மேற்கு ஜெர்மனியின் டுவிஸ்பர்க் நகரில் நடைபெற்ற, காதலர்கள் இசை விழா நிகழ்ச்சியில் பல்லாயிரக் கணக்கான காதலர்கள் சனிக்கிழமை அன்று கலந்துகொண்டனர்.
இதில் இவர்கள் பாதாள நடைபாதையில் சென்றுகொண்டிருந்த போது ஏற்பட்ட பதற்றம் காரணமாக பலர் முண்டியடித்துக்கொண்டு செல்ல ஆரம்பித்தனர்.
அப்பொழுது ஏற்பட்ட மக்கள் நெரிசலில் 19 பேர் உயிரிழந்ததாக பிபிசி செய்தித் தகவல் கூறுகிறது.
இவர்கள் தவிர, மேலும் ஏறக்குறைய 100 பேர் வரை காயமடைந்ததாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. இவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
முன்னதாக, கூட்டம் அதிகமாக இருப்பதை கண்ட போலிசார் அந்தப் பக்கமாக செல்ல விழைந்தோரைத் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டதாகவும் தெரிகிறது.
இந்தத் துயரச் சம்பவம் குறித்து நகர மற்றும் போலிசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
மேலும், இதுகுறித்து ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கெல் இறந்தவர்களின் குடும்பங்கள் மற்றும் நண்பர்களுக்கு தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார்.
“விழாவிற்கு வந்த இளையர்களுக்கு நிகழ்ந்த துயரம், வலி ஆகியவற்றுக் காக நான் வருந்துகிறேன்,” என்று ஜெர்மன் பிரதமர் கூறினார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் டுவிஸ்பர்க் நகர மேயர், முழு அளவிலான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.