fontsize: 60% 70% 80% 90%

ம‌லேசியா

மலேசிய தொலைக்காட்சியில் தமிழ், சீன நிகழ்ச்சிகளுக்கு கூடுதல் நேரம்

அடுத்த ஆண்டு மலேசியாவின் அரசாங்க ஒளிபரப்பான ரேடியோ டெலிவிஷன் மலேசியாவின் (ஆர்டிஎம்) ‘டிவி2’ ஒளி அலையில் அதிகமான தமிழ், சீன நிகழ்ச்சிகள் ஒளியேறவுள்ளன.

தகவல் தொடர்பு மற்றும் கலாசார அமைச்சர் டத்தோ { ராயஸ் யாத்திம் இத் தகவலைத் தெரிவித்ததாக பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் சாபா, சரவாக் மக்களின் வாழ்வையும் குறிக்கோள்களையும் பிரதிபலிக்கும் நிகழ்ச்சிகளும் இடம் பெறும் என அவர் கூறியுள்ளார்.

மலேசியர்களைப் பற்றிய பார்வையையும் கருத்தையும் மேம்படுத்தும் வகையில் அடுத்த ஆண்டில் புதிய நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன.

விளக்கப்படங்கள், நாடகங்கள் மட்டுமின்றி அரசாங்கக் கொள்கைகளை தெளிவுபடுத்தி, மக்களுக்குத் தெளிவான புரிந்துணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளும் ஒளியேறும் என்றும் அமைச்சர் டத்தோ { ராயிஸ் குறிப்பிட்டுள்ளார்.

இந்தோனீசியாவில் நடைபெறும் மலேசியாவுக்கு எதிரான இயக்கத்தை மலேசியர்கள் ஒரு சவாலாக ஏற்றுக்கொண்டு, மேன்மேலும் வெற்றிகளைப் பெற முயற்சி செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மலேசிய தொலைக்காட்சியில் தமிழ், சீன நிகழ்ச்சிகளுக்கு கூடுதல் நேரம்

அடுத்த ஆண்டு மலேசியாவின் அரசாங்க ஒளிபரப்பான ரேடியோ டெலிவிஷன் மலேசியாவின் (ஆர்டிஎம்) ‘டிவி2’ ஒளி அலையில் அதிகமான தமிழ், சீன நிகழ்ச்சிகள் ஒளியேறவுள்ளன.

தகவல் தொடர்பு மற்றும் கலாசார அமைச்சர் டத்தோ { ராயஸ் யாத்திம் இத் தகவலைத் தெரிவித்ததாக பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் சாபா, சரவாக் மக்களின் வாழ்வையும் குறிக்கோள்களையும் பிரதிபலிக்கும் நிகழ்ச்சிகளும் இடம் பெறும் என அவர் கூறியுள்ளார்.

மலேசியர்களைப் பற்றிய பார்வையையும் கருத்தையும் மேம்படுத்தும் வகையில் அடுத்த ஆண்டில் புதிய நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன.

விளக்கப்படங்கள், நாடகங்கள் மட்டுமின்றி அரசாங்கக் கொள்கைகளை தெளிவுபடுத்தி, மக்களுக்குத் தெளிவான புரிந்துணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளும் ஒளியேறும் என்றும் அமைச்சர் டத்தோ { ராயிஸ் குறிப்பிட்டுள்ளார்.
இந்தோனீசியாவில் நடைபெறும் மலேசியாவுக்கு எதிரான இயக்கத்தை மலேசியர்கள் ஒரு சவாலாக ஏற்றுக்கொண்டு, மேன்மேலும் வெற்றிகளைப் பெற முயற்சி செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

குண்டடி பட்டு இரத்தம் சொட்ட ஓடிய கலையரசு

மலேசிய அரசியல்வாதி ஒருவர் மூன்று குண்டுகள் உடலில் பாய்ந்த நிலையிலும் 200 மீட்டர் ஓடி ஒரு போலிஸ் நிலையத்துக்குள் நுழைந்தார். அந்த அரசியல்வாதி மலேசியாவில் காஜாங் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார்.

