இளையர் முரசு

சுயமாகத் தயாரிக்கப்பட்ட மென்பொருள் உதவியுடன் தங்கம், பங்குச்சந்தை, அந்நியச் செலாவணி விலைகளின் ஏற்ற இறக்கத்தைக் கணிக்கும் பணியில் இரு இளையர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இரட்டையர்களான தீபனும் திவ்யனும் இவ்வாண்டின் சிண்டா இளையர் விருதைப் பெற்றுள்ளனர். வசதிகுறைந்த குடும்பத்தைச் சேர்ந்த இவர்கள், சிண்டா என்ற ஊன்றுகோல் மட்டும் இல்லையெனில் தங்களின் வாழ்வு மேம்பட்டிருக்காது என்று உணர்ச்சிபொங்க கூறினர்.
தன் தந்தை இவ்வாண்டு பிப்ரவரி மாதம் இறந்தபின், அவர் வடிவமைத்த சிங்கப்பூர் டீ சட்டைகளை விற்றுவருகிறார் 23 வயது நாச்சியப்பன் லெட்சுமணன்.
தமிழ் முரசு நாளிதழுக்கு முக்கிய மைல்கல்லாக அமைந்தது அதன் புதிய செயலி அறிமுகம். நாளிதழ் நேற்று தமிழ் சமூகத்தினரின் அடையாளமாக அதன் செயலியை அறிமுகப்படுத்தியது. மின்னிலக்கமயமாதலை நோக்கிச் செல்லும் இக்காலகட்டத்தில் இதன் மூலம் இளையர்கள் அதிகப் பயன் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செயலியில் அடங்கியுள்ள அம்சங்களைப் பற்றியும் செயலியைப் பயன்படுத்திய அனுபவங்களைப் பற்றியும் இளையர்கள் சிலரிடம் கேட்டு வந்தது இளையர் முரசு.
காலை வெயில் சுட்டெரித்த போதிலும் தமிழ் முரசு செயலியின் வெளியீட்டு விழாவைக் காண வந்தோரின் உற்சாகம் குறையவில்லை. தீபாவளிச் சந்தையின் கூடாரத்திற்கு மத்தியில் மலர்ச்சரங்கள், தொம்பைகள், வண்ணப் பைகள் என அலங்காரமயமான சூழலுக்கு நடுவே பார்வையாளர்கள் அமர்ந்து செயலியின் அறிமுக நிகழ்ச்சியைக் கண்டனர்.