தொழில் புரட்சி, தொழில்நுட்பப் புரட்சிகள் உலகைத் தலைகீழாக மாற்றிவிட்டன. அதனால் மனித இனம் அதிக ஆயுள், வசதியான வாழ்க்கை உட்பட கோடானுகோடி நன்மை அடைந்துள்ளது.
ஆனால் இந்தப் புரட்சிகள் வேண்டாத விளைவுகளையும் ஏற்படுத்தியுள்ளன.
அவற்றில் முக்கியமானது பூமியைச் சூழ்ந்துள்ள காற்று மண்டலம் மாசு பட்டு வருவது.
காற்று மண்டலத்தில் கரிமக் கழிவுகள் அதிகரித்து வருவதால் பூமியின் வெப்பநிலையும் உயர்ந்து வருகிறது.
வெப்பநிலை அதிகரித்ததால் வட துருவத்திலும் தென் துருவத்திலும் உள்ள பனி உருகத் தொடங்கியுள்ளது.
இதனால் கடல் நீர் மட்டம் உயர்ந்துகொண்டே வருகிறது.