fontsize: 60% 70% 80% 90%

தலையங்கம் (செவ்வாய் தோறும்)

சட்டம் வலியுறுத்தும் தந்தையின் பொறுப்பு

தாயோடு சோறு போகும் தந்தையோடு கல்வி போகும் என்பது வாய்மொழி.
ஒரு பிள்ளையின் வளர்ச்சியில் தாய், தந்தை இருவருமே முக்கிய பங்கு வகிக்கின்றனர்.
குழந்தைக்கு உணவூட்டி, நல்லபடியாக வளர்க்கும் பொறுப்பைப் பாரம்பரியமாகத் தாய் மேற்கொள்கிறார்.
குழந்தையின் கல்வி மற்றும் சமூக அறிவு சார்ந்த வளர்ச்சிக்கு தந்தை பொறுப்பாகிறார். இதுவும் வழிவழியாக வந்த வழமை. ஏனெனில் பொதுவாக பொருளீட்டுவது தந்தையின் கடமையாக இருந்துள்ளது. ஒரு பிள்ளை கல்வி மற்றும் ஏனைய துறைகளில் வளர்ச்சி அடைய பொருளாதார ஆதரவும் தேவைப்படுகிறது.

வாய்ப்பு வாசல் கதவைத் தட்டுகிறது

நாட்டின் மக்கள் அனைவரும் வாழ்க்கையில் சிறக்க சிங்கப்பூர் தொடர்ந்து வாய்ப்புகளை உருவாக்கித் தந்துள்ளது.
அந்த வாய்ப்புகளை இதுவரை தவற விட்டவர்களுக்கும் வாழ்வில் மேலும் உயர விரும்புவர்களுக்கும் அருமையான ஒரு சந்தர்ப்பத்தை அளிக்கிறது இந்த ஆண்டின் வரவு செலவுத் திட்டம்.
இது ஓராண்டுக்கான திட்டம் மட்டுமல்ல. சிங்கப்பூரின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கான
10 ஆண்டுத் திட்டம்.

இலக்கை நோக்கி

இந்திய மாணவர்கள் கணிதம், அறிவியல் பாடங்களில் பின்தங்கி இருப்பதை சுட்டிக்காட்டி மீண்டும் கவலை தெரிவித்திருக்கிறார் அமைச்சர் டாக்டர் பாலாஜி சதாசிவன்.
இந்திய மாணவர்களுக்கு கணக்கு பல காலமாகவே பிரச்சினையாக உள்ளது. சிண்டாவின் ஸ்டெப் துணைப்பாட வகுப்பு போன்ற முயற்சிகளால் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. என்றாலும் தேசிய சராசரியுடன் ஒப்பிட கணித பாடத்தில் இன்னமும் 10% பின்தங்கிய நிலையிலேயே இந்திய மாணவர்களின் தேர்ச்சி உள்ளது.
இந்திய மாணவர்கள் சிலரின் பின்தங்கிய நிலைக்கு குடும்பச் சூழலும் ஒரு காரணமாக இருக்கிறது.

வியப்பும் நம்பிக்கையும் நிறைந்த மாபெரும் வளர்ச்சித் திட்டம்

பத்து ஆண்டுகளில் சிங்கப்பூர் எதிர்கொள்ளவிருக்கும் சவால்களைச் சமாளிக்கவும் போட்டித்தன்மையை அதிகரிக்கவும் எட்டு மாதங்களுக்கு முன் பொருளியல் உத்திகள் குழுவை அரசு நியமித்தது.
புதிய யுகம், புதிய சூழல், புதிய உலக நிலவரங்களுக்கு ஏற்ப சிங்கப்பூர் புதுத் தெம்பை ஏற்றிக் கொண்டு அடுத்த கட்ட முன்னேற்றத்துக்கு ஆயத்தமாவதற்காக இந்தக் குழு நியமிக்கப்பட்டது.
நிதி அமைச்சர் தர்மன் சண்முகரத்னத்தின் தலைமையில் பொருளியல் உத்திகள் குழு முனைப்புடன் செயலாற்றி பரிந்துரைகளை ஒரு மாபெரும் திட்டமாகவே வெளியிட்டுள்ளது.

வளம் பெருக திறன் பெருக வேண்டும்

பொருளியல் நெருக்கடிக்குப் பிறகான உலகப் பொருளியல் சூழல் மிகவும் மாறுபட்டது.
முதலீடுகள், சந்தைகள், தொழில்கள், ஊழியரணி, வேலை முறைகள் அனைத்திலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
புதிய உலகின் புதிய பொருளியலில் வெற்றி பெற சிங்கப்பூர் புதிய உத்திகளைக் கையாள வேண்டியுள்ளது.
பொருளியல் வளர்ச்சிக்கு சிங்கப்பூரின் தலைவர்கள் வலியுறுத்திக் கூறும் வழி முறை, உற்பத்தித் திறனை அதிகரிப்பது.
பிரதமர் லீ சியன் லூங்கும், மூத்த அமைச்சர் கோ சோக் டோங்கும் உற்பத்தித் திறனை அதிகரிக்க வேண்டிய அவசியம் பற்றி கடந்த இரு நாட்களாகப் பேசியுள்ளனர்

விளையாட்டே பயங்கரவாதத்துக்கு அடிபணியாதே

அரசியல்வாதிகள், புகழ்பெற்ற கட்டடங்கள், சொத்துகள், பொதுமக்கள் ஆகியோரைக் குறி வைத்து தாக்கிக் கொண்டிருந்த பயங்கரவாதிகள், இப்போது விளையாட்டாளர்களின் பக்கம் தங்கள் கவனத்தைத் திருப்பி உள்ளனர்.
ஆக அண்மையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று ஆப்பிரிக்க நாடுகள் கிண்ண காற்பந்துப் போட்டிகள் நடைபெறும் அங்கோலாவின் கபிண்டா எனும் இடத்துக்குச் செல்லும் வழியில் டோகோ காற்பந்துக் குழுவின் மீது அங்கோலாவின் தீவிரவாதக் குழு ஒன்று துப்பாக்கித் தாக்குதல் நடத்தியது.

