மக்களும் அரசும் சேர்ந்து பணியாற்றவேண்டும்: பிரதமர்

Saturday, January 28th, 2012
tm logo
சமூகமும் மக்கள் தொகையும் நிலையாக இருக்காது. ஆகையால் சிங்கப்பூரர்களும் அதன் தலைவர்களும் இணைந்து பணியாற்றி, சிங்கப்பூரை ஆட்சி புரிய புதிய வழிகளைக் கண்டறி வேண்டும் என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.
சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெறும் உலக பொரு ளியல் மாநாட்டுக்குச் சென்றிருக்
கும் திரு லீ, அங்கு நடந்த ஒரு பேட்டியில் இவ்வாறு கருத் துரைத்தார்.
சிங்கப்பூர் சமூகத்தில் ஏற்பட்டு உள்ள பற்பல மாற்றங்கள் மக்கள் தொகையின் சில பிரிவினரிடையே அதிருப்தியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தின. அவை கடந்த ஆண்டு பொதுத் தேர்தலில் தெளிவாக வெளிப்பட்டன என்றும் திரு லீ கூறினார்.
சிங்கப்பூரில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அரசியல் மாற்றங்கள் நிகழுமா என்று கேட்கப்பட்டதற்கு, “அரசியல் நிலைமை மாறக்கூடும். அதற்கு ஏற்றவாறு முன்னோக்கிச் செல்ல புதிய வழிகளை சிங்கப்பூர் கண்டறிவேண்டும் என்று பதிலளித் தார்.

முழு விவரம் 28.1.2012 தமிழ் முரசில்