பயங்கரவாத நினைவூட்டல்கள் பெர்லினின் பரபரப்பான கிறிஸ் துமஸ் சந்தையில் மேற்கொள்ளப் பட்ட தாக்குதல், ஜகார்த்தாவில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவா தத் தாக்குதல் திட்டம் தொடர் பான கைதுகள் ஆகியவை பயங் கரவாதம் தெளிவான, தற்கால ஆபத்து என்பதை நமக்கு நினை வூட்டுகின்றன என்று தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் கூறி யுள்ளார்.
வெள்ளிக்கிழமை இரவு தமது ஃபேஸ்புக் பக்கத்தில் இவ்வாறு குறிப்பிட்டிருந்த அவர், "சிங்கப் பூரர்கள் இதை பற்றியே நினைத் துக் கொண்டிருக்க வேண்டிய தில்லை. அப்படி இருந்தால், நமது அன்றாட வாழ்க்கை பாதிப் படையும். இது பயங்கரவாதிகள் வெற்றி பெற்றதாக அர்த்தமாகி விடும்," என்றார். "இந்த வார இறுதியில் சிங் கப்பூரர்கள் கிறிஸ்துமஸ் கொண் டாட்டங்களில் பங்கேற்பார்கள். நம்மைச் சுற்றிலும் தூரத்தில் உள்ள நாடுகளிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் உயர்த்தப்பட்டி ருந்தாலும் நமது வழக்கமான கொண்டாட்டங்களில் தொய்வு ஏற்படக்கூடாது," என்று அமைச் சர் குறிப்பிட்டார்.