இப்போது அவரின் உடல்நிலை சீராக இருப்பதாக மலேசியாவின் தி ஸ்டார் செய்தித்தாள் தெரிவித்தது.

மலேசிய இந்தியர் காங்கிரஸ் இளையர் பிரிவு தலைவர் ஏ கலையரசு.(வயது 40களில்)
இவர், சென்ற புதன்கிழமை மாலை நேரத்தில், இதர இரண்டு பேருடன், ஜாலான் ராஜா ஹருனில் இருக்கும் உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டு இருந்தார்.

கலையரசுவின் மனைவியும் மகளும் உணவகத்தில் காசு கொடுக்கும் இடத்தில் இருந்தனர். அப்போது மோட்டர் சைக்கிள் தலைக்கவசத்தைக் கையில் பிடித்த படி ஒருவர் கலையரசுவை நோக்கி நடந்து வந்தார். வந்தவர், கலையரசுவை நோக்கி திடீரென்று ஐந்து தடவை படபடவென்று துப்பாக்கியால் சுட்டார்.

துப்பாக்கியுடன் ஆடவர் வந்ததைப் பார்த்துவிட்ட கலையரசு எழுந்து ஓடினார்.

என்றாலும் அவர் கையில் ஒரு குண்டு பாய்ந்தது. வயிற்றில் இரண்டு குண்டுகள் பாய்ந்தன. இதர இரண்டு குண்டுகள் சாப்பாட்டு மேசையைப் பதம் பார்த்தன.

என்றாலும் கலையரசு சுதாரித்துக் கொண்டு ஓடி, 200 மீட்டர் தொலைவில் இருக்கும் போலிஸ் நிலையத்துக்குள் புகுந்து உதவி நாடினார். அவரை மருத்துவ மனைக்கு உடனடியாகப் போலிஸ் கொண்டு சென்றது.

இதற்கிடையே, மாலை 6-40 மணிக்கு இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நிகழ்ந்தது என்பதை உதவி போலிஸ் ஆணையாளர் சஹாருதின் ஷிமூத், உறுதிப் படுத்தினார்.

“சம்பவம் நிகழ்ந்தபோது உணவகத்துக்கு வெளியே மோட்டார் சைக்கிளில் ஒருவர் காத்துக்கொண்டு இருந்தார். துப்பாக்கியால் சுட்ட ஆசாமி அந்த மோட்டார் சைக்கிளில் தப்பி விட்டார். அந்த வாகனத்தின் பதிவு எண் தெரியவில்லை.

“சம்வத்துக்கான நோக்கம் குறித்து புலன்விசர£ணை நடக்கிறது. பழிக்குப் பழி சம்பவ மாகவும் இது இருக்கக்கூடும்,” என்றார் போலிஸ் அதிகாரி.

“உணவகத்துக்கு அடிக்கடி வருபவர் கலையரசு. தன்னை நோக்கி ஒருவர் வந்ததைப் பார்த்து தப்பித்து ஓடினார் கலையரசு. ஆனால் துப்பாக்கிக்கார ஆடவர், கண் மூடி திறப்பதற்குள் படபட வென்று சுட்டுத் தள்ளினார்.
“கலையரசு காயம் அடைந்து ஓடினார்,” என்று தன் பெயரைக் கூற விரும்பாத காப்பிக் கடை உரிமையாளர் சொன்னார்.

மலேசியாவில் பரவும் எச்1என்1 காய்ச்சல்

மலேசியாவில் எச்1என்1 காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு வாரத்தில் 25 விழுக்கிடு அதிகரித்திருப்பதாக மலேசிய சுகாதார அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

ஆகஸ்ட் 8-ம் தேதிக்கும் 14-ம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் 64 பேருக்கு இக்காய்ச்சல் தொற்றியதாக சுகாதார தலைமை இயக்குநர் டாக்டர் முகம்மது இஸ்மாயில் கூறினார்.

