பாசிர் ரிஸ் கடற்கரை மீண்டும் திறப்பு
Saturday, January 28th, 2012
தேசிய சுற்றுப்புற வாரியத்தால், நீரின் தரம் மேம்படுத்தப்பட்ட தால், பாசிர் ரிஸ் கடற்கரை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக நேற்று முதல் திறந்துவிடப்பட்டது. அந்தக் கடற்பகுதியில் உள்ள நீரின் தரம், ‘சுமார்’ நிலையில் இருந்து ‘நல்ல’ நிலைக்கு உயர்த்தப்பட்டது.
‘நல்ல’ மற்றும் ‘மிக நல்ல’ நிலைகளைப் பெற்ற கடற்கரைப் பகுதிகள் மட்டுமே, நீச்சல், வேக்போர்டிங் போன்ற உடலை நனைக்கும் நீர் விளையாட்டுகளுக்கு உகந்தவை என உலக சுகாதார நிறுவனம் வழிமுறை களை நிர்ணயித்துள்ளது.
பழைய மதகுகளில் இருந்து கசியும் நீர், அருகாமையில் உள்ள கப்பல்கள் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலைகளில் இருந்து வெளியாகும் நீர் ஆகியவற்றால், முன்னர் ‘சுமார்’ தரத்தை பாசிர் ரிஸ் கடற்கரை பெற்றிருந்தது.
முழு விவரம் 28.1.2012 தமிழ் முரசில்



