fontsize: 60% 70% 80% 90%

விளையாட்டு

மற்றொரு புற்றுநோய் மையம்

சிங்கப்பூரில் கவலையளிக்கும் அளவுக்கு அதிகரித்து வரும் புற்றுநோயை எதிர்கொள்ள மற்றோரு புற்றுநோய் மையம் தொடங்கப்பட்டுள்ளது.
தேசிய பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள இந்த புற்றுநோய்க் கழகம் ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதுடன், நோயாளிகளுக்குச் சிகிச்சையும் வழங்கும். சிங்கப்பூரின் நான்கில் ஒரு பங்கு புற்றுநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்.
தற்போது தேசிய புற்று மையம் 70% புற்றுநோயாளிகளுக்குச் சிகிச்சை வழங்குகிறது.
தேசிய பல்கலைக்கழக புற்றுநோய் கல்விக் கழகத்தை மூத்த அமைச்சர் கோ சோக் டோங் இன்று அதிகாரபூர்வமாகத் திறந்து வைப்பார்.

தூதரக அதிகாரியை ருமேனியா விசாரிக்கும்

புக்கிட் பாஞ்சாங்கில் டிசம்பர் 15ம் தேதி நடந்த வாகன விபத்து தொடர்பாக விசாரணை செய்யுமாறு ருமேனிய வெளியுறவு அமைச்சு அதன் அரசாங்க வழக்கறிஞர் அலுவலகத்தைக் கேட்டுக் கொண்டுள்ளது.
சிங்கப்பூரில் உள்ள ருமேனியத் தூதரகத்தின் பொறுப்பாளர் இந்த விபத்துடன் சம்பந்தப்படுத்தப்படுவது இதற்குக் காரணம்.
ருமேனிய வெளியுறவு அமைச்சு நடத்திய உள் விசாரணையின் முடிவில், இச்சம்பவம் குறித்து சட்டப்படி குற்றவாளியை அடையாளம் காணவும், விபத்தின் சூழ்நிலையை அறியவும் வெளியுறவு அமைச்சால் இயலாது என தீர்மானிக்கப்பட்டதாக அமைச்சு செவ்வாய்க் கிழமை வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.

சிங்கப்பூர்: வெற்றி மீது வெற்றி

தென் கிழக்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகளை வெற்றியுடன் துவக்கிய சிங்கப்பூர் நீர்ப்பந்துக் குழு (வாட்டர் போலோ), 3வது போட்டியிலும் நேற்று தொடர்ந்து வெற்றி கண்டது. 25வது தென் கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகள் லாவோஸின் வியந்தியன் நகரில் நடக்கின்றன. இம்மாதம் 9ம் தேதி முதல் 18ம் தேதி வரை அப்போட்டிகள் நடைபெறும். அப்போட்டிகளின் குழுப் பிரிவு ஆட்டங்கள் சில முன்னதாகவே துவங்கிவிட்டன. அவற்றில் சிங்கப்பூர் நீர்ப்பந்துக் குழு, நேற்றைய மூன்றாவது போட்டியில் தாய்லாந்து அணியை 8-5 என்ற கோல் கணக்கில் வென்றது.

தரவரிசையில் முதலிடம்: தலைக்கு ரூ. 25 லட்சம்

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2- 0 என்று வெற்றி பெற்று ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசையில் முதன் முறையாக முதலிடம் பிடித்த இந்திய அணி வீரர்களுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தலா ரூ.25லட்சம் பரிசு அறிவித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணிக்கு ஞாயிற்றுக்கிழமை பொன்னான நாள். தனது 77 ஆண்டு கால டெஸ்ட் வரலாற்றில் முதல் முறையாக ஐசிசி அனைத்துலகத் தர வரிசையில் ‘நம்பர்-1’ இடம் பெற்றுச் சாதித்தது.
இப்பெருமையைப் பெற இலங்கைக்கு எதிரான மும்பை டெஸ்ட் வெற்றி முக்கியக் காரணமாக அமைந்தது.

நடுவர் மீது சங்ககாரா குறை

இந்தியாவுடனான டெஸ்ட் தொடரில் இரு இன்னிங்ஸ் தோல்வி அடைந்த இலங்கை அணித் தலைவர் சங்ககாரா, நடுவர்களின் தீர்ப்பைக் குறை கூறினார்.
நடுவர் தீர்ப்புக்கு மேல்முறையீடு செய்யும் முறை இல்லாததால் தங்கள் அணி 500 ஓட்டங்களுக்கும் மேல் இழந்தது என்று அவர் வருந்தியுள்ளார்.
“நாங்கள் இந்தியாவால் முற்றிலும் ஆதிக்கம் செலுத்தப்பட்டுத் தோற்றோம் என்பதில் எங்களுக்கு கருத்து வேறுபாடு இல்லை. ஆனால் உலகில் மற்ற டெஸ்ட் போட்டிகளில் நடுவர் மேல்முறையீட்டு முறை உள்ள நிலையில் இந்தத் தொடரில் இல்லாதது பெரிய குறை,” என்றார் சங்ககாரா.