மலேசியாவில் தற்போது மொத்தம் 15,584 பேருக்கு இக்காய்ச்சல் பரவியுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதே போன்ற மற்றொரு வகை காய்ச்சல் புதிதாக 7 பேருக்கு பரவியிருப்பதாகவும் ஐந்து மாநிலங்களில் அக்கிருமி பரவியிருப்பது கண்டுபிடிக்கப் பட்டதாகவும் அவர் கூறினார்.

அரசியல் உதவியாளர் மரணம் குறித்த சர்ச்சை

மலேசியாவில் எதிர்க்கட்சிக் கூட்டணி ஆளும் சிலாங்கூர் மாநில அரசு குறித்த ஊழல் விசாரணைக்கு வந்திருந்த டியோ பெங் ஹாக் என்ற உதவியாளரின் மரணம் தற்கொலையல்ல என்று பிரபல தாய்லாந்து பிரேதப் பரிசோதனை நிபுணர் கூறியுள்ளார்.

அந்த அரசியல் உதவியாளர் சென்ற 2009 ஜூலை மாதம் விசாரணைக்குப் பின் மலேசியாவின் லஞ்ச ஒழிப்பு இலாகா கட்டடத் தின் அடிவாரத்தில் இறந்து கிடந்ததாக ஏஎப்பி செய்தித் தகவல் கூறுகிறது.

மனைவி, மகள் மீது திராவகத்தை வீசிய கணவன் கைது

மலேசியாவில் உலு திரங்கானுவில் கணவன்-மனைவிக்கு இடையில் ஏற்பட்ட தகராற்றின்போது மனைவி மீது திராவகத்தை ஊற்றிய கணவனை கைது செய்திருப்பதாக மலேசியப் போலிசார் கூறினர்.

திராவக வீச்சில் படுகாயமடைந்த சிகு சைமாகு என்ற அந்தப் பெண் கோலத் திரங்கானு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரைப் பார்க்க மருத்துவமனைக்குச் சென்றிருந்த மாநில முதலமைச்சர் அகமது சையத் அவருக்கு ஆறுதல் கூறியதுடன் அவரது குடும்பத்துக்கு மாநில அரசு உதவும் என உறுதியளித்தார்.

“கட்டிய மனைவி மீது திராவகம் வீசிய அந்த கொடியவனை எந்தக் காலத்திலும் மன்னிக்க மாட்டேன்" என்று பாதிப்புக்குள்ளான அந்தப் பெண் கூறியதாக தி ஸ்டார் தகவல் கூறியது.

இந்த திராவக வீச்சில் அவரின் எட்டு வயது சிறுமி நூருல் டயாத்துல் பாஸினா கலீப்பும் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அன்வர் மீதான குற்றச்சாட்டை கைவிட நீதிபதி மறுப்பு

மலேசிய எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராகிம் தன் மீதான ஓரினப் புணர்ச்சி குற்றச்சாட்டை கைவிடக் கோரி நீதிமன்றத்தில் செய்திருந்த மனுவை கோலாலம்பூர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

அன்வர் மீது ஓரினப் புணர்ச்சி புகார் கொடுத்திருக்கம் சைபுல் புகாரி அஸ்லானுக்கும் அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஃபாரா அஸ்லினா லத்திப்புக்கும் இடையில் உறவு இருந்ததாகக் கூறப்படுவதைத் தொடர்ந்து தன் மீதான வழக்கைத் தள்ளுபடி செய்யக் கோரி அன்வர் ஆகஸ்ட் 2-ம் தேதி கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

சைபுலுக்கும் ஃபாரவுக்கும் இடையில் உறவு இருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டை அரசு தரப்பு மறுக்கவும் இல்லை, உறுதிப்படுத்தவும் இல்லை என்பதால் அந்த விவகாரம் உண்மையாக இருக்கலாம் என்று நீதிமன்றம் கருதுவதாக நீதிபதி ஜபிடின் முகம்மது டியா கூறினார்.

