Saturday, January 28th, 2012
சசிகலா குழுவினரை தமிழக அரசியலிருந்து அடியோடு துடைத் தொழிக்கும் வகையில் தொடர்ந்து அதிரடி நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறார் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா.
அதனையொட்டி, தமிழக அமைச்சரவையிலிருந்து இரு அமைச்சர்கள் திடீரென நீக்கப் பட்டுள்ளனர். ஒருவருக்கு அமைச் சரவைப் பொறுப்பு மாறியுள்ளது.
பள்ளிக்கல்வி, விளையாட்டு இளையர் நலன் அமைச்சராக இருந்த அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ண மூர்த்தி நீக்கப்பட்டுள்ளார். அந்தப் பொறுப்பு வழங்கப்படும் என்.ஆர்.சிவபதிக்கு கூடுதலாக தொல்லியல், தமிழ் கலாசாரத் துறையும் சேர்த்து வழங்கப்படுகிறது.
வருவாய்த்துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி நீக்கப் பட்டு, கே.ஏ.செங்கோட்டையனுக்கு அப்பதவி வழங்கப்பட்டுள்ளது.
புதிதாக, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக என்.சுப்பிர மணியன் நியமிக்கப்பட்டுள்ளார். புதிய அமைச்சர்கள் நேற்று பதவியேற்றனர்.
இதற்கிடையே, சசிகலாவின் சித்தப்பா மருமகன் ராவணன் நில அபகரிப்பு புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
முழு விவரம் 28.1.2012 தமிழ் முரசில்