தென் ஆப்பிரிக்காவில் நிறைவு பெற்ற உலகக் கிண்ணப் போட்டியின் தலை சிறந்த வீரருக்கு வழங்கப்படும் தங்கப் பந்து விருதை உருகுவேயின் அணித் தலைவர் டியேகோ ஃபோர்லான்,31 (படம்) வென்றுள்ளார்.
உருகுவே அரை இறுதி ஆட்டம் வரை முன்னேற ஃபோர்லான¬ன் பங்கு இன்றியமையாததாக அமைந்தது. இந்தத் தொடரில் இவர் ஐந்து கோல்களை அடித்திருந்தார். 2வது இடம் நெதர்லாந்தின் ஷினைடருக்கும், 3வது இடம் ஸ்பெயினின் டேவிட் வியாவுக்கும் கிடைத்தது.
ஆக அதிக கோல்கள் அடித்தவருக்கான தங்கக் காலணி விருதை ஜெர்மன¬யின் தாமஸ் முல்லர் வென்றார். இவரும் ஸ்பெயின¬ன் டேவிட் வியாவும், ஹாலந்தின் ஷினைடரும் தலா ஐந்து கோல்கள் அடித்திருந்தாலும் மேலும் மூன்று கோல்களுக்குக் காரணகர்த்தாவாக இருந்துள்ளார் முல்லர். அதன் அடிப்படையில் இவருக்கு விருது வழங்கப்பட்டது.
தாமஸ் முல்லர் (20) சிறந்த இளம் வீரர் விருதையும் வென்றார்.