தாயைக் கொன்றதாக மகன் மீது குற்றச்சாட்டு

Saturday, January 28th, 2012
abdul muthalif
யூனோஸ் கிரசென்ட் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பின் சமையல் அறையில்  54  வயது  பெண்மணி கொலை செய்யப்பட்டுக் கிடந்த சம்பவம் தொடர்பாக, அவரது மகன் மீது கொலைக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
உதவி அழைப்பின் பேரில் போலிஸ் அங்கு சென்றபோது, குளமாகத் தேங்கி நின்ற ரத்தத் தின் நடுவே அந்த மாது அசைவற்றுக் கிடந்தார்.
வியாழக்கிழமை பிற்பகல் 2.28 மணிக்கு அவசர அழைப்பு கிடைத்ததாக போலிஸ் தெரி வித்தது. சற்று நேரத்தில் அங்கு வந்து சேர்ந்த துணை மருத்துவப் படையினர், 10 நிமிடங்களுக்குப் பின்னர் அந்தப் பெண்ணின் உயிர் பிரிந்துவிட்டதாக அறிவித்தனர்.
திருமதி ஹஸ்னா என்று அழைக்கப்படும் அப்பெண்ணின் உடலில் பல வெட்டுக் காயங்கள் காணப்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.


முழு விவரம் 28.1.2012 தமிழ் முரசில்