சென்னையில் பேய் மழை; ஆந்திராவில் புயல் மழை

Tuesday, November 9th, 2010
சென்னை: புயல்,
Chennai-rain

மழை காரணமாக சென்னையில் நேற்று இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது. கடந்த ஒரு வாரமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்கிறது. இதற்கிடையே வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள ‘ஜல்’ புயலால் ஏற்பட்ட பேய் மழை காரணமாக 10 மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னை, காஞ்சீபுரம், திரு வள்ளூர், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, வேலூர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக நிற்காமல் மழை பெய்தது.
இதன்  காரணமாக இந்த மாவட்டங்களில் உள்ள கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திரா வில் கனமழையால் பல கிராமங் கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. புயல் மழைக்கு 22 பேர் பலியாகி யுள்ளனர். சென்னையை மிரட்டி வந்த ஜல் புயல் நேற்று வலு விழந்தது. இதனால் சென்னைக்கு வந்த ஆபத்து நீங்கியது.
அவ்வப்போது பலத்த காற்று  வீசுவதோடு தொடர்ந்து மழை பெய்து கொண்டு வருகிறது.
அதனால் சென்னையின் தாழ்வான பகுதிகளான  பட்டினப் பாக்கம், வேளச்சேரி, தரமணி, மேற்கு மாம்பலம், ஆழ்வார் பேட்டை, நுங்கம்பாக்கம், பெரம்பூர், வியாசர்பாடி கணேசபுரம் போன்ற  இடங்களில் மழைநீர் குளம் போல தேங்கியுள்ளது.
சாலைகளிலும் குடியிருப்புப் பகுதிகளிலும் தேங்கிக் கிடக்கும் மழை நீரை அகற்றும் பணியை தமிழக அரசு  முடுக்கி விட்டுள்ளது.