இரண்டு வாரங்களுக்கு முன் ‘வருங்காலச் சந்ததிக்குத் தீபம் ஏந்துவோம்’ எனும் தலைப்பில், சிங்கையின் தமிழ் நிலை பற்றி முரசொலி ஆராய்ந்தது.
எடுத்துக்காட்டாக, இருக்கும் நாம் அதற்கு தகுதியுடைவர்களா என்று யோசித்துப் பார்க்க வேண்டும். காரணம் நாம் தவறான பாதையிலே தீபம் ஏந்தி நின்றால் அது வருங்காலச் சந்ததியரை நல்வழிக்கு இட்டுச்செல்லா.
பெயர் பலகைகளில் தமிழ் இல்லாதது குறித்து சிலர் வருத்தப்படுகின்றனர் என்று முரசொலி குறிப்பிட்டிருந்தது. இவர் களுக்கு நான் சொல்லிக் கொள்வது ஒன்றுதான். நமது பிள்ளைகளின் நாவிலும் ஏட்டிலும் தமிழ் தங்கிவிட்டால், பெயர் பலகைகளில் தமிழ் இருக்கவேண்டிய அவசியமில்லை.