புக்கிட் பாஞ்சாங்கில் டிசம்பர் 15ம் தேதி நடந்த வாகன விபத்து தொடர்பாக விசாரணை செய்யுமாறு ருமேனிய வெளியுறவு அமைச்சு அதன் அரசாங்க வழக்கறிஞர் அலுவலகத்தைக் கேட்டுக் கொண்டுள்ளது.
சிங்கப்பூரில் உள்ள ருமேனியத் தூதரகத்தின் பொறுப்பாளர் இந்த விபத்துடன் சம்பந்தப்படுத்தப்படுவது இதற்குக் காரணம்.
ருமேனிய வெளியுறவு அமைச்சு நடத்திய உள் விசாரணையின் முடிவில், இச்சம்பவம் குறித்து சட்டப்படி குற்றவாளியை அடையாளம் காணவும், விபத்தின் சூழ்நிலையை அறியவும் வெளியுறவு அமைச்சால் இயலாது என தீர்மானிக்கப்பட்டதாக அமைச்சு செவ்வாய்க் கிழமை வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.