fontsize: 60% 70% 80% 90%

சிங்கப்பூர்

நீதிக்கு புறம்பாக நடந்த முன்னாள் அதிகாரி மீது குற்றச்சாட்டு

போக்குவரத்து சிவப்பு விளக்கில் நிற்காமல் சென்ற ஒருவரை அக்குற்றச் சாட்டில் இருந்து தப்ப வைக்க, தோழி ஒருவரை அக்குற்றத்தை ஏற்க வைத்ததை முன்னாள் போலிஸ் அதிகாரி ஒருவர் கீழ் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.
தற்போது சொத்து ஆலொசகராகப் பணிபுரியும் கெல்வின் சூ யூ பெங் (39), இவென்ஜலின் டே சூ ஆனை (21) போக்குவரத்துக் குற்றச்சாட்டில் இருந்து தப்ப வைக்க நீதிக்கு புறமாகச் செயல்பட்டார்..
சூ சென்ற 2008ம் ஆண்டு பிப்ரவரி மாதம் டேயின் குற்றச்சாட்டை எற்க லியோங் மன் குவான் (34) என்ற மாதை ஏற்பாடு செய்தார்.
முன்னாள் துணை போலிஸ் சுப்ரின்டென்டனாக பணியாற்றிய சூ அதற்காக லியோங்கிற்கு $1,000 கொடுத்தார்.

வேக வளர்ச்சி காணும் உயிரியல்மருத்துவத் துறை

சிங்கப்பூரின் உயிரியல்மருத்துவ அறிவியல் துறை இந்த ஆண்டில் 5 முதல் 10 விழுக்காடு வரை வளர்ச்சி காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது 13,000 ஊழியர்களைக் கொண்டிருக்கும் இத்துறை மேலும் வளரும் என பொருளியல் வளர்ச்சிக் கழகத்தின் ஆண்டு இறுதி ஆய்வறிக்கை குறிப்பிட்டது.
கடந்த 2008ல் $20.2 பில்லியனாக இருந்த இத்துறையின் உற்பத்தி 2015ம் ஆண்டு வாக்கில் $25 பில்லியனை எட்டும் என கழகம் நம்பிக்கை கொண்டுள்ளது.
2009ம் ஆண்டில் உயிரியல் மருத்துவ அறிவியல் துறை $1.2 பில்லியன் மொத்த சொத்து முதலீட்டையும் $700 மில்லியன் மொத்த வர்த்தக செலவையும் ஈர்த்ததாக அறிக்கை தெரிவித்தது.

பிப்ரவரி ஏற்றுமதி உயர்ந்தது

மின்னியல், மருந்துத் துறைகளின் ஏற்றுமதி அதிகரிப்பினால், சிங்கப்பூரின் ஏற்றுமதி கடந்த பிப்ரவரி மாதத்தில் வேக வளர்ச்சி கண்டது.
எண்ணெய் சாராத பொருட்களின் ஏற்றுமதி ஔராண்டு காலத்துடன் ஒப்பிட 23 விழுக்காடு உயர்ந்தது.
ஔராண்டுக்கு முன்னர் ஒப்பிட, மின்னியல் பொருட்களின் ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் 26 விழுக்காடு கூடி, $4.38 பில்லியன் ஆனது. அதற்கு முந்திய மாதத்தில் 22.7% உயர்ந்தது.
பெட்ரோலிய ரசாயனப் பொருட்கள், மருந்துப் பொருட்கள் உட்பட மின்னியல் துறை சாராத பொருட்களின் ஏற்றுமதி, பிப்ரவரியில் 22% கூடியது. ஜனவரியில் குறைந்திருந்த மருந்துப் பொருட்களின் ஏற்றுமதி, பிப்ரவரியில் 29% உயர்ந்தது.

மாற்றான் தந்தை மீது பாலியல் குற்றச்சாட்டு

பதின்ம வயது மகளை மானபங்கம் செய்து, பாலியல் உறவு கொண்ட மாற்றன் தந்தை மீது நேற்று கீழ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
பாதுகாப்பு மேற்பார்வை யாளராக வேலை செய்து வந்த அந்த 41 வயது ஆடவர் 2007ம் ஆண்டு பதின்ம வயது பெண்ணை முதன்முதலில் மானபங்கம் செய்தார். அப்போது சிறுமிக்கு வயது 12.
அதற்கு பிறகு ஆடவர் சிறுமியை வடக்கு வட்டாரத்தில் உள்ள அவர்களது வ~ட்டில் மேலும் மூன்று முறை மானபங்கம் செய்தார் என்றும் நீதிமன்றம் அறிந்தது.
ஆடவர் மீது சுமத்தப் பட்டிருக்கும் பாலியல் உறவு குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையோ அபராதமோ அல்லது இரண்டுமோ விதிக்கப்படலாம்.

பொங்கோல் விபத்தில் ஊழியர் மரணம்

பொங்கோல் வீவக கட்டுமானத் தளத்தில் நேற்று மாலை நிகழ்ந்த விபத்தில் ஊழியர் ஒருவர் மரணம் அடைந்தார். பாரந்தூக்கி சாய்ந்ததில் அவர் உயிரிழந்ததாக குடிமைத் தற்காப்புப் படையின் அறிக்கை குறிப்பிட்டது.
அவருக்கு அருகில் நின்ற இருவர் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினர். ஒருவருக்கு வலது கையில் முறிவு ஏற்பட்டது. மற்றவருக்கு இடது இடுப்பில் வலி இருப்பதாகக் கூறப்பட்டது. இருவரும் சாங்கி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
குடிமைத் தற்காப்புப் படைக்கு மாலை 5.24 மணிக்கு விபத்து குறித்து அழைப்பு வந்தது. அதிகாரிகள் 5.32க்கு அவ்விடத்துக்கு விரைந்தனர்.

