நிகழ்வுகள்

tm logo
Friday, April 27th, 2012

சிங்கப்பூர், தெலுக் ஆயர் சாலையிலுள்ள நாகூர் தர்காவில் 22,4,2012 ஞாயிற்றுக்கிழமை நாகூர் ஆண்டகையின் பேரில் மௌலித் ஓதி, கொடியேற்ற நிகழ்ச்சியும் நடத்தி வைக்கப்பட்டது.

மகான் ஷாஹுல் ஹமீது பாதுஷா நாயகம் அவர்களின் கந்தூரி நிறைவு விழா எதிர்வரும் மே மாதம் 1ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணி முதல் 12,40 வரை நடைபெறும்.

Friday, November 25th, 2011
சிங்கப்பூர் தென்கிழக்கு ஆசியான் கல்விக் கழகம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ஆப்கானிஸ்தான் பற்றிய கருத்தரங்கு ஒன்றை நடத்தவுள்ளது. அந்தக் கருத்தரங்கில் ஆப் கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 10 பேச்சாளர்கள் உரையாற்றவிருக் கின்றனர். பேச்சாளர்களில் இருவர் அந் நாட்டு அதிபர் தேர்தலில் போட்டி யிட விரும்பியவர்கள் என தென் கிழக்கு ஆசியான் கல்விக் கழகத் தின் தலைவர் திரு கோபிநாத் பிள்ளை தெரிவித்தார். தெற்காசியா பற்றி நடைபெற்ற 7வது அனைத்துலக மாநாட்டில் திரு பிள்ளை இதனை வெளி யிட்டார்.
Friday, November 25th, 2011
சிங்கப்பூரின் நிர்மாணத்தில் இந்திய சிங்கப்பூரர்களும் முக்கிய பங்காற்றியுள்ளனர் என்று துணைப் பிரதமர் தர்மன் சண்முகரத்னம் தெரிவித்துள்ளார். கல்வித் தேர்ச்சியில் தேசிய சராசரிக்கும் இந்தியர்களுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைத்துள்ளோம். இன்னும் சாதிக்க வேண்டி யுள்ளது, குறிப்பாக கணித பாடத்தில். எனினும் தொடக்கத்தில் இருந்த இடைவெளியைக் குறைப் பதில் இந்திய சமூகம் சாதித்துள் ளது. இதற்கு சிண்டாவும் அதன் பங்காளி அமைப்புகளும் பங்காற்றி யுள்ளன என்றார் திரு தர்மன். மற்றது முன்பைவிட, இந்திய சமூக தற்போது மேலும் ஒருங் கிணைந்துள்ளது.
Wednesday, November 23rd, 2011
சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றம் இம்மாதம் 12, 13 ஆகிய தேதிகளில் ‘பெரியார் கண்ட வாழ்வியல்’ எனும் தலைப்பு கொண்ட விழாவை பி. கோவிந்தசாமி பிள்ளை திருமண மண்டபத்தில் நடத்தி யது. முதல் நாள் பெரியார் புகைப்பட கண்காட்சி மற்றும் மாணவர்களுடன் ‘பகுத்தறிந்து முன்னேறு’ என்ற தலைப்பில் கலந்துரையாடல் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக வந்தி ருந்த செம்பவாங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு விக்ரம் நாயர் தமிழில் உரையாற்றினார். விழாவில் அமெரிக்க பன்னாட்டு மைய இயக்குநர் டாக்டர் சோம. இளங்கோவன், பேராசிரியர் சுப. வீரபாண்டியன், தமிழக திராவிடர் கழகத் தலைவர் திரு கி.
Sunday, November 13th, 2011
பெரியார் சமூக சேவை மன்ற ஏற்பாட்டில் இரண்டாண்டுக்கு ஒருமுறை நடைபெறும் “பெரியார் கண்ட வாழ்வியல்” இவ்வாண்டு இரண்டு நாள் விழாவாக சிங்கப் பூரில் நடைபெறுகிறது. சிராங்கூன் ரோட்டில் உள்ள காந்தி மண்டபத்தில் நேற்று சனிக் கிழமை (12.11.2011) “பெரியார் புகைப்பட கண்காட்சி” மற்றும் “பகுத்தறிந்து முன்னேறு” என்ற தலைப்பில் மாணவர்களுடன் ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சி நடை பெற்றது. பெரியார் புகைப்பட கண் காட்சியை சிங்கப்பூர் மூத்தக் கவிர் க.து.மு. இக்பால் அவர்கள் காலை 10 மணிக்குத் தொடக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து சிங்கப் பூர் நகைச்சுவை நடிகர் ஆரூர் சபாபதி மற்றும் சமூக தொண்டர் கே.
Wednesday, October 12th, 2011
நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (என்டியு) தனது ஆய்வு கண்டுபிடிப்புகளை இன் றும் நாளையும் காட்சிக்கு வைக்கிறது. ஆய்வாளர்களின் கண்டுபிடிப் புகளைப் பார்வையிட விரும்பும் பொதுமக்களும் அறிவியல் ஆர்வ லர்களும் பல்கலைகழகத் தின் ‘ரிசர்ச் டெக்னோ ப்ளாஸா’விற்கு வருகை அளிக்கலாம். பல்கலைக்கழகத்தின் புதிய ஊடக புத்தாக்க கல்விக்கழகமும் (இன்ஸ்டிட்யுட் ஆஃப் மீடியா இன்னொவேஷன்) அறிமுகம் காணவுள்ளது.
Wednesday, June 22nd, 2011
சிங்கப்பூர் கண் ஆராய்ச்சி கல்விக் கழகம் “கதைகள் சொல் லும் கண்கள்” என்ற மாறுபட்ட கண்காட்சியை நடத்துகிறது.
பிரபலங்களின் கண்களைக் கொண்ட கலைப்படைப்புகள் இடம்பெற்றுள்ள இந்தக் கண்காட்சியில் நவீன சிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூ, பிரபலங்கள் குர்மிட் சிங், ஃபேன் வோங், விளையாட்டு பிரபலம் சி.குணாளன் போன்றோரின் கண்களைச் சித்திரிக்கும் 20 பிரித்தியேக படங்கள் இடம்பெற்றுள்ளன.
கண் ஆய்வுக்கு நிதி திரட்டும் நடவடிக்கைகளில் ஒன்றாக இந்தக் கண்காட்சி ஏற்பாடு செய்யபப்பட்டுள்ளது. ஜூலை 21ம் தேதி நடைபெறும் பெரும் விருந்தில் ஏலமும் இடம்பெறும்.
Tuesday, June 14th, 2011

ஆசிய நாகரிக அரும்பொருளகத்தில் வந்திறங்கியிருக்கும் இந்த களிமண் வீரர்கள்  சீனாவின் முதல் பேரரசரின் களிமண் வீரர்கள் படையில் இடம்பெற்றிருந்தவர்கள். சீனாவின் ஷான்ஸி மாநில கலாசாரப் பிரிவு, கலாசார மேம்பாட்டு மையம் ஆகியவற்றுடன் இணைந்து ‘மண்சிலை வீரர்கள்: முதல் பேரரசரும் பெருமைகளும்’ என்ற கண்காட்சியை ஆசிய நாகரிக அரும்பொருளகம் ஏற்பாடு செய்துள்ளது. களிமண் வீரர்களின் இந்தக் கண்காட்சி ஜூன் மாதம் 24ம் தேதி முதல் அக்டோபர் 16ம் தேதி வரை நடைபெறும். 

Syndicate content