fontsize: 60% 70% 80% 90%

உலகம்

ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பேசத் தயார்: தாய். பிரதமர்

தாய்லாந்தில் அரசுக்கு எதிராக பேரணி நடத்தி வரும் சிவப்பு நிற சட்டை ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பேச்சு நடத்த தயாராக இருப்பதாக தாய்லாந்துப் பிரதமர் அபிசித் விஜஜிவா தெரிவித்துள்ளார்.
“ஆர்ப்பாட்டங்கள் சட்டத்திற்கு உட்பட்டு நடக்கும்போது அரசாங்கம், ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பேச்சு நடத்த எந்த ஆட்சேபனையும் இல்லை,” என்று திரு அபிசித் கூறினார்.
தாய்லாந்து ராணுவத் தளத்தில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் திரு அபிசித் பேசினார். பேச்சின் விவரம் பற்றி அவர் எதுவும் கூறவில்லை.

முக்கிய தருணத்தில் ஒபாமா இந்தோனீசியா வருகை

முக்கியமான கட்டத்தில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் 3 நாள் இந்தோனீசிய வருகை இடம் பெறுகிறது.
அடுத்த வாரம் திரு ஒபாமா தன் மனைவி, மகள்களுடன் இந்தோனீசியா வருகிறார்.
இந்தோனீசியா எடுத்து வரும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் அமெரிக்கா கொண்டுள்ள நம்பிக்கையை புலப்படுத்தும் வகையில் திரு ஒபாமாவின் வருகை அமைந்திருக்கும்.
இதனால் திரு ஒபாமாவின் இந்தோனீசிய வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
இந்த வருகையின்போது ஒபாமா, முக்கிய உரையாற்றவுள்ளார்.
இந்தோனீசியாவுடனான அமெரிக்க உறவு மேம்பட்டிருப்பதை புலப்படுத்துவதே ஒபாமாவின் 3 நாள் இந்தோனீசிய வருகையின் நோக்கம் என்று கூறப்படுகிறது.

அமெரிக்கரை விடுதலை செய்தது மியன்மார்

மியன்மாரில் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டிருந்த அமெரிக்கர் ஒருவரை மியன்மார் ராணுவ அரசு விடுதலை செய்துள்ளது.
அமெரிக்க மனித உரிமை குழுவைச் சேர்ந்த காவ் ஜா லிவின் என்பவர் ஏமாற்று, மோசடி ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் கடந்த மூன்று ஆண்டுகளாக மியன்மார் சிறை வைக்கப்பட்டிருந்தார்.
விடுவிக்கப்பட்ட அந்த அமெரிக்கர் நேற்று அங்குள்ள அமெரிக்கத் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.
முன்னதாக அவரை விடுதலை செய்யுமாறு அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுமார் 50 பேர் கையெழுத்திட்ட கடிதம் ஒன்று மியன்மாருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஐந்து அமெரிக்கர்கள் மீது பயங்கரவாதக் குற்றச்சாட்டு

பாகிஸ்தானில் கைது செய்யப்பட்ட அமெரிக்க இளையர்கள் 5 பேர் மீது பயங்கரவாத குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக அவர்களின் வழக்கறிஞர்கள் கூறினர்.
பாகிஸ்தானில் தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டியவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அந்த 5 பேரும் அந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளனர்.
அவர்கள் 18 வயதுக்கும் 25 வயதுக்கும் இடைப் பட்டவர்கள். சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் அவர்கள் கைது செய்யப்பட்டனர். குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
முன்னதாக அந்த 5 பேரையும் அமெரிக்காவுக்கு திருப்பி அனுப்ப பாகிஸ்தான் மறுப்பு தெரிவித்தது.

தைவான் அதிபரின் மகள்களுக்கு கொலை மிரட்டல்

தைவானிய அதிபர் மா யிங் ஜியோவின் இரு மகள்களுக்கு இணையப் பக்கத்தில் கொலை மிரட்டல் வந்ததைத் தொடர்ந்து அமெரிக்க போலிஸ் பாதுகாப்பை தைவான் நாடியுள்ளது.
திரு மாவின் இரு மகள்களும் தற்போது நியூயார்க்கில் பணி புரிகின்றனர். அவர்களுக்கு அமெரிக்கப் போலிசார் பாதுகாப்பு கொடுக்குமாறு அமெரிக்காவை தைவான் கேட்டுக்கொண்டுள்ளது.
2008-ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று அதிபராகப் பொறுப்பேற்ற திரு மாவின் செல்வாக்கு படிப்படியாக குறைந்து வருகிறது.

