 வீர்களை பணியில் அமர்த்தியுள்ளது.
தாய்லாந்தில் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்தராவின் ஆதரவாளர்கள் இன்று முதல் பெருமளவிலான ஆர்ப்பாட்டங்களை நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.
அவருக்கு எதிரான தீர்ப்பு ஒன்றில் தாய்லாந்தின் உச்சநீதிமன்றம் முடக்கி வைக்கப்பட்ட தக்சினின் சொத்துகளில் 1.4 பில்லியன் டாலர்கள் மதிப்பிலானவற்றை அரசாங்கம் பறிமுதல் செய்ய உத்தரவிட்டது.

பாகிஸ்தான்: துப்பாக்கிக்காரர்கள் தாக்குதலில் 6 பேர் மரணம்

துப்பாக்கிகள், கையெறி குண்டுகளுடன் பாகிஸ்தானின் வட மேற்கு மாநிலத்தில் கிறிஸ்துவ தொண்டூழிய நிறுவனம் மீது நேற்று நடத்தப்பட்ட தாக்குதலில் 6 பேர் மரணமடைந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இஸ்லாமாபாத்துக்கு 200 கிலோமீட்டர் வடக்கே உள்ள மன்செரா என்ற கிராமத்தில் நடந்த இந்தத் தாக்குதலுக்கு இஸ்லாமியப் பேராளிகளே காரணம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இந்தத் தாக்குதலை கொடூரமானது, புரிந்துகொள்ள முடியாதது என்று வர்ணித்த ‘வோர்ல்ட் விஷன்’ என்ற அந்தத் தொண்டூழிய நிறுவனம் உடனடியாக தனது சேவையை நிறுத்திக்கொண்டது.

டொயோட்டா நிறுவனம் மீது பல பில்லியன் டாலர் இழப்பீடு வழக்கு

டொயோட்டா கார்களில் ஏற்பட்டுள்ள பிரச்சினையால் அமெரிக்காவில் பாதிக்கப் பட்ட கிட்டத்தட்ட 8 முதல் 10 மில்லியன் பேர் சார்பாக டொயோட்டா நிறுவனத்தின் மீது வழக்குத் தொடர சில அமெரிக்க வழக்கறிஞர்கள் முடிவு செய்துள்ளனர்.
உலகெங்கிலும் விற்பனையான டொயோட்டா கார்களில் பல திடீரென அதிவேக மாகச் சென்தால் பல விபத்துகள் நிகழ்ந்து அமெரிக்காவில் பலர் உயரிழந்துள்னர்.

உலகின் முதல் பத்து பணக்காரர்கள் வரிசையில் அம்பானி, மிட்டல்

உலகில் முதல் பத்து பணக்காரர்கள் வரிசையில் இந்தியாவின் முக்கேஷ் அம்பானியும், சுனில் மிட்டலும் முறையே 4ம், 5ம் நிலையில் உள்ளனர்.
அமெரிக்காவின் ஃபோர்ப்ஸ் சஞ்சிகை ஆண்டுதோறும் உலகின் பணக்காரர்களின் வரிசையை வெளியிடுவது வழக்கம்.
அதன்படி, இந்த 2010ம் ஆண்டுக்„ன பணக்காரர்கள் வரிசையை வெளியிட்டுள்ளது.
அதில் இந்தியாவின் பிரபல தொழிலதிபர்களான அம்பானி சகோதரர்களில் முக்கேஷ் அம்பானியும், எஃகு தொழிற்சாலைகளை வைத்திருக்கும் சுனில் மிட்டலும் முறையே 4ம், 5ம் இடத்தை வகிக்கின்றனர்.

முக்கிய ஜமா இஸ்லாமியா போராளி கொல்லப்பட்டார்

ஜகார்த்தா
பாலித் தீவில் 2002ம் ஆண்டு நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாகத் தேடப்பட்டு வந்த முக்கிய போராளி ஒருவரை இந்தோனீசியப் போலிசார் சுட்டுக் கொன்றுவிட்டதாக நம்பப்படுகிறது.
இஸ்லாமியப் போராளிகளுக்கு எதிராக இந்தோனீசியா நடத்திவரும் போராட்டத்தில் இவரது மரணம் முக்கிய அங்கம் வகிக்கக்கூடும் என்று போலிசாரும் ஆய்வாளர்களும் நேற்று கூறினர்.
பன்டன் மாவட்டத்தின் பமுலாங் வட்டாரத்தில் போலிசார் திடீர் சோதனைகள் நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஹாங்காங்கில் மீண்டும் அமிலத் தாக்குதல்

ஹாங்காங்
ஹாங்காங்கில், ஒரே வட்டாரத்தில், ஆறு மாதங்களில் நான்காவது முறையாக, அமிலம் நிரப்பப்பட்ட பீர் போத்தல் தெருவில் வீசப்பட்டதாகப் போலிசார் நேற்று தெரிவித்தனர். இத்தாக்குதல்கள் அனைத்துக்கும் ஒருவரே பொறுப்பாக இருக்கக்கூடும் என்று சந்தேகம் எழுந்துள்ளது.
சென்ற 2008ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல், ஹாங்காங்கில் நடந்திருக்கும் 12வது தாக்குதல் இது. இவற்றில் எட்டு தாக்குதல்கள் நகர்ப்பகுதிகளிலும், மூன்று தாக்குதல்கள் புதிய வட்டாரங்களிலும் நடந்தன. தாக்குதல்களில் இதுவரை 100க்கும் அதிகமானோர் காயமடைந்ததாக சவுத் சைனா மார்னிங் போஸ்ட் பத்திரிகை தெரிவித்தது.

