Tuesday, February 7th, 2012
கடும் மழை பெய்தால் சையது ஆல்வி ரோட் டில் வெள்ளம் பெருக்கெடுத்துவிடும்.
அதற்கு தீர்வு காணும் பொருட்டு பொதுப் பயனீட்டுக் கழகம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் அங்கு வடிகால் திட்டப் பணி களை மேற்கொள்ளத் தொடங்கியது.
அதற்காக அந்தச் சாலையின் பெரும் பகுதி அடைக்கப்பட்டதால், அந்தப் பகுதியை வாகனங்களும் வாடிக்கையாளர்களும் பயன்படுத்துவதில்லை என்பதால் அந்தப் பகுதியில் உள்ள கடைகளும் வர்த்தக பாதிப்பை எதிர்நோக்கியுள்ளன.
அந்தப் பகுதியில் பத்து உணவகங்கள், இரண்டு ஹோட்டல்கள், இரண்டு காற்கறிக் கடைகள் ஆகியவற்றுக்கு வர்த்தக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தங்களின் வர்த்தகம் 50 விழுக்காடு சரிந்துள்ளது என்று அங்குள்ள உணவங்களில் நான்கின் ஊழியர்கள் கவலை தெரிவித்தனர்.
தலப்பாக்கட்டு பிரியாணி உணவகத்தின் உரிமையாளர் திரு பரேஷ் திரிவேதி, 40, தமது உணவகத்தின் முன்புறமுள்ள திறந்தவெளியில் மக்கள் நடந்து செல்வதால் அது தமது வாடிக்கையாளர்கள் சிரமப்படுகின்றனர் என்றார்.
முழு விவரம் 7.2.2012 தமிழ் முரசில்