இந்தியப் பிரதமராக இருந்த ராஜிவ் காந்தியும் சோவியத் அதிபராக இருந்த கோர்பச்சேவும் 1988ல் ஓர் உடன்பாட்டில் கையெழுத்திட்டனர்.
அதன்படி, தமிழ்நாட்டின் தென் பக்கம் கூடங்குளம் என்ற ஊரில் இரண்டு அணு உலைகளை அமைக்க இரண்டு அரசாங்கங்களும் இணங்கின.
ஆனால், சோவியத் யூனியன் 1991க்குப் பிறகு உடைந்தது. அமெரிக்காவும் எதிர்த்தது. அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் என்ற அமைப்பும் எதிர்த்தது.
அதனால் கூடங்குளம் திட்டம் 10 ஆண்டுகளுக்கு முடங்கியது. கட்டுமானப் பணிகளைத் தொடங்க முடியவில்லை.
கடைசியாக, 1997ல் பணிகள் தொடங்கின. 2001ல் உலை திட்டத்தின் மதிப்பு 3,000 பில்லியன் டாலர் (13,615 கோடி ரூபாய்). அணு உலை திட்டத்துக்காக கூடங்குளத்தில் சிறு துறைமுகமே உருவானது.
கூடுதலாக நான்கு உலைகளை அங்கு அமைக்க 2008ல் இந்தியா-ரஷ்யா மறுபடியும் பேச்சு தொடங்கின. பாதுகாப்பு ஏற்பாடுகளை மேம்படுத்த பல்வேறு அம்சங்களும் அந்தப் பேச்சில் இடம்பெற்றன.
அதன்படி, 2009 டிசம்பரில் முதல் உலை, 2010 மார்ச்சில் இரண்டாவது உலை இயங்க திட்டமிடப்பட்டது.
மறுபடியும் தாமதங்கள் காரணமாக இந்தத் தேதிகள் அதிகாரபூர்வமான முறையில், முறையே 2011 ஜூன், 2012 மார்ச் என்று மாற்றி வைக்கப்பட்டன. திட்ட மதிப்பும் 14,000 கோடி ரூபாய்க்கு உயர்ந்தது.
இந்த நிலையில், கூடங்குளம் அணுஉலைகளை வடி வமைத்த ரஷ்ய தலைமை வடிவமைப்பாளர் செர்கி ரிட்ஜ்யாவ் 2011 ஜூன் 11ம் தேதி விமான விபத்தில் மரணமடைந்தார்.
பல எதிர்ப்புகளை எல்லாம் சமாளித்து உலைகள் இயங்க இருந்த வேளையில், 2011 அக்டோபரில் பெரிய அளவில் கூடங்குளம் எதிர்ப்புப் போராட்டம் தொடங்கியது.
இதற்கிடையே, இந்தியாவின் மிக முக்கிய அமைப்புகள் அனைத்தும் கூடங்குளத்தை சோதனையிட்டு அந்த உலைகள் அதிநவீன பாதுகாப்பு அம்சங்களைக்கொண்டு இருப்பதாக வும் நிலடுக்கம் போன்ற இயற்கைப் பேரிடர்களுக்கு ஈடு கொடுக்கக்கூடிய இடத்தில், வகையில் உலை வடிவமைக்கப் பட்டு அமைக்கப்பட்டு உள்ளது என்றும் சான்றிதழ் வழங்கின.
இந்தியாவின் உயர் அறிவியல் மேதைகளில் ஒருவரான அப்துல் கலாம் உள்ளிட்ட பெரியவர்கள் சான்றிதழ் அளித்தனர்.
மத்திய பிரதேசத்தில் கடந்த 1980களில் நிகழ்ந்த போபால் விஷ வாயு சம்பவம் போல் பேரிடர் நிகழ வாய்ப்பே இல்லை என்று திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டது.
அண்மையில் ஜப்பானில் கொடிய நிலநடுக்கம் நிகழ்ந்த போதும் அங்கு அணு உலை கதிரியக்கப் பேரிடர் பெரிய அளவில் எழவில்லை என்பதும் சுட்டிக்காட்டப்பட்டது.
மத்திய அரசும் தமிழக அரசும் நியமித்த குழுக்களும் பச்சைக்கொடி காட்டிவிட்டன. ஆனாலும் அணுசக்திக்கு எதிரான இயக்கம் மக்கள் சக்தியை திரட்டிக்கொண்டு இன்னமும் போராடுகிறது.
போராட்டத்துக்கு அமெரிக்க அரசு சாரா அமைப்புகள் காரணம் என்று பிரதமர் மன்மோகன் சிங் புகார் சொன்னார்.
கூடங்குளம் அமைந்துள்ள சங்கரன் கோவில் தொகுதியில் இடைத் தேர்தல் வந்ததால் தமிழக ஆளும் தரப்பு தாமதமாக உலைக்கு ஆதரவு தெரிவித்தது என்றும் கூறப்படுகிறது.
தமிழ்நாடு எல்லா அம்சங்களிலும் உலகக் கண்ணோட்டத் துடன் கூடிய மக்களைக் கொண்டு இருந்தாலும் இயற்கை வளங்களைப் பொறுத்தவரை பூகோள ரீதியில் பழிவாங்கப்பட்ட மாநிலம். மிக முக்கியமாக நீர் வளம், மின் வளம் போதிய அளவுக்கு இல்லை.
ஆற்று நீருக்காக அடுத்த மாநிலங்களைச் சார்ந்து இருக்கும் மாநிலம். அதேபோல், மின்சாரத்துக்கும் கொடுக்கல் வாங்கல் அணுகுமுறையில் காலம் தள்ளுகிறது.
தன்னிறைவு பெறா மாநிலம். மின்சாரத்தைப் பொறுத்தவரை அண்மைய பல ஆண்டுகளாகவே மாநிலம் பெரும் பற்றாக்குறையை எதிர்நோக்கி வருகிறது.
இந்த நிலையில், கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்ற கதையாக கூடங்குளம் ஆகி இருக்கிறது. கூடங்குளம், தண்ணீர்ப் பிரச்சினையில் இருந்து வேறுபட்டது.
கர்நாடகம், கேரளம், ஆந்திரம் ஆகிய பக்கத்து மாநிலங்கள் மறுப்பதால் தமிழகம் தண்ணீர் இன்றி வாடுகிறது. ஆனால் கூடங்குளம் அப்படி அல்ல. இது தமிழ்நாட்டின் உள்ளுக்குள் இருந்தே கிளம்பி இருக்கும் பிரச்சினை.
அரசியல்வாதிகள், போராட்டக்காரர்கள் உள்ளிட்ட எல்லாத் தரப்பினரும் இதை உணர்ந்துகொண்டு செயல்பட்டால் கூடங் குளம் ஒளிரும் என்பது திண்ணம்.
சம்சாரம் இல்லாமல் குடும்பம் இல்லை, மின்சாரம் இல்லா மல் உலகம் இல்லை என்ற நிலைதான் இன்றைய உண்மை. மின்சாரத்துக்கு இயற்கை வளங்களும் குறைந்து வரும் சூழலில் அணுசக்தியை விட்டால் வேறு வழி இல்லாத நிலை வேகமாக உருவாகிவருகிறது.
இந்தியா இதில் விதிவிலக்கல்ல. தமிழ்நாடும் இதில் இருந்து ஒதுங்க முடியாது என்பதே உண்மை.