டால்ஃபின் வேட்டை பற்றிய விளக்கப்படம் ஜப்பானில் திரையிடக்கூடும்

தோக்கியோ
ஜப்பானிய மீன்பிடி கிராமத்தில் டால்ஃபின்கள் கொடூரமான முறையில் வேட்டையாடப்படுவதைக் காட்டும் “The Cove” எனும் விளக்கப்படம் ஆஸ்கர் விருதை வென்றதைத் தொடர்ந்து, ஜப்பானில் படம் திரையிடப்படும் சாத்தியம் ஏற்பட்டுள்ளது.
இப்படத்தைப் பற்றி ஜப்பானியர்கள் பலரும் கேள்விப்படாததால், ஆகச்சிறந்த விளக்கப் படத்திற்கான ஆஸ்கர் விருதை இப்படம் வென்ற செய்தி அவர்களுக்கு வியப்பளித்தது.

மத்தியக் கிழக்கில் ஜோ பைடன்

ஜெருசலம்
இஸ்ரேலியர்களும் பாலஸ்தீனர்களும் மீண்டும் பேச்சு வார்த்தையைத் தொடங்கச்செய்யும் நோக்கத்துடன் அமெரிக்கத் துணை அதிபர் ஜோ பைடன் திங்கட்கிழமை இஸ்ரேல் சென்று சேர்ந்தார்.
பைடனின் நான்கு நாள் வருகையின்போது, ஈரானின் அணுவாயுதத் திட்டத்தை ஒடுக்குவதில் அமெரிக்கா கடப்பாடு கொண்டிருப்பதாக இஸ்ரேலியத் தலைவர்களுக்கு பைடன் உறுதியளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வியாழக்கிழமை டெல் அவிவ் நகரில் உரையாற்றும்போது, இஸ்ரேலியப் பொதுமக்களின் ஆதரவையும் அவர் திரட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குண்டுவெடிப்புகளுக்கு இடையே தேர்தல்

பீரங்கிக் குண்டுகளும் மற்ற வகையான குண்டுகளும் ஈராக் தலைநகர் பாக்தாத்தை உலுக்க அந்நாட்டில் நேற்று இரண்டாம் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது.
ஈராக்கில் 2003ம் ஆண்டில் முன்னாள் சர்வாதிகாரி சதாம் ஹுசேனைப் பதவியில் இருந்து வீழ்த்திய பின் நடைபெறும் இரண்டாவது நாடாளு மன்றத் தேர்தல் இது.
இந்தத் தேர்தலை சீர்குலைக்க அல் காய்தா பயங்கரவாத இயக்கம் ஏற்கனவே எச்சரித்திருந்தது.
அதுபோல் ஈராக்கிய மக்களையும் அவ்வியக்கம் தேர்தலில் பங்கேற்க வேண்டாமென்று எச்சரிக்கை விடுத்து ஆங்காங்கே துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து வந்தது.

சிறுவன் மரணம் தொடர்பாக இந்திய ஆடவர் கைது

ஆஸ்திரேலியாவில் குர்ஷன் சிங் என்ற மூன்று வயதுச் சிறுவன் மர்மமான முறையில் இறந்து கிடந்தது தொடர் பாக குர்சேவாக் தில்லன் என்ற இந்திய ஆடவர் ஒருவர் கைதாகி யுள்ளார் என்று ஏஎப்பி தகவல் கூறுகிறது.
முன்னதாக, அந்தச் சிறுவனுடைய உடல் கண்டெடுக் கப்பட்ட இடத் துக்கு அருகே ஒரு பச்சை நிறக் கார் ஒன்று வியாழக் கிழமை தென்பட்ட தாககூறப்படுகிறது.
இந்த மரணம் தொடர்பான விசாரணையை மேற்கொண்டுள்ள போலிசார் அந்தக் கார் பற்றிய தகவல் அறிந்தவர் யாராக இருந்தாலும் அவர்களுடன் தாங்கள் தொடர்பு கொள்ள விரும்புவதாகத் தெரிவித்திருந்தனர்.

Syndicate content
Copyright © 2006 Singapore Press Holdings Ltd. Co. Regn. No. 198402868E. All rights reserved.
82, Genting Lane, Singapore 349567 Tel: 6388 3838