இந்தியா

Jayalalitha
Friday, May 18th, 2012

மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி குறித்து நேற்று முன்தினம் நாளிதழ்களின் முதல் பக்கத்தில் செய்தி எதிர்பார்த்திருந்த அம்மாநில மக்கள், தங்களுக்குத் தொடர்பே இல்லாத தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சாதனைப் பட்டியல் அடங்கிய விளம்பரத்தைக் கண்டு ஆச்சரியம் அடைந்தனர்.

தங்களின் சாதனைகளை, புகழைப் பரப்பு வதில் தென்னிந்திய அரசியல்வாதிகள் பெயர் பெற்றவர்கள்.
“நூறாண்டு பேசும் ஓராண்டு சாதனை” என்ற அதிமுக அரசின் முழக்கங்கள்தான், திமுக சார்புப் பத்திரிகைகளைத் தவிர, இந்தியாவின் அனைத்து ஆங்கில, தமிழ்ப் பத்திரிகைகளின் முதல் பக்கங்களை அலங் கரித்து இருந்தன.

விவரம்: அச்சுப் பிரதியில்

sharukkhan
Friday, May 18th, 2012

கிரிக்கெட் அரங்கில் பாதுகாப்பு காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, தகாத முறையில் நடந்து கொண்ட பிரபல இந்தி நடிகர் ஷாருக் கானுக்கு, அந்த அரங்கில் நுழையத் தடை விதிக்கப்படலாம் எனத் தெரிகிறது.
நடந்துவரும் ஐபிஎல் தொடரின் லீக் போட்டி ஒன்றில் நேற்று முன்தினம் இரவு மும்பையில் உள்ள வான்கடே அரங்கில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன், ஷாருக் கானின் கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மோதியது. அந்த ஆட்டத்தில் கோல்கத்தா அணி வெற்றி பெற்றது.

விவரம்: அச்சுப் பிரதியில்

tm logo
Thursday, May 17th, 2012
இந்திய ரூபாயின் மதிப்பு ஐந்து மாதங்களுக்குப் பிறகு நேற்று வீழ்ச்சி கண்டுள்ளது. அதன் மதிப்பு அமெரிக்க டாலருக்கு நிகராக 54.27 ஆகக் குறைந்தது.  இது கடந்த டிசம்பர் மாதம் 54.32 ரூபாயாக இருந்தது. நேற்று காலை வர்த்தகம் துவங்கியதும் அமெரிக்க டாலருக்கு அதிகமான தேவை ஏற்பட்டதால் இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய ரூபாய் 100க்கு U$1.839 (S$2.33) என்று விலையாடியது.
ரூபாயின் வீழ்ச்சி பற்றி கருத்துத் தெரிவித்த இந்திய நிதி அமைச்சர் இது சரிசெய்யப்படும் என்றும் வர்த்தகர்கள் பீதியடைய வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார்.
ramarajan
Thursday, May 17th, 2012

மதுரை: தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு உதவி இயக்குநராக வசனம் சொல்லிக்கொடுத்தவன் நான். இப்போது அவர் அந்த நன்றியை மறக்கக்கூடாது என்று நடிகர் ராமராஜன் எச்சரித்துள்ளார்.

விஜயகாந்த்தும் கருணாநிதியும் தமிழக அரசைக் குறைகூறுவதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். ஜெயலலிதாவை எதிர்த்தால் தான் முதலமைச்சராகி விடலாம் என்று விஜயகாந்த் கனவு காண்கிறார் என்று சாடியுள்ளார் ராமராஜன்.

விவரம்: அச்சுப் பிரதியில்

jayalalitha
Thursday, May 17th, 2012

அதிமுக அரசு பதவியேற்ற ஓராண்டு நிறைவுக் கொண்டாட்டத்தை பறைசாற்ற 25 கோடி ரூபாயில் விளம்பரங்கள் செய்து கோலாகலமாக தலைமைச் செயலகத்தில் விழா எடுக்கப்பட்டது.
நூறாண்டுகளில் செய்ய வேண்டிய சாதனையை ஒரே ஆண்டில் ஜெயா செய்து விட்டாராம். இப்படிப் புகழ்கின்றனர் அதிமுகவினர்.

ஜெயலலிதாவின் சாதனை பற்றி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் புகழ்ந்திருப்பது திமுகவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

விவரம்: அச்சுப் பிரதியில்

gurupeyarchi 2012
Thursday, May 17th, 2012
நந்தன ஆண்டு வைகாசி மாதம் 4ம் நாள், ஆங்கிலத் தேதி 17ம் தேதி வியாழக்கிழமையான இன்று குரு பகவானின் இடப்பெயர்ச்சி நிகழ்கிறது. இம்முறை வாக்கிய, திருக்கணிதம் பஞ்சாங்கங்களின்படி ஒரே நாளில் குருப் பெயர்ச்சி நிகழ்வது இந்நாளிதல்தான். திருக்கணிதப்படி சென்னை நேரப்படி காலை 9.37 மணிக்கு எனில் வாக்கியப்படி மாலை 6.11 மணிக்கு நிகழ்கிறது. எந்தப் பஞ்சாங்கமாக இருப்பினும் அவர் தரும் பலன்கள் ஒன்றே. குருவின் பெயர்ச்சியால் 12 ராசியினருக்கும் ஏற்படும் பலன்களை தமிழ் முரசில் தொடர்ந்து காணலாம். ஒரு நாளைக்கு மூன்று ராசிகள் வீதம் நான்கு நாள்கள் பலன்கள் வெளியிடப்படும். இன்று மேஷம், ரிஷபம், மிதுனம் ஆகிய மூன்று ராசிக்காரர்களுக்கான பலன்கள் வெளியிடப்பட்டுள்ளது.
விவரம்: அச்சுப் பிரதியில்
tm logo
Wednesday, May 16th, 2012
ஏர்-இந்தியா விமான நிறுவனத்தின் விமானிகள் தொடர்ந்து நேற்றோடு 8வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
விமானிகளின் வேலை நிறுத்தப் போராட்டம் முடிவின்றி தொடர்ந்து செல்கிறது. விமானிகள் பணிக்குத் திரும்பினால் பேச்சுவார்த்தை நடத்த லாம் என்று அமைச்சரும் பேச்சுவார்த் தைக்குப் பின்னரே பணிக்குத் திரும்புவோம் என்று விமானிகளும் விடாப்பிடியாக இருந்து வருகின்றனர்.
விமானிகளின் இந்தப் போக்கால் நாளுக்கு நாள் ஏர்-இந்தியாவின் விமானச்சேவை தடை அதிகரித் துக்கொண்டே செல்கின்றது. கடந்த திங்கட்கிழமை மட்டும் 15 சேவைகள் தடைப்பட்டன. நேற்றுக் காலை மேலும் 10 அனைத்துலக விமானச் சேவைகள் தடைப்பட்டன.
விவரம்: அச்சுப் பிரதியில்

tm logo
Wednesday, May 16th, 2012

ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஏலம் விடப்பட்டதில் நடந்த முறைகேடு தொடர்பான வழக்கில் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இந்தியாவின் முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ.ராசா பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இவரை பிணையில் விடுதலை செய்வதை சிபிஐ கடுமையாக எதிர்த்தும் சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. திகார் சிறையிலிருந்து நேற்று இரவு 7 மணிக்கு அவர் விடுவிக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டது.
பிணையில் ராசா விடுதலையாக அனுமதித்த சிறப்பு நீதிபதி ஓ.பி.சைனி பதினான்கு பக்க உத்தரவை வெளியிட்டார். இவரை இன்னும் சிறையில் வைத்திருப்பதால் எவ்வித பயனும் இல்லை என்று முடிவு செய்த நீதிபதி நிபந்தனைகள் சிலவற்றுடன் அவருக்குப் பிணை வழங்கியுள்ளார். பிணைத் தொகையாக 20 லட்ச ரூபாய் செலுத்த வேண்டும். புதுடெல்லியில்தான் தங்கவேண்டும். சென்னைக்குச் செல்வதென்றால் நீதிமன்ற அனுமதி பெற்றாக வேண்டும். அப்படியே சென்னைக்குச் சென்றாலும் அங்குள்ள தொலைத்தொடர்பு அலுவலகத்திற்கு செல்வதற்கு அவருக்கு அனுமதியில்லை என்பதே அந்த நிபந்தனைகள்.

விவரம்: அச்சுப் பிரதியில்

tm logo
Tuesday, May 15th, 2012
சென்னை: தமிழகத்தில்  பல இடங்களில் கோடை மழை பெய்து வருகிறது. இதனால் கத்திரி வெயிலின் தாக்கம் குறைந்துள்ளது. சென்னையில் வெயில் குறைந்தாலும் மழை பெய்யவில்லை. என்றாலும் குளர்ச்சியான காற்று வீசுவதாகக் கூறப்படுகிறது. பெருந்துறை, ஊட்டி, வால்பாறை உள்ளிட்ட சில பகுதியில் 2 முதல் 3 சென்டி மீட்டர் வரை மழை பெய்துள்ளது.
tm logo
Tuesday, May 15th, 2012

துபாயில் இருந்து 307 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் ஒன்று நேற்று விடியற்காலை 5.30 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கியது. பயணிகள் இறங்க வசதியாக படிக்கட்டுகள் விமானத்தின் அருகில் கொண்டு வரப்பட்டன. அப்போது விமானத்தில் இருந்த பயணி ஒருவர் திடீர் என்று அவசர கால வழியை திறந்து அதில் சறுக்கிக் கீழே இறங்கினார். பின்னர் அங்கிருந்து தப்பியோட முயன்றார். அவரை விமான நிலைய ஊழியர் கள் துரத்திப் பிடித்தனர். உடனடியாக விமான நிலையப் போலிசார் வந்து விசாரணை நடத்தினர். அந்தப் பயணியின் பெயர் கமால் பாட்சா (28) என்றும் பொறியியல் பட்டதாரி அவர் என்றும் விசாரணையில் தெரிய வந்தது. சில மாதங்களுக்கு முன்பு வேலை தேடி துபாய் சென்ற அவரின் மனநிலை பாதிக்கப்பட்டதாகவும் சிகிச்சைக்காக அவர் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. அவர் உண்மையிலேயே மனநிலை பாதிக்கப்பட்டவரா என்று உறுதி செய்ய மருத்துவர் குழு வரவழைக்கப்பட்டது. விசாரணை தொடர்கிறது.
வழக்கமாக அவசரகால வழியை விமானிதான் திறப்பார். அப்படி இருக்கையில் பயணி ஒருவர் அந்த வழியைத் திறந்தவுடன் அதிகாரிகளும், மற்ற பயணிகளும் அதிர்ச்சி அடைந்தனர். சென்னை விமான நிலையம் பரபரப்பில் மூழ்கியது.

விவரம்: அச்சுப் பிரதியில்



Syndicate content