ஆனால் அந்த உறவு விவகராம் அரசு தரப்பின் நேர்மையை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை என்று அரசு தரப்பு கூறுவதை ஏற்பதாகவும் நீதிபதி கூறினார்.

ஃபாரா அஸ்லினா லத்திப்புக்கு அரசுத் தரப்பு ஆவணங்களைப் பெறும் வாய்ப்பு இல்லை என்று விசாரணை அதிகாரி ஜுட் பெரேராவும் அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் முகம்மது ஹனாபியா ஜக்கரியாவும் தாக்கல் செய்த பிரமாண வாக்குமூல அடிப்படையில் இம்முடிவுக்கு வருவதாகவும் நீதிபதி கூறினார்.

“விசாரணை பத்திரங்களையோ ஆவணங்களையோ பெறும் வாய்ப்பு ஃபாராவுக்கு இல்லை என்கிறபோது, சைபுல் புகாரிக்கும் அந்த ஆவணங்களை ஃபாரா வழியாக பெறும் வாய்ப்பு இருந்திருக்காது,” என்று அரசு தரப்பினர் தங்கள் வாக்குமூலத்தில் கூறியிருப்பதையும் நீதிபதி சுட்டிக்காட்டினார்.

குற்றம் சாட்டப்பட்டவரையோ சாட்சிகளையோ விசாரிக்கும் பொறுப்பில் ஃபாரா இல்லை என்றும் நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணைகளைப் பற்றி குறிப்பெடுப்பது மட்டுமே அவரது பணியாக இருந்தது என்றும் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் தங்கள் வாக்குமூலத்தில் கூறியுள்ளனர்.

சைபுல் புகாரிக்கும் ஃபாரா அஸ்லினாவுக்கும் தொடர்பு இருந்ததாக வெளிவந்த செய்தி அடிப்படையில் தன் மீதான வழக்கைத் தள்ளுபடி செய்யக் கோரி அன்வர் மனுச் செய்திருந்தார்.

அதனையடுத்து ஃபாரா அஸ்லினா, அரசுத்தரப்பு வழக்கறிஞர் குழுவிலிருந்து நீக்கப்பட்டார்.

கோலாலம்பூரை சிறந்த நகராக மாற்ற 10 ஆண்டு காலத் திட்டம்

மலேசியாவில் கோலாலம்பூர் நகரம் இன்னும் பத்து ஆண்டுகளில் மிகப்பெரிய நகரமாகவும் மக்கள் வசிப்பதற்கான சிறந்த இடமாகவும் மாற்றப்படும் என்று மலேசிய அரசாங்கம் கூறியுள்ளது.

மேம்பட்ட நீர் முகப்புகள், நவீன போக்குவரத்து வசதிகள், சுரங்க ரயில்கள் என இன்னும் பல வசதிகளை மக்கள் எதிர்பார்க்கலாம் என்று பிரதமர் அலுவலக அமைச்சர் நூர் முகம்மது யாகூப் கூறினார்.

மலேசியப் பொருளியல் வளர்ச்சியை ஊக்குவிப்பதும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதும் இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் என்றும் அவர் சொன்னார். இன்னும் 10 ஆண்டுகளில் மக்கள் வசிப்பதற்கான மிகச் சிறந்த இடமாக கோலாலம்பூர் திகழும் என்று அவர் சொன்னார்.

விசாலமான நடைபாதைகள், கூரை நடைபாதைகள், கழிவுகளை அகற்றுவதற்கு நவீன முறை போன்ற வசதிகளும் மேம்பாட்டுத் திட்டத்தில் இடம் பெற்றிருப்பதாக நூர் முகம்மது கூறினார்.

மக்கள் இப்போது சிறந்த சுற்றுச் சூழலைக் கொண்ட பகுதியிலேயே வசிக்கவும் வேலை செய்யவும் விரும்புகின்றனர். 2020-ம் ஆண்டுக்குள் பத்து மலேசியர்களில் 7 பேர் பெரிய கோலாலம்பூர் போன்ற நகரப் பகுதிகளிலேயே வசிப்பார்கள் என்றும் அமைச்சர் சொன்னார்.

