fontsize: 60% 70% 80% 90%

க‌விதை

சொர்க்க வாசல் - அனுபமா உதிவ்

ஆடுகின்ற பொம்மையினால்
ஆட்டம்போடும் குழந்தை!
ஆடாத தொட்டினிலே
அழுதிடுமே குழந்தை!

எறும்பில்லாப் புற்றினில்
பாம்புகள் புகுந்துவிடும்
பூசையில்லாக் கோவிலில்
வௌவால்கள் குடியிருக்கும்!

இடம்பெயர்ந்து போனால்தான்
கடும்பாறை படிக்கட்டாம்
அப்படியே இருந்தாலே
நடத்தாலும் பிணந்தானே!

நறுங்கிப்போன சிறுவண்டும்
நறுந்தேனைத் தேடுதே!
நல்லுறவைக் காணாது
நெற்பறவை வாடுதே!

காற்றுகூட புகுந்து
மூங்கில் இசையாகுமே!
கான மயில் இரைதேடி
நீர்த் திசைபோகுமே!

கருவாடு கடல்தேடி
மீண்டும் திரும்புமா?
இறந்து போன நிகழ்காலம்
மீண்டும் அரும்புமா?

சொர்க்க வாசல் கதவு
ஒருமுறைதான் திறக்கும்

இரண்டு முகங்கள் - யூசுப் ராவுத்தர் ரஜித்

இயற்கைக்கும்
இயல்பு மனிதனுக்கும்
எப்போதும் உண்டு
இரண்டு முகங்கள்.

காற்றுக்கு தென்றல் புயல்
கடலுக்கு அழகு அழிவு
பூமிக்கு இருள் பகல்
காதலுக்கு மலர் முள்
உள்ளத்துக்கு வெல்லம் கள்ளம்
அறிவுக்கு தொட்டி கேணி
உறவுக்கு காகம் நாகம்
குணத்துக்கு ஆடு நரி.

பதம் பார்க்க
சில சோறுகள் இவை
அணுவுக்குள்ளும் இரண்டு முகங்கள்
புரோட்டான் எலக்ட்ரான்.

அவனின்றி இது இல்லை
இவனின்றி அது இல்லை
ஒன்றில் மறந்து இன்னொன்று
எதற்குமே இல்லை சொந்த முகம்.

இயற்கைக்கும் சரி
இயல்பு மனிதனுக்கும் சரி
இன்று ஒரு முகம்
நாளை வேறு முகம்.

கையடக்கக் கவிதை..! - பனசை நடராஜன்

இறுகிய மனிதரின்
இரும்பொத்த மனத்தையும்
இளகிடச் செய்யும்
மழலையின் சிரிப்பொலி..!

குடும்பத்தில் எல்லொர்க்கும்
குதூகலம் வார்க்கும்,
ஊடலைப் போக்கும்
தவழும் பனித்துளி..

தாயின் நாக்கென்ற
தாலாட்டுக் கிளுகிளுப்பையின்
பாட்டுக்கு மட்டுமே
தூங்கிடும் உயிர்ப்பூ..

வித்தகர்க்கும் விளங்காத
தித்திப்பு மொழி பேசும்
கருத்தாழமிக்க
கையடக்கக் கவிதை..!

ஒவ்வொரு துளியிலும் - மணிமேகலை மன்னாங்காடு

தேடுகின்ற கண்களுக்கு தென்றல் போல்
வந்து போகும் உறவுகள்...
கட்டிலில் உறவாட தொட்டிலில் இசை பாட...
தொடந்து வரும் தொப்புள் கொடி உறவு...
மண்ணில் விழுந்த விதைக்கு...
மழைத் துளி உறவு...
படரும் கொடிக்கு போடும்
பந்தல் உறவாகுமா? வேலி உறவாகுமா?
சும்மா கிடந்த கொட்டாங்கச்சிக்கு - அதற்கு
பிடி வைத்து அகப்பை ஆக்கிய ஆசாரிக்கு
அவன் தொழில் உறவாகுமா?
அதை விற்கும் பணம் உறவாகுமா?
கல்மேல் உளி வைத்தால்...
சிலைக்கு வலிப்பது இல்லை...
உளிக்கும் வலிப்பது இல்லை - அவன்
அடித்து செதுக்கும் கைகளுக்கு வலிக்கும்...
அது தெய்வ சிலையாகிவிட்டால் - அதை
வணங்க கைகள் மறுப்பது இல்லை...

என்ன மாயமோ ? - திருஉறையோன்

கதிரவனின் முழுவீச்சில் நிலா தென்படுமோ
வடதுருவத்தில் தென் துருவம் புலப்படுமோ
தீயினுள் கை நீட்டினால் குளிர்ந்திடுமோ

திருமகளிடத்தில் வறுமைக்கு இடமுண்டோ
கல்நெஞ்சரிடம்தான் இரக்கம் சுரக்குமோ
கவலைகள் சூழ்கையில் உறக்கம் வந்திடுமோ

எதிரெதிரான இரண்டு எங்கேனும் சேர்ந்திடுமோ
சேர்ந்திடக் கண்டேனே, அது என்ன மாயமோ
மனம் கவர்ந்தவள், மனத்தை மீட்டும் ஜாலமோ

ஏனெனில்.....
அவளே என் பலம்!
அவளே என் பலவீனம்!

