- தமிழவேல்-
கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் பின்னோக்கிப் பார்த்தோமானால், ஆஸ்திரியாவின் வியென்னா நகரில் ஐரோப்பிய கிண்ண இறுதிப் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தது.
ஸ்பெயினும் ஜெர்மனியும் மோதிய அந்த ஆட்டத்தில் ஃபெர்னான்டோ டொரெஸ் போட்ட ஒரே கோலினால் ஜெர்மன் இதயங்களை உடைத்துவிட்டு கிண்ணத்தைக் கைப்பற்றியது ஸ்பெயின்.
இன்று உலகக் கிண்ண அரை இறுதி ஆட்டத்தில் ஸ்பெயினுடன் மோதும் ஜெர்மன¬யின் அந்த தோல்விக்குப் பழிவாங்கும் தருணம் வந்துவிட்டது.
அன்றும் ஜெர்மனியின் பயிற்றுவிப்பாளாராக இருந்தவர் ஜோக்கின் லோ. அந்த தோல்விக்குப் பின்னர் தமது அணியை அதிரடியாக மாற்றி இளம் ரத்தத்தை அணியில் பரவவிட்டார். அதற்குக் கை மேல் பலனும் இதுவரை கி£ந்த்துள்ளது.
இந்த உலகக் கிண்ணத்திலேயே மிகவும் அற்புதமான, கவர்ச்சியான ஆட்டத்தை ஜெர்மனியின் இளையர்கள் வெளிக்காட்டி வருகிறார்கள். இரண்டாம் சுற்று ஆட்டத்தில் 4-1 என்ற கோல் எண்ணிக்கையில் வீழ்த்திய ஜெர்மனி கால் இறுதியில் அர்ஜென்டினாவை 4-0 என்ற கோல் எண்ணிக்கையில் பதம் பார்த்தது.
கண் இமைக்கும் நேரத்தில் தற்காப்பிலிருந்து எதிர்த்தாக்குதல் நடத்தக்கூடிய வல்லுனர்களாகத் திகழ்கின்றனர் ஜெர்மானியர்கள்.
ஆனால் இதுவரை மொத்தம் 4 கோல்கள் அடித்த தோமஸ் முல்லர் தடை காரணமாக இந்த ஆட்டத்தில் இடம்பெறாதது ஜெர்மனிக்கு பெரிய பின்னடைவைத் தரும்.
ஆனால் ஸ்பெயின் அணியிலும் திறமையான ஆட்டக்காரர்களுக்குப் பஞ்சமில்லை. இன¬யெஸ்டா, அலோன்_ஸ„, ஸ„வி, புயோல் போன்ற அனுபவமிக்க ஆட்டக்காரர்கள் ஸ்பெயின் அணியில் உண்டு.
இந்த உலகக் கிண்ணத்தில் ஆக அதிகமான கோல்களைப் போட்ட டேவிட் வியாவின் கோல் வேட்டை தொடர வேண்டும் என்பது ஸ்பெயின் ரசிகர்களின் வேண்டுதல்.
ஏனென¬ல் இதுவரை ஸ்பெயின் அடித்த மொத்தம் ஆறு கோல்களில் ஐந்தைப் போட்டவர் வியா.
எப்போதெல்லாம் நெருக்கடியாக இருக்கிறதோ அப்போதெல்லாம் கோல் அடித்து ஸ்பெயினைக் காப்பாற்றி வருகிறார் வியா.
பதிலுக்கு ஜெர்மனி குழுவில் அதன் அனுபவமிக்க முன்னணி ஆட்டக்காரர் மிரசோவ் கிளோசர் இதுவரை நான்கு கோல்களைப் போட்டுள்ளார்.
இரு அணிகளின் தத்தம் எதிர்த்தரப்பினரைக் கட்டுப்படுத்தும் வியூகங்களுடன் களம் இறங்குகின்றன. இந்த ஆட்டம் காற்பந்து ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் அதே நேரத்தில் காற்பந்து கணிப்பாளர்களுக்குப் பெரும் தலைவலியைக் கொடுக்கும் என்பது திண்ணம்.