பங்குச் சந்தைகள் இணைப்புக்கு ஆஸியில் எதிர்ப்பு
சிங்கப்பூர் ஆஸ்திரேலிய பங்குச் சங்தைகள் உத்தேச இணைப்புக்கு ஆஸ்திரேலியா வில் அரசியல் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்த உடன்பாடு ஒழுங்கு முறை பிரச்சினைகளை உண்டு பண்ணுவதாக ஆஸ்திரேலிய மூத்த நிதித்துறை அதிகாரி எச்சரித்துள்ளார்.
ஆஸ்திரேலிய அரசாங்கம் கொஞ்சம் பெரும்பான்மையில்தான் நிற்கிறது. அரசின் முக்கியக் கூட்டணிக் கட்சியான கிரீன்ஸ்.
கிரீன்ஸ் கட்சியின் தலைவர் பாப் பிரவுன், இந்த பல பில்லியன் டாலர் இணைப்புத் திட்டத்தைக் கடுமையாக எதிர்த் துள்ளார். இது தொடர்பிலான சிங்கப்பூரின் உரிமை ஆவணம் திகைப்புக்குரியது என்று குறிப் பிட்ட அவர், அடிமை தேசத்தில் தாம் உயிர்வாழ விரும்பில்லை என்றார்.
பாப் பிரவுன் அரசியலில் அங்கும் இங்கும் தாவுவதில் கில்லாடி. திங்கட்கிழமை அறிவிக்கப்பட்ட 8.2 பில்லியன் அமெரிக்க டாலர் (10.7 பில்லியன் சிங்கப்பூர் வெள்ளி) மதிப்பிலான இத்திட்டம் சிங்கப் பூரிலும் ஆஸ்திரேலியாவிலும் ஒப்புதலைப் பெற வேண்டி யுள்ளது.
இந்த ஒப்புதலைப் பெறுவதற்குள் ஆஸ்திரேலியாவில் பல குறுக்கிட்டுத் தடை களை இந்த இணைப்புத் திட்டம் சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் பங்குச் சந்தை, அந்நிய முதலீடு கண்காணிப்பு அமைப்புகள் மத்திய வங்கி, ஆகியவை இங்த உத்தேச உடன்பாடு குறித்து ஆராயும். பிறகு அதற்கு அந்த நாட்டின் நிசதி அமைச்சர் வேன் ஸ்வான் அங்கீகாரம் அளிக்க வேண்டும். பிறகு நாடாளுமன்றத் தில் அதற்கு இணக்கம் பெறப்பட வேண்டும். ஆஸ்திரேலிய நாடாளு மன்றத்தன் கீழவையில் ஆளும் கட்சிக்கு ஒரே ஒரு வாக்குதான் பெரும்பான்மை இருக்கிறது.
ஒப்புதலைப் பெறுமானால் உலகளவில் 12.3 பில்லியன் அமெரிக்க டாலர் சந்தை முதலீட்டுடன் ஐந்தாவது பெரிய பரிவர்த்தனை குழுமமாக இது உருவெடுக்கும். ஹாங்காங், ஷாங்காய் மற்றும் தோக்கியோ நகரங்களுக்கு வட்டார வர்த்தக மையமாகவும் இது திகழும்.