மலேசியர்களை தக்க வைத்துக் கொள்ளவும் வெளிநாட்டு திறனாளர்களை ஈர்க்கவும் பெரிய கோலாலம்பூர் உதவும் என்றும் அவர் சொன்னார். நாட்டின் வருவாயும் அப்போது அதிகரிக்கும் என்றார் அவர்.

தேவாலயத்திற்குத் தீ: சகோதரர்களுக்கு 5 ஆண்டு சிறை

மலேசியாவில் தாமான் மெலாவதியில் உள்ள மெட்ரோ தபெர்நெக்கல் தேவாலயத்திற்குத் தீ வைத்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்த இரு மலேசிய சகோதரர்கள் குற்றவாளிகள் என கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

ராஜா முகம்மது பைசல் ராஜா இப்ராகிம், ராஜா முகம்மது இட்ஸ„ம் சகோதரர்கள் இந்த ஆண்டு ஜனவரி மாதம் அந்த தேவாலயத்திற்குத் தீ வைத்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப் பட்டிருந்தது.

மலேசியாவில் முஸ்லிம் அல்லாத வர்கள் ‘அல்லாஹ்’ எனும் சொல்லை பயன்படுத்துவது தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சையைத் தொடர்ந்து அவ்விரு சகோதரர்களும் அந்த தேவாலத்திற்குத் தீ வைத்ததாகக் கூறப் பட்டது. அந்த தீ வைப்பு சம்பவத்தில் அந்த மெட்ரோ தேவாலய முதல் மாடி சேதம் அடைந்தது.

குற்றம் சாட்டப்பட்ட இருவரும் அளித்த சாட்சியத்தில் முரண் பாடுகள் இருந்தன என்று நீதிபதி கோமதி சுப்பையா கூறினார்.
“அவர்களின் நண்பர் அளித்த சாட்சியம் நம்பக்கூடியதல்ல. அது கற்பனையானது என்பதோடு சம்பவத் திற்குப் பின்னர் உருவாக்கப்பட்டதாகும்,” என்று நீதிபதி கூறினார்.

அவ்விரு சகோதரர் களின் சார்பில் செய்யப் பட்ட கருணை மனுவிற்குப் பின்னர், அவர்கள் ஒவ்வொரு வருக்கும் தலா 5 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப் பட்டது.

மலேசியாவை விட்டுச் செல்ல 430,000 பேருக்குத் தடை

மலேசியாவில் கிட்டத்தட்ட அரை மில்லியன் பேர் அந்நாட்டை விட்டுச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

சுமார் 424,654 பேர் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

வரிப் பணம் செலுத்தாதவர்கள், படிப்புக்காக வாங்கிய கடன் தொகையை செலுத்தாதவர்கள், நொடித்துப் போனவர்கள் என்று அறிவிக்கப்பட்டவர்கள் ஆகியோர் இந்தப் பட்டியலில் சேர்க்கப் பட்டுள்ளனர்.

டான் ஸ்ரீ, டத்தோ ஸ்ரீ போன்ற உயர் பதவிகளை வகிக்கும் சிலரும் இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பதாக மலேசியத் தகவல்கள் கூறின.

உள்நாட்டு வருவாய்த் துறை, குடிநுழைவுத் துறை உள்ளிட்ட 13 அரசாங்க அமைப்புகள் கறுப்பு பட்டியலை தயாரித்துள்ளன.
இப்பட்டியலில் இடம் பெற்றுள்ள 196,473 பேர் நொடித்துப் போனவர்கள் என்று அறிவிக்கப்பட்டவர்கள் என்று கூறப்படுகிறது.

Syndicate content
Copyright © 2006 Singapore Press Holdings Ltd. Co. Regn. No. 198402868E. All rights reserved.
82, Genting Lane, Singapore 349567 Tel: 6388 3838