ஜுபா: தென்சூடானில் வாவ் விமான நிலையத்தில் தரை யிறங்கிய ஒரு விமானம் ஓடு பாதையில் சென்று கொண் டிருந்தபோது விபத்துக்கு உள்ளாகி தீப்பிடித்து எரிந்தது. இதிலிருந்த 40 பயணிகளும் 5 ஊழியர்களும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர். "இவர்கள் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலிகள். கணநேரத்தில் மரணத்தையே விரட்டியடித்த வர்கள். விமானம் விபத்துக்கு உள்ளான உடனேயே பயணிகளை வெளியேற்றும் பணியை மிகத் துரிதமாகச் செய்தோம். பயணிகள் வெளியேறிக் கொண் டிருந்த போதே தீப்பரவத் தொடங்கிவிட்டது.
தென்சூடானில் வாவ் விமான நிலையத்தில் தரை இறங்கிய விமானம் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்தது. அந்த விமானத்தில் சென்ற பயணிகளும் ஊழியர்களும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர். படம்: ஏஎஃப்பி