சாங்கி ஓடுதளத்தில் மயிரிழையில் தப்பிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

Saturday, January 28th, 2012
tm logo

சாங்கி விமான நிலையத்தில் இருந்து திருச்சிக்கு கிளம்பிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானப் பயணிகள் 90 பேருக்கும் இரட்டிப்பு அதிர்ச்சி.

அந்த ஐஎக்ஸ்-681 ரக விமானம் விமானக் கட்டுப்பாட்டு மையத்தின் அனுமதி இன்றி கிளம்பியது. இதைக் கவனித்த கட்டுப்பாட்டு மைய அதிகாரிகள் விமானத்தை உடனே நிறுத்தும்படி விமானிகளுக்குக் கூறினர்.

மேலே பறப்பதற்கு தயாரான நிலையில், மணிக்கு 260 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடு தளத்தில் ஓடிய விமானத்தை சட்டென்று நிறுத்தினர் விமானிகள்.
இன்னும் ஒரு விநாடி தாமதித்து விமானத்தை நிறுத்த முயன்றிருந்தால்கூட ஆபத்தாக முடிந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இச்சம்பவம் ஜனவரி 23ஆம் தேதி திங்கட்கிழமை சாங்கி விமான நிலையத்தில் நிகழ்ந்தது.
முழு விவரம் 28.1.2012 தமிழ் முரசில்