எழுத்தும் வேண்டும் எண்ணும் வேண்டும்

எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும் என்பார்கள்.
ஒருவர் வாழ்க்கைப் பாதையில் வெற்றி நடைபோட மொழி அறிவு, கணித அறிவு ஆகிய இரு கண்களுமே தேவை.
கல்வி அமைச்சு அண்மையில் வெளியிட்ட 1999 முதல்
2008ம் ஆண்டு வரையிலான இனவாரியான மாணவர் தேர்ச்சி அறிக்கையின்படி இந்திய மாணவர்கள் ஆங்கிலம், தாய் மொழிகளில் சிறந்த தேர்ச்சியைப் பெற்று வருகின்றனர்.
தொடக்கப் பள்ளி இறுதித் தேர்வு, ‘ஓ’ நிலை, ‘ஏ’ நிலைத் தேர்வுகளில் ஆங்கில மொழி மற்றும் பொது அறிவுத் தேர்வில் தேசிய நிலையின் மொத்தத் தேர்ச்சியின் அளவைவிட அதிக தேர்ச்சியை இந்தியர்கள் பெற்றுள்ளனர்.

கோபன்ஹேகன் வழிவகுக்கும்

தொழில் புரட்சி, தொழில்நுட்பப் புரட்சிகள் உலகைத் தலைகீழாக மாற்றிவிட்டன. அதனால் மனித இனம் அதிக ஆயுள், வசதியான வாழ்க்கை உட்பட கோடானுகோடி நன்மை அடைந்துள்ளது.

ஆனால் இந்தப் புரட்சிகள் வேண்டாத விளைவுகளையும் ஏற்படுத்தியுள்ளன.
அவற்றில் முக்கியமானது பூமியைச் சூழ்ந்துள்ள காற்று மண்டலம் மாசு பட்டு வருவது.

காற்று மண்டலத்தில் கரிமக் கழிவுகள் அதிகரித்து வருவதால் பூமியின் வெப்பநிலையும் உயர்ந்து வருகிறது.
வெப்பநிலை அதிகரித்ததால் வட துருவத்திலும் தென் துருவத்திலும் உள்ள பனி உருகத் தொடங்கியுள்ளது.
இதனால் கடல் நீர் மட்டம் உயர்ந்துகொண்டே வருகிறது.

அனைவருக்கும் வீடு

குடிமக்கள் அனைவருக்கும் குடியிருக்க வீடு என்ற நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது பொது வீடமைப்புத் திட்டம்.
இத்திட்டத்தின் கீழ் மக்களுக்குக் கட்டுப்படியாகும் விலையில் வீடுகளைக் கட்டித் தந்துள்ளது வீடமைப்பு வளர்ச்சிக் கழகம்.
வீவக வீடுகள் மக்களுக்கு வசதியான வாழ்க்கையைத் தந்ததுடன், வளத்தைப் பெருமளவு பெருக்கவும் உதவியது. சிங்கப்பூரர்களின் சொத்து மதிப்பைக் கூட்டியது.
சிங்கப்பூர் மக்களில் கிட்டத் தட்ட 95 விழுக்காட்டினர் சொந்த வீட்டைப் பெற்றுள்ளனர். இந்தச் சொத்து முதலீட்டை தங்களது ஓய்வு காலத் தேவைக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என பிரதமர் லீ சியன் லூங் இரு ஆண்டுகளுக்கு முன் கூறினார்.

அமைதிக்குப் பாடுபடும் ஆயுதக் கரம்

உலக வரைபடத்தில் ஒரு புள்ளி அளவுகூட இல்லை என்றாலும் மனிதாபிமானம் என்று வரும்போது மலை போன்று விஸ்வரூபம் எடுக்கும் வழமை சிங்கப்பூரிடம் உண்டு.
உலகமயமாகி ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்து விட்ட நடப்பு உலகில், யாரையும் பகைத்துக் கொள்ளாத வெளியுறவுக் கொள்கையைக் கொண்டது சிங்கப்பூர்.
அது, தான் மட்டும் வாழ்ந்தால் போதாதென்று சகோதரத்துவச் சகவாழ்வில் நாட்டம் கொண்டுள்ளது.
இவற்றோடு மனிதாபிமானப் பணிகளில் ‘செயற்கரிய செய்யும் பெரியவராகத்’ திகழ்கிறது சிங்கப்பூர்.
இந்தியா, தாய்லாந்து இந்தோனீசியாவில் சுனாமி, இந்தோனீசியா, சீனாவில் நிலநடுக்கப் பேரிடர்கள்;

Syndicate content
Copyright © 2006 Singapore Press Holdings Ltd. Co. Regn. No. 198402868E. All rights reserved.
82, Genting Lane, Singapore 349567 Tel: 6388 3838