மலேசியாவின் புகழ்பெற்ற வலைப்பதிவாளரான ராஜா பெட்ராவை, மலேசியப் போலிசார் சனிக்கிழமை 2 மணி நேரம் விசாரணை செய்ததாக என்எஸ்டி தகவல் கூறியது.
மங்கோலியப் பெண் அல்டன்துயா கொலை தொடர்பில் ராஜா பெட்ரா செய்த சத்திய பிரமாணம் குறித்து போலிசார் அவரை விசாரித்தனர்.
ராஜா பெட்ரா, செந்தூல் போலிஸ் நிலையத்துக்குச் சென்றபோது அவரது வழக்கறிஞரையும் உடன் அழைத்துச் சென்றதாக போலிஸ் வட்டாரங்கள் கூறின.
அல்டன்துயா கொலை செய்யப்பட்ட இடத்தில் துணைப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் துணைவியார் ரோஸ்மா மன்சூர் உள்பட மூவர் இருந்ததாக ராஜா பெட்ரோ, ஜூன் 18 ஆம் தேதி சத்யப் பிரமாண வாக்குமூலம் கொடுத்தார்.