மீட்கப்பட்ட பிரிட்டிஷ் சிறுவன் குடும்பத்துடன் சேர்ந்தான்

பாகிஸ்தானில் கடத்தல்காரர்களிட மிருந்து மீட்கப்பட்ட பிரிட்டிஷ் சிறுவனான 5 வயது ஷாகில் சயீத், தன் குடும்பத்துடன் ஒன்று சேர்ந்திருக் கிறான்.
கடத்தல்காரர் களிடம் 10,000 பிரிட்டிஷ் பவுன் பிணைப் பணம் கொடுக்கப் பட்டு அச்சிறுவன் மீட்கப்பட்டுள்ளான்.
பாகிஸ்தானில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு அச்சிறுவன் தன் தந்தையுடன் வந்திருந்தபோது கடந்த 3-ந் தேதி மர்ம நபர்களால் கடத்தப்பட்டான்.
இதைத்தொடர்ந்து அனைத்துலக போலிஸ் உதவியுடன் 13 நாட்களுக்குப் பிறகு அச்சிறுவன் மீட்கப்பட்டுள்ளான்.

திபெத்திய மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

சீனாவில் உள்ள இரு நகரங்களில் இந்த வாரம் திபெத்திய மாணவர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். அவர்களில் சிலரை சீன அதிகாரிகள் கைது செய்ததாக குடியிருப்பாளர்கள் கூறினர்.
சீன ஆட்சிக்கு எதிராக திபெத்தியர்கள் முதன் முதலாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது மார்ச் மாதத்தில்தான். அப்போது ஆர்ப்பாட்டக்காரர்களை ஒடுக்க சீன அரசாங்கம் ஒடுக்கு முறையைக் கையாண்டது.
திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய் லாமா பத்து ஆண்டுகளுக்கு முன்பு திபெத்தை விட்டு தப்பி ஔடியதும் இந்த மார்ச் மாதத்தில்தான்.

பொன்சேகா விசாரணை ஒரே ரகசியம்

இலங்கையின் முன்னாள் ராணுவத் தலைவர் சரத் பொன்சேகா, ஒரு ராணுவ நீதிமன்றத்தில் நேற்று ஆஜரானார்.
ராணுவச் சீருடையில் இருந்தபோது அரசியலில் ஈடுபட்டதாகக் கூறும் குற்றச் சாட்டுகளின் பேரில் அவர் ஆஜரானார்.
விசாரணை, இலங்கை நாடாளுமன்றத் தேர்தலுக்கு இரண்டு நாட்கள் முந்திய நாளான ஏப்ரல் 6ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
என்றாலும் சரத் பொன்சேகா, ராணுவக் கொள்முதல் நடைமுறைகளை மீறியதாகக் கூறும் குற்றச் சாட்டுகளின் பேரில் இன்று ராணுவ நீதிமன்றத்தில் ஆஜராவார்.

சென்னைக்கு சில்க் ஏர்

சென்னைக்கும் பெங்களூருவுக்கும் செல்லும் விமான நிறுவனங்களின் பட்டியலில் வரும் ஜூன் மாதம் முதல் சில்க் ஏர் நிறுவனமும் சேரவுள்ளது.சென்னை, பெங்களூரு என்று இரு நகரங்களில் வலுவான வளர்ச்சி வாய்ப்புகள் உள்ளதால் இந்த இடங்களுக்குச் சில்க் ஏர் விரைவில் சே£வையைத் தொடங்கும் என்று சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான சில்க் ஏர் நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.தமிழ்நாட்டின் தலைநகரமாகத் திகழும் சென்னைக்கு வாரத்தில் ஏழு நாட்களுக்கும் எதிர்வரும் ஜூன் 14ம் தேதி முதல் சில்க் ஏர் செல்லவிருக்கிறது.கர்நாட்டக்காவில் உள்ள பெங்களூருவுக்கு மே 17ம் தேதி முதல

தென்கிழக்காசியாவுடன் அணுக்க உறவு, அமெரிக்காவுக்கு வலியுறுத்து

தென்கிழக்காசிய வட்டாரத்தில் அமெரிக்கா அதன் வர்த்தக, முதலீட்டு உறவுகளை மேலும் ஆழமாக்கவேண்டும் என்று துணைப் பிரதமர் டியோ சீ ஹியன் வலியுறுத்தியிருக்கிறார்.
“பல ஆசியான் நாடுகளுக்கு அமெரிக்கா தொடர்ந்து முக்கிய வியூகப் பங்காளியாக இருந்தாலும், வர்த்தக, முதலீட்டு உறவுகளில் அமெரிக்காவைச் சீனா மிஞ்சுகிறது” என்று வாஷிங்டனில் உள்ள வியூக, அனைத்துலகக் கல்வி நிலையத்தில் (CSIS) ஆற்றிய உரையில் அவர் குறிப்பிட்டார்.
உதாரணமாக, கடந்த ஆறு முதல் ஏழு ஆண்டுகளில், ஆசியானின் வர்த்தகப் பங்காளிகள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த அமெரிக்கா, இப்போது 4வது இடத்தில் உள்ளது.

Syndicate content
Copyright © 2006 Singapore Press Holdings Ltd. Co. Regn. No. 198402868E. All rights reserved.
82, Genting Lane, Singapore 349567 Tel: 6388 3838