நோன்பு - - யூசுப் ராவுத்தர் ரஜித்

பொறாமையை
பொறுமையாக்கும்
நோன்பு

வக்கிரத்தை
வாஞ்சையாக்கும்
நோன்பு

கோபங்களை
சாந்தமாக்கும்
நோன்பு

தண்டிப்பை
மன்னிப்பாக்கும்
நோன்பு
இகழ்ச்சிகளை
புகழ்ச்சியாக்கும்
நோன்பு

கள்ளங்களை
வெல்லமாக்கும்
நோன்பு

வசைகளை
இசைகளாக்கும்
நோன்பு
பகைமயை
நட்புகளாக்கும்
நோன்பு

உறங்கும் ஆன்மீகத்தை
உசுப்பிவிடுவது
நோன்பு

பட்டினி கிடந்துதான்
பட்டாம் பூச்சி யாகிறது
கூட்டுப் புழு

இனிய நோன்புப் பெருநாள் வாழ்த்துகள்! - இராம வயிரவன்

இறைவன்
இருத்தல் போதாதென்கிறான்
இடைவெளி குறைத்து
என்னருகில் வாவென்கிறான்
நோன்பின் மூலம்
பசித்திரு, விழித்திரு எனப்
பயிற்சியளிக்கிறான்!

புலன்களை அடக்கி
இச்சைகளைத் தவிர்த்து
நோன்பிருந்து தொழுகிறேன்!
என் ஒவ்வொரு நாள்
தொழுதலின் போதும்
ஆன்மா அமைதியடைந்து
மேன்மையடைகிறது!

ஏன் முப்பது நாள்?
என்றெண்ணிப்பார்க்கிறது மனம்!

என் முதல் நாள் நோன்பின் போது
என் பசியறிந்து கொண்டேன்!

என் இரண்டாம் நாள் நோன்பின் போது
அட்டைபெட்டி விற்றுப் பிழைக்கும்
அந்த ஏழைக்கிழவியின் பசியும்
முள் செடிக்குப் பக்கத்தில்
முடங்கிக் கிடந்த
ஏழைச் சிறுமியின் பசியும்
என்னை அழ வைத்தது!

எனக்கான சொற்கள் - பனசை நடராஜன்

எதிர்பாராத நேரத்தில்புயலாகத் தாக்கியதுபரவசச் சொற்கள்.. கடைத்தெரு, புல்தரை,மணல்வெளி எங்கும்துரத்தி, துரத்தி.. சேதப்படுத்தாமல்,சிலிர்க்கச் செய்ததால்ஏக்கத்தோடும் எதிர்பார்ப்போடும்விடிந்தன அதிகாலைகள்.. பனித்துளியின் ஆயுளாகதிடுமெனத் தொலைந்தனஎனக்கே எனக்கானஅந்தப் பரவசச் சொற்கள்.. வானவில் கறுப்பு வெள்ளையானவருத்தத்தோடு,எங்கேனும் தென்படுமா எனதேடிக்கொண்டே நடக்கையில்எல்லா திசைகளின் நெரிசலிலிருந்தும்வசை சொற்களே வரிசையாய்.. மௌனச் சிறைக்குள்மாட்டிக் கொண்டதோ?மறுபடியும் வேறெங்கோஎனைத் தேடுகின்றதோ? சந்திப்புக்கான நம்பிக்கையோடுதொடர்கிறது என் தேடல்இ

கலைஞனின் பார்வையில் - சிங்கைத் தமிழன்

இசைக்கு அசையும் பாவனைகள்
நடனமாகத் தெரியும்.

செவிக்குச் சுவையளிக்கும் சொற்கள்
கவிதையாகத் தெரியும்.

நேரத்திற்கு உயிரளிக்கும் சம்பவங்கள்
நாடகமாகத் தெரியும்.

இம்மூன்றிலும் அடங்காத அனைத்தும்
ஓவியமாகத் தெரியும்.

முதுமை - லலிதாசுந்தர்

மண்தரையில் தவழ்ந்து மூன்றில் இரண்டு வேளைஅரைவயிறு கஞ்சிக்குடித்தாலும்...இரத்தினக் கம்பள விரிப்பில் தவழ்ந்து நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக தங்கபஸ்பம் உண்டு வளர்ந்தாலும் ....தவிர்க்கமுடியாத மாற்றம் முதுமை.இளமையில் ஓடினால் ஊன்றுகோலாய் நிற்கும். இளமையின் உழைப்பு தள்ளாடிய முதுமையிலும் இளமையில் ஆடினால் முட்விரிப்பு கம்பளத்துடன் காத்திருக்கும் முதுமை. முதுமைக் காலத்தின் கட்டாயம் முதுமைப் பணத்தால் தள்ளிவைக்க முடியாதது முதுமை அனுபவங்களின் உறைவிடம் முதுமை அனைவரும் ஒரு நாள் இறங்க வேண்டிய வாழ்க்கை நிறுத்தம்.
Syndicate content
Copyright © 2006 Singapore Press Holdings Ltd. Co. Regn. No. 198402868E. All rights reserved.
82, Genting Lane, Singapore 349567 Tel: 6388 3838