fontsize: 60% 70% 80% 90%

கையடக்கக் கவிதை..! - பனசை நடராஜன்

Bookmark and Share

இறுகிய மனிதரின்
இரும்பொத்த மனத்தையும்
இளகிடச் செய்யும்
மழலையின் சிரிப்பொலி..!

குடும்பத்தில் எல்லொர்க்கும்
குதூகலம் வார்க்கும்,
ஊடலைப் போக்கும்
தவழும் பனித்துளி..

தாயின் நாக்கென்ற
தாலாட்டுக் கிளுகிளுப்பையின்
பாட்டுக்கு மட்டுமே
தூங்கிடும் உயிர்ப்பூ..

வித்தகர்க்கும் விளங்காத
தித்திப்பு மொழி பேசும்
கருத்தாழமிக்க
கையடக்கக் கவிதை..!

Copyright © 2006 Singapore Press Holdings Ltd. Co. Regn. No. 198402868E. All rights reserved.
82, Genting Lane, Singapore 349567 Tel: 6388 3838