சிங்கப்பூரின் மொத்த ஊழியர்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியினர் வெளிநாட்டு ஊழியர்கள்.
இவர்களை நிர்வகிப்பதில் வேலை வாய்ப்பு முகவர்கள் முக்கிய பங்காற்றுகின்றனர்.
ஆனால், முறைகேடாகச் செயல்படும் வேலை வாய்ப்பு நிறுவனங்களின் எண்ணிக்கை கடந்த ஈராண்டுகளில் வெகுவாக அதிகரித்துள்ளது என்று மனிதவள அமைச்சு நேற்று தெரிவித்தது.
சிங்கப்பூரிலுள்ள வெளி நாட்டுத் தொழிலாளர்களின் நிர்வகிப்பை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை அறிவித்து, வரவுசெலவுத் திட்ட விவாதத்தை நேற்று முடித்து வைத்த மனிதவள அமைச்சு, வேலையிடப் பாதுகாப்பும் சுகாதாரமும் அனைத்துத் துறைகளிலும் மேம்படுத்தப் படவேண்டும் என்றது.
சென்ற ஆண்டு கடைசி யில், சுமார் 2,300 வேலை வாய்ப்பு நிறுவனங்கள் இருந்தன. வேலை வாய்ப்பு நிறுவனங்களின் முறை கேடான நடவடிக்கைகள் பற்றி முதலாளிகள், வெளி நாட்டு ஊழியர்கள், பொது மக்கள் ஆகியோர் சென்ற ஆண்டு மனிதவள அமைச் சிடம் 1,280 புகார்கள் செய்தனர்.
சென்ற 2008ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் இது 80% அதிகமாகும்.
“உரிமம் இல்லாத வேலை வாய்ப்பு நிறுவனத்தின் சேவையைத் தெரிந்தே பயன் படுத்துவதைக் குற்றமாக்கி, அதன்வழி வேலை வாய்ப்பு நிறுவனங்களுக்கும் முறை கேடான முதலாளிகளுக்கும் இடையிலான லஞ்ச ஏற்பாடு களைத் தகர்க்க விரும்பு கிறோம்,” என்று மனிதவளத் துணை அமைச்சர் லி ய~ ஷியான் கூறினார்.
வேலை வாய்ப்பு நிறுவனங் களில் வேலை செய்வோரின் தரங்களையும் பொறுப் பேற்பையும் உயர்த்தவும் திட்டமுண்டு.
விதிக்கப்படும் அபராதங் களில் சில, குற்றத்தைத் தடுக்கக்கூடியவையாக இருப்பதையும் அமைச்சு உறுதிப்படுத்த விரும்புகிறது.
எனவே, சில குற்றங் களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகை, முறை கேடான நடவடிக்கைகளி லிருந்து கிடைக்கக்கூடிய உத்தேச ஆதாயங்களுக்கு இணையாக உயர்த்தப்படும்.
எதிர்வரும் ஆண்டு, வேலை வாய்ப்பு நிறுவனங்களுக்கான விதிமுறைகளில் படிப் படியாகப் பல மாற்றங்களை எதிர்பார்க்கலாம்” என்றும் திரு லீ தெரிவித்தார்.