உட்ஸ்: மேலும் பல பெண்கள்

உலகின் முதல்தர கோல்ஃப் வீரர் டைகர் உட்ஸ் வாழ்க்கையை கேவலப்படுத்திக் கொண்டுள்ள அவரது ‘தோழி’யர் வரிசையில் 9வதாக மேலும் ஒரு பெண் பேசியுள்ளார். கர்ப்பிணியாய் இருந்த மனைவி வெளியில் சென்ற நேரத்தில் டைகர், வீட்டுக்குள் எப்படித் தம்முடன் உறவு கொண்டார் என மிண்டி லாட்டன் என்ற அப்பெண் விலாவாரியாய் விளக்கி உள்ளார். இதன் மூலம் டைகர் விவகாரம், கள்ளத் தொடர்புகள் என்பதில் இருந்து பாலியல் பித்துப் பிடித்தவர் என்ற ரீதியில் திசைமாறத் துவங்கியுள்ளது.

சர்ச்சைகளில் சிக்கித் தவிக்கிறார் டைகர் உட்ஸ்

உலகின் பணக்கார விளையாட்டான கோல்ஃப் ஆட்டக்காரர் டைகர் உட்ஸ் தற்போது பல சர்ச்சைகளில் சிக்கித் தவிக்கிறார்.
உலகின் ‘நம்பர் 1’ கோல்ஃப் வீரரான அமெரிக்காவின் டைகர் உட்ஸ், அண்மையில் ஃபுளோரிடாவில் உள்ள அவரது வீட்டின் அருகே கார் விபத்தில் சிக்கினார்.
ஒரு கார் விபத்தில் சிக்கினாலும் சிக்கினார், டைகர் உட்ஸின் உள் விஷயங்கள் ஒவ்வொன்றாக அம்பலமாகி அவரை வெளியில் தலைகாட்ட விடாமல் செய்து வருகின்றன.
நவம்பர் 27ம் தேதி புளோரிடாவில் உள்ள தமது வீட்டிலிருந்து காரில் கிளம்பிய உட்ஸ் விபத்தில் சிக்கினார். இதில் அவரது முகத்தில் காயம் ஏற்பட்டது.

கனவு நனவானது: தமிழகத்தின் அஸ்வின்

இலங்கைக்கு எதிரான இரண்டு 20 ஓவர் போட்டி மற்றும் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
20 ஓவர் போட்டிக்கான அணியில் இருந்து ஜாகீர்கான், ஹர்பஜன் சிங் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
அவர்களுக்கு பதிலாக தமிழக ஆல் ரவுண்டர் ஆர். அஸ்வின், அசோக் திண்டா (பெங்கால்) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
23 வயதான அஸ்வின் சென்னையைச் சேர்ந்தவர். 24 முதல் தர போட்டியில் விளையாடி 900 ஓட்டங்கள் எடுத்துள்ளார். அதிகபட்சமாய் 107 ஓட்டம் எடுத்துள்ளார்.
ஐ.பி.எல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றுள்ளார்.

கனவு நனவானது: தமிழகத்தின் அஸ்வின்

இலங்கைக்கு எதிரான இரண்டு 20 ஓவர் போட்டி மற்றும் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
20 ஓவர் போட்டிக்கான அணியில் இருந்து ஜாகீர்கான், ஹர்பஜன் சிங் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
அவர்களுக்கு பதிலாக தமிழக ஆல் ரவுண்டர் ஆர். அஸ்வின், அசோக் திண்டா (பெங்கால்) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
23 வயதான அஸ்வின் சென்னையைச் சேர்ந்தவர். 24 முதல் தர போட்டியில் விளையாடி 900 ஓட்டங்கள் எடுத்துள்ளார். அதிகபட்சமாய் 107 ஓட்டம் எடுத்துள்ளார்.
ஐ.பி.எல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றுள்ளார்.

மலேசிய வ~ராங்கனையிடம் சரிந்த சாய்னா

உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி மலேசியாவின் ஜோஹூர் பாஹ்ருவில் நேற்றுமுன் தினம் தொடங்கியது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவின் தொடக்க ஆட்டத்தில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் 13-12, 21-13, 14-21 என்ற செட் கணக்கில் மலேசியாவின் மிகி சூ வாங்கிடம் அதிர்ச்சித் தோல்வி அடைந்தார். ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள சாய்னா எஞ்சிய இரு ஆட்டத்திலும் வென்றால் மட்டுமே அரைஇறுதி வாய்ப்பை பெற முடியும்.

Syndicate content
Copyright © 2006 Singapore Press Holdings Ltd. Co. Regn. No. 198402868E. All rights reserved.
82, Genting Lane, Singapore 349567 Tel: 6388 3838