மனைவியைக் கட்டி வைத்த கணவருக்கு $2,000 அபராதம்

Saturday, January 28th, 2012
tm logo
தம் மனைவியிடமிருந்து விவாகரத்து கோரி பேச வந்த கணவரின் பேச்சைக் கேட்க மனைவி விரும்பவில்லை. அவரைக் கேட்க வைப்பதற்காக கணவர் மனைவியைக் கட்டிப் போட்டார். தங்கள் பெற்றோர் உரக்கக் கத்தி பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்த அவர்களின் மூத்த மகள் போலிசை அழைத்தார்.
கடந்த ஆண்டு மே மாதம் தமக்கு எதிராக மனைவி பெற்றிருந்த சுய பாதுகாப்பு ஆணையை மதிக்காமல் அவருக்குத் தொந்தரவு கொடுத்ததற்காக கணவர் திரு முகம்மது ஹனிஃப் அப்துல்லாவுக்கு நேற்று கீழ்நீதிமன்றம் $2,000 அபராதம் விதித்தது.
மனைவியைக் கட்டிப்போட்டு அவருக்குப் பயத்தை ஏற்படுத்தியதை 46 வயது கணவர் ஒப்புக்கொண்டார்.

முழு விவரம் 28.1.2012 தமிழ் முரசில்