fontsize: 60% 70% 80% 90%

பொங்கோல் விபத்தில் ஊழியர் மரணம்

பொங்கோல் வீவக கட்டுமானத் தளத்தில் நேற்று மாலை நிகழ்ந்த விபத்தில் ஊழியர் ஒருவர் மரணம் அடைந்தார். பாரந்தூக்கி சாய்ந்ததில் அவர் உயிரிழந்ததாக குடிமைத் தற்காப்புப் படையின் அறிக்கை குறிப்பிட்டது.
அவருக்கு அருகில் நின்ற இருவர் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினர். ஒருவருக்கு வலது கையில் முறிவு ஏற்பட்டது. மற்றவருக்கு இடது இடுப்பில் வலி இருப்பதாகக் கூறப்பட்டது. இருவரும் சாங்கி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
குடிமைத் தற்காப்புப் படைக்கு மாலை 5.24 மணிக்கு விபத்து குறித்து அழைப்பு வந்தது. அதிகாரிகள் 5.32க்கு அவ்விடத்துக்கு விரைந்தனர்.

Copyright © 2006 Singapore Press Holdings Ltd. Co. Regn. No. 198402868E. All rights reserved.
82, Genting Lane, Singapore 349567 Tel: 6388 3838