உல‌க‌ம்

புதுடெல்லி: சென்ற ஆண்டு அமெரிக்க விசாக்களுக்கான விண்ணப்பங்களில் பத்தில் ஒன்று இந்தியக் குடிமக்களிடமிருந்து வந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் அது 60 விழுக்காடு அதிகம்.
கோலாலம்பூர்: மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமுக்குக் கொலை மிரட்டல் விடுத்த லாரி ஓட்டுநருக்கு செவ்வாய்க்கிழமை (ஜனவரி 30) ஆறு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
பிரிட்டிஷ் கொலம்பியா: அனைத்துலக மாணவர்களைச் சேர்த்துக்கொள்ள விழையும் புதிய கல்லூரிகளின் விண்ணப்பங்கள், 2026ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் என்று பிரிட்டிஷ் கொலம்பியா மாநில அரசாங்கம் திங்கட்கிழமை (ஜனவரி 29) தெரிவித்தது.
சியாங்மாய்: தாய்லாந்தின் சியாங்மாய் நகரில் கரடியிடமிருந்து தப்பிக்க, சுவிஸ் ஆடவர் ஒருவர் தமது கையையே வெட்டிக்கொண்டார்.
சிட்னி: சிட்னி துறைமுகத்துக்கு அருகில் உள்ள கடற்பகுதியில் நீந்திக்கொண்டிருந்த பெண் ஒருவர் சுறாவால் தாக்கப்பட்டார். இதில் அப்பெண்ணின் வலது காலில் மிகக் கடுமையான காயங்கள் ஏற்பட்டதாக ஆஸ்திரேலிய ஊடகம் தெரிவித்தது.