ஜகார்த்தா
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் இந்தோனீசிய வருகைக்கு ஒரு வாரம் முன்னதாக, இந்தோனீசியப் போலிசாரும் ராணுவமும் சனிக்கிழமையன்று பயங்கரவாதத் தடுப்புப் பயிற்சிகளை நடத்தின.
தலைநகரிலுள்ள அனைத்துலக விமான நிலையம், பங்குச்சந்தை கட்டடம், சொகுசு ஔட்டல்கள், ஜகார்த்தாவுக்கு வடக்கே அமைந்துள்ள கடற்பகுதி போன்ற பல்வேறு இடங்களில் பயங்கரவாதத் தடுப்புப் பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.
“பயங்கரவாதம் தொடர்பான சம்பவங்களைக் கையாளும் திறனை ராணுவத்தினரும் போலிசாரும் வளர்த்துக்கொள்ள இப்பயிற்சிகள் உதவும் என்று நம்புகிறோம்” என்றார் இந்தோனீசிய ராணுவப் பேச்சாளர் சகோம் தம்போன்.