சுற்றுச் சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் ஐம்பெரும் பூதங்களின் தாண்டவம்

இந்து சமயத் தத்துவத்தின் அடிப்படையில், சுற்றுச் சூழலைக் காக்க வேண்டியதன் அவசியத்தை விளக்குகிறது பாஸ்கர் கலைக்கழகம் வழங்கும் ‘தாண்டவம்’.
தாண்டவம் என்பது ஆக்கமும் அழித்தலும் மாறி மாறி வருவதைக் குறிக்கும் விறுவிறுப்பும் வேகமும் கொண்ட நடனம்.
முத்துசுவாமி தீட்சிதரின் பஞ்ச பூத லிங்கக் கிருதிகளை உந்துசக்தியாகக்கொண்டு இந்தியாவைச் சேர்ந்த பி.டி நரேந்திரன் நடனத்தை வடிவமைத்திருக்கிறார்.
ஐம்பெரும் பூதங்களின் இயல்புகளையும், அவை மனிதப் பண்புகளோடு பின்னிப் பிணைந்திருப்பதையும், இந்த முறையில் மனிதனுக்கும் இயற்கைக்கும் உள்ள பிரிக்க முடியாத உறவையும் நாட்டியம் வழி சித்தரித்துள்ளார்,
பி.டி. நரேந்திரன்.

பலதரப்பிலும் பயன்படும் பாதுகாப்பு எச்சரிக்கைத் திட்டங்கள்

பயங்கரவாதத் தாக்குதல் திட்டங்கள் போன்ற உள்நாட்டு பாதுகாப்பு மிரட்டல்களை அடையாளம் காண்பதற்காக உருவாக்கப்பட்ட அதிநவீன பாதுகாப்பு அபாய எச்சரிக்கைத் திட்டங்கள், கல்வி, எரிசக்தி பாதுகாப்பு, இணையத் தாக்குதல் போன்றவற்றுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளன.
கடந்த 2004ம் ஆண்டில் தொடங்கப்பட்ட அபாயத்தை அளவிடும் ‘Rahs’ எனப்படும் திட்டத்தை, அரசாங்கத் துணை நிறுவனமான பாதுகாப்பு மிரட்டலை எதிர்கொள்ளும் நிலையம் போன்ற பாதுகாப்பு முகவைகள் முதலில் பயன்படுத்தின.

வெளிநாட்டு ஊழியர் எண்ணிக்கை குறைந்தது

கடந்த ஆண்டில் அதிகமான வேலைகள் சிங்கப்பூரருக்குச் சென்றன. வெளிநாட்டினர் அமர்த்தப்படுவது குறைந்தது என மனித வள அமைச்சு வெளியிட்ட 2009ம் ஆண்டுக்கான தொழிலாளர் அறிக்கை குறிப்பிட்டது. 2009ல் வேலைக்கு அமர்த்தப்பட்ட வெளிநாட்டினர் எண்ணிக்கை 0.4% குறைந்து, 4,200 ஆனது. தயாரிப்புத் துறையில் ஆட்சேர்ப்பு குறைந்தது, வெளிநாட்டினருக்கான வேலை வாய்ப்புகள் குறைந்ததற்கு ஒரு காரணம். இத்துறையில் 34,300 ஊழியர்கள் குறைந்தனர்.

நேரடி பாஸ்போர்ட் சேவைகள் ஒரு வார காலம் இடைநிறுத்தம்

சிங்கப்பூர் குடிநுழைவு சோதனை ஆணையம் (ஐசிஏ) நேரடி பாஸ்போர்ட் சேவைகளை நேற்று மார்ச் 13 சனிக் கிழமை முதல் ஒரு வார காலத்துக்கு இடைக் காலமாக நிறுத்தி வைத்துள்ளது.
பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்தல், புதுப்பித்தல் போன்ற சேவைகளை ஐசிஏ அலுவலகத்தில் பெற முடியாது.
பாஸ் போர்ட்டுகளை ஐசிஏ அலுவலகத்தில் உள்ள பெட்டியில் போட்டுச் செல்லுமாறு அல்லது இணையம் வழி விண்ணப்பிக்குமாறு மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
சிங்கப்பூரர்கள், www.ica.gov.sg என்ற இணையத் தளத்தில் பாஸ்போர்டு சேவைகளைப் பெறலாம்.

இந்தியர் கலாசாரத்தை அறிய உதவிய பொங்கல் விழா - டாக்டர் லத்தீப்

சிறுமி ஃபாத்திமா லத்தீபிற்கு சிங்க நடனம் என்றால் பயம். சீனர்களின் இறுதி ஊர்வலம் வந்தால் அந்த இடத்திலேயே நிற்க மாட்டார்.
தற்போது மரீன் பரேட் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் டாக்டர் ஃபாத்திமா லத்தீப், அரை நாள் விடுப்பு எடுத்துக்கொண்டு தமது தொகுதியில் நடைபெற்ற சீன திருவிழா ஒன்றை காணச் சென்றார்.
நேற்று மாலை கேலாங் ஈஸ்ட் { சிவன் கோயிலில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவை 3 மணி நேரம் அமர்ந்து பார்த்தார்.
இவ்வாறு மற்ற மதத்தினரின் நிகழ்ச்சி களிலும் சடங்குகளிலும் பங்கேற்பது, பிற மதங்களையும் நம்பிக்கைகளையும் புரிந்துகொள்ள உதவியாக இருக்கிறது என்றார் டாக்டர் லத்தீப்.

Syndicate content
Copyright © 2006 Singapore Press Holdings Ltd. Co. Regn. No. 198402868E. All rights reserved.
82, Genting Lane, Singapore 349567 Tel: 6388 3838