சிங்க‌ப்பூர்

tm logo
Wednesday, February 8th, 2012
கல்வித் துறையில் மேம்பட்ட ஒத்துழைப்புக்கு சிங்கப்பூரும் அமெரிக்காவும் இணக்கம் தெரிவித்துள்ளன.
அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட்டன.
வாஷிங்டனில் வியாழக்கிழமை அன்று நடைபெற்ற கையெழுத் திடும் நிகழ்ச்சியில் சிங்கப்பூரின் கல்வி அமைச்சர் ஹெங் சுவீ கியட்டும் அமெரிக்க கல்வி அமைச்சர் ஆர்ன் டன்கனும் கலந்து கொண்டனர்.
அமெரிக்காவுக்கும் சிங்கப் பூருக்கும் இடையே ஆழமான, பரந்த உறவுக்கு கல்வித் துறை ஒத்துழைப்பு முக்கிய அம்சமாக விளங்குகிறது என்று நேற்று வெளியிட்ட அறிக்கையில் கல்வி அமைச்சு குறிப்பிட்டது.
tm logo
Wednesday, February 8th, 2012
- முஹம்மது ஹாஷிம் -

சிங்கப்பூரின் குற்றச்செயல் விகிதம் கடந்த ஆண்டு 7 விழுக்காடு குறைந்தள்ளது. கடந்த 20 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இதுவே ஆகக் குறைவான சரிவு என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு குற்றச்செயல் நிலவரம் குறித்த விவரங்கள் நேற்று காலை போலிஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் வெளியிடப்பட்டது.
ஆனால் கடந்த ஆண்டு  இணையத் தளம் வாயிலாக நடந்த காதல் தொடர்பான குற்றச்செயல் முக்கிய கவலைக்குரிய அம்சமாக இருந்தது என்று நேற்று போலிசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவங்களால் 2010ஆம் ஆண்டில் ஏமாற்றப்பட்டவர்கள் இழந்த தொகை $824,000ஐ எட்டியது. இது 2011ஆம் ஆண்டில் $2.3 மில்லியனுக்கு எட்டியது.
tm logo
Tuesday, February 7th, 2012
இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே சிகிச்சைக்காக சிங்கப்பூர் வரவுள்ளதாக இலங்கையின் தகவல் சாதனச் செய்திகள் தெரிவிக்கின்றன.
மவுண்ட்  எலிசபெத் மருத்துவ மனையில் மகிந்த ராஜபக்சே சிகிச்சை பெறுவதற்கான ஏற்பாடுகளைச் செய்யும் பொறுப்பு மகிந்தவின் ஆலோசகர் சஜின் வாஸ் குணவர்தனவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலும், சிகிச்சைக்காக ராஜபக்சே செல்லும் குழுவினருக் கான தங்குமிட வசதிகளை செய்யும் பொறுப்பை இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பெய்ரிசுக்கு நெருக்கமான வர்த்தகர் ஒருவர் ஏற்றுக் கொண்டுள்ளார்.
சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லவே ராஜபக்சே திட்டமிட்டி ருந்தார்.
எனினும் அங்குள்ள சிக்கல்களைக் கருத்தில் கொண்டே சிங்கப்பூர் செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப் படுகிறது.

முழு விவரம் 7.2.2012 தமிழ் முரசில்
australian-muruga paktan
Tuesday, February 7th, 2012
நான்கு மாத திலன் ஹரிதாசும் அவனது அம்மா, 38 வயது திருமதி தர்மலிங்கமும் நேற்று முருகனுக்கு முடி காணிக்கை செலுத்தினர். ஆஸ்திரேலியாவில் வசிக்கும் திருமதி தர்மலிங்கம் தைப்பூசத்தில் தெண்டாயுதபாணிக்கு முடி காணிக்கை செலுத்து வதற்காக சிங்கப்பூர் வந்திருந்தார். குழந்தை ஆரோக்கியமாகப் பிறந்தால், தானும் குழந்தையும் முருகனுக்கு முடி காணிக்கை செலுத்துவதாக வேண்டிக் கொண்டிருந்தாராம்.
தைப்பூசத்தின் போது முடி இறக்குவது, குறிப்பாக குழந்தைகளுக்கு முதல் முடி இறக்குவது பாரம்பரியமாகத் தொடரும் வழமைகளில் ஒன்று. டேங் ரோடு தெண்டாயுதபாணி கோயிலில் கடந்த 10 நாட்களாக பக்தர்கள் முடி காணிக்கை அளித்து வருகின்றனர். இந்த ஆண்டு 8,000 பேர் வரை முடி காணிக்கை அளிப்பர் என்று  எதிர்பார்க்கப்படுகிறது. முடி இறக்கும் பணியைச் செய்பவர்கள் அனைவரும் தொண்டூழியர்கள். சிலர் தங்கள் ஊரில் விடுப்பு எடுத்து வந்து இங்கு முடி இறக்கும் தொண்டைச் செய்கின்றனர்.
தைப்பூசத் திருவிழாவான இன்று குழந்தைகளுக்கு மட்டுமே முடி இறக்கும் சேவை வழங்கப்படும். படம்: ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ்
tm logo
Tuesday, February 7th, 2012

உற்பத்தித் தொழில்துறைக்குத் தேவைப்படும் நிர்வாகத் திறனாளர்களை உருவாக்குவதற்காக ஒரு மில்லியன் வெள்ளி செலவிலான உபகாரச் சம்பளத் திட்டம் நேற்று தொடங்கி வைக்கப்பட்டது.

சிங்கப்பூர் ஊழியரணி மேம் பாட்டு வாரியம், ஜெர்மன் ஆசியா அறிவியல் தொழில்நுட்பக் கழகம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியான இதற்கு ‘உற்பத்தித்துறை ஸ்டெப் உபகாரச் சம்பளத் திட்டம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

தகுதியான நபர்கள் தேர்ந் தெடுக்கப்பட்டு அவர்கள் தகுந்த நிறுவனங்களிடம் பரிந்துரை செய்யப்படுவார்கள். பின்னர் அவர்களை அந்த நிறுவனங்கள் சிங்கப்பூர் ஊழியரணி மேம்பாட்டு வாரியத் தின் நிதி ஆதரவுடன் பயிற்சி அளிக்கும்.

MINISTER K.SHANMUGAM
Tuesday, February 7th, 2012
சீனாவுடனான உறுதியான, உண்மையான நல்லுறவை சிங்கப்பூர் மதிப்பதாக வெளியுறவு அமைச்சர் கா. சண்முகம் தெரிவித்துள்ளார்.
அறிமுகப்  பயணமாக ஒருவாரம் அமெரிக்காவுக்குச் சென்றுள்ள அமைச்சர் அடுத்து சீனாவுக்கு செல்லவுள்ளார்.
வரும் வியாழக்கிழமை முதல் சனிக்கிழமை வரை அவர் சீனாவில் இருப்பார் என்று அறியப் படுகிறது.
அந்தப் பயணத்தின்போது அவர் சீன வெளியுறவு அமைச்சர் யாங் ëஜய்ச்சியை சந்திக்க வுள்ளார்.
இருநாடுகளிக்கிடையேயான உறவு மற்றும் ஒத்துழைப்பை  மேலும் விரிவுபடுத்துவது  குறித்து அந்நாட்டுத் தலைவர்களுடன் ஆலோசிப்பதை  மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாக திரு சண்முகம் கூறியுள்ளார்.

முழு விவரம் 7.2.2012 தமிழ் முரசில்
syedalwird
Tuesday, February 7th, 2012
கடும் மழை பெய்தால் சையது ஆல்வி ரோட் டில் வெள்ளம் பெருக்கெடுத்துவிடும்.
அதற்கு தீர்வு காணும் பொருட்டு பொதுப் பயனீட்டுக் கழகம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் அங்கு வடிகால் திட்டப் பணி களை மேற்கொள்ளத் தொடங்கியது.
அதற்காக அந்தச் சாலையின் பெரும் பகுதி அடைக்கப்பட்டதால், அந்தப் பகுதியை வாகனங்களும் வாடிக்கையாளர்களும் பயன்படுத்துவதில்லை என்பதால் அந்தப் பகுதியில் உள்ள கடைகளும் வர்த்தக பாதிப்பை எதிர்நோக்கியுள்ளன.
அந்தப் பகுதியில் பத்து உணவகங்கள், இரண்டு ஹோட்டல்கள், இரண்டு காற்கறிக் கடைகள் ஆகியவற்றுக்கு வர்த்தக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தங்களின் வர்த்தகம் 50 விழுக்காடு சரிந்துள்ளது என்று அங்குள்ள உணவங்களில் நான்கின் ஊழியர்கள் கவலை தெரிவித்தனர்.

தலப்பாக்கட்டு பிரியாணி உணவகத்தின் உரிமையாளர் திரு பரேஷ் திரிவேதி, 40, தமது உணவகத்தின் முன்புறமுள்ள திறந்தவெளியில் மக்கள் நடந்து செல்வதால் அது தமது வாடிக்கையாளர்கள் சிரமப்படுகின்றனர் என்றார்.

முழு விவரம் 7.2.2012 தமிழ் முரசில்
thaipusam2012
Tuesday, February 7th, 2012

தைப்பூசம் 2012 திருவிழாவின் காவடிகள் புறப்பாடு நேற்று வெள்ளி ரத பவனியுடன் தொடங்கியது. நேற்றுக் காலை 5.15 மணிக்கு அருள்மிகு தெண்டாயுதபாணி வெள்ளி ரதத்தில் அமர்ந்து தேங் ரோட்டில் உள்ள தமது ஆலயத்திலிருந்து புறப்பட்டார்.

காலை 6.30 மணிக்கு வெள்ளி ரதம்  சவுத் பிரிட்ஜ் ரோடு அருள்மிக மாரியம்மன் கோயிலை வந்தடைந்தது. அங்கு அன்னை யின் ஆசியைப் பெற்று முருகக் கடவுள் அங்கிருந்து புறப்பட்டு கியோங் செய்க் ரோடு அருள்மிகு லயன் சித்தி விநாயகர் கோவிலை வந்தடைந்தார்.

பின்னர் நேற்று மாலை 5.30 மணிக்கு  அருள்மிகு லயன் சித்தி விநாயகர் கோவி லிலிருந்து 135 சர்க்கரை காவடிகள் ஏந்தி பக்தர்கள் முன் செல்ல, அருள்மிகு தெண்டாயுதபாணி மத்திய வர்த்தக வட்டா ரத்தைக் கடந்து பல இடங்களில் நின்று பக்தர்களின் காணிக்கைகளை ஏற்றுக் கொண்டு, இரவு 9.00 மணி வாக்கில் தேங் ரோட்டில் உள்ள தமது ஆலயத்திற்கு வந்து சேர்ந்தார் என்று கூறினார் அருள்மிகு தெண்டாயுதபாணி ஆலய நிர் வாகக் குழுத் தலைவர் திரு ப.சொ.நா. ராஜேந்திரன்.


முழு விவரம் 7.2.2012 தமிழ் முரசில்

exdpmtohchinchai
Tuesday, February 7th, 2012

மக்கள் செயல் கட்சியின் முதலாவது தலைவரும், முன்னாள் துணைப் பிரதமருமான காலஞ் சென்ற டாக்டர் டோ சின் சாய், மிகுந்த கருணையுள்ளம் படைத்தவர் என்று முன்னாள் அதிபர் எஸ்.ஆர். நாதன் தெரிவித்து உள்ளார்.

தாம் கூறவிருக்கும் கருத்துககளை மிகவும் ஆணித்தரமான முன் வைப்பதில் டாக்டர் கோ, கைதேர்ந்தவர் என்றும் திரு நாதன் கூறினார்.

டாக்டர் டோ சின் சாய் கடந்த வெள்ளிக்கிழமையன்று தமது 90வது வயதில் காலமானார்.
அவரது நல்லுடலுக்கு அஞ்சலி செலுத்த நாட்டுத் தலைவர்கள், அமைச்சர்கள், முன்னாள் நாடாளு மன்ற உறுப்பினர்கள், இன்னாள் நாடாளுமன்ற உறுப்பனர்கள் ஆகி யோருடன் அடித்தளத் தலைவர்கள்,   பொதுமக்கள் ஆகியோரும் தொடர்ந்து அவரது இல்லத்துக்குச் சென்ற வண்ணம் உள்ளனர்.

சிங்கப்பூரைத் தோற்றுவித்த தலைவர்களில் ஒருவரான டாக்டர் டோவுக்கு அஞ்சலி செலுத்த முன்னாள் அதிபர் எஸ்.ஆர். நாதன் நேற்று பிற்பகலில் அங்கு சென்றி ருந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திரு நாதன், டாக்டர் டோ தமது நண்பர்களிடத்தில் நேர்மை யாக நடந்து கொண்டவர். எதை செய்தாலும் மன உறுதியுடன் செய்து முடிப்பவர் என்றும் புகழாரம் சூட்டி னார்.
முழு விவரம் 7.2.2012 தமிழ் முரசில்

ghimmoh
Monday, February 6th, 2012
சிங்கப்பூரில் கிம் மோவில் நேற்று நெட்டை மரம் ஒன்று திடீரென்று வேரோடு பெயர்ந்து நேரே ஒரு காரின் மீது விழுந்துவிட்டது. விழுந்த வேகத்தில் மரத்தின் எடை தாங்க முடியாமல் காரின் கண்ணாடி நொறுங்கிப்போனது.
  இச்சம்பவம் நேற்று நண்பகல் சுமார் 12 மணிக்கு நிகழ்ந்தது. இந்த விபத்தைக் காட்டும் படங்களை  லிண்டா என்பவர் குடிமக்கள் இணையத்தளமான ஸ்டோம்ப்பில் வெளியிட்டுள்ளார்.
முழு விவரம் 6.2.2012 தமிழ் முரசில